|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோகாப்பர் (1)
யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு - குறள் 13:7
TOP
சோர்விலன் (1)
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள் 65:7
TOP
சோர்வு (7)
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள் 6:6
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள் 54:1
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு - குறள் 65:2
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு - குறள் 93:10
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 105:4
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் - குறள் 105:6
TOP
சோர்வுபடும் (1)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
TOP
சோரவிடல் (1)
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் - குறள் 82:8
TOP
சோரா (1)
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் - குறள் 69:9
TOP
சோரும் (2)
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:4
TOP
|
|
|