நற்றிணை (251 - 300)
# மதுரை பெருமருதிள நாகனார் # 251 குறிஞ்சி நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் பிணி முதல் அரைய பெரும் கல் வாழை கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் நன் மலை நாடனை நயவா யாம் அவன் நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி 5 நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும் தோடு இடம் கோடாய் கிளர்ந்து 10 நீடினை விளைமோ வாழிய தினையே # அம்மெய்யன் நாகனார் # 252 பாலை உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த 5 வினை இடை விலங்கல போலும் புனை சுவர் பாவை அன்ன பழி தீர் காட்சி ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் 10 நன் நா புரையும் சீறடி பொம்மல் ஓதி புனை_இழை குணனே # கபிலர் # 253 குறிஞ்சி புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து எனவ கேளாய் நினையினை நீ நனி உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள் 5 பேர் இசை உருமொடு மாரி முற்றிய பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி பலவு உறு குன்றம் போல பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே # உலோச்சனார் # 254 நெய்தல் வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் துனி இல் நன் மொழி இனிய கூறியும் சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப 5 உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த நீல கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் துணை இலை தமியை சேக்குவை அல்லை நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி 10 வானம் வேண்டா உழவின் எம் கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே # ஆலம்பேரி சாத்தனார் # 255 குறிஞ்சி கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் வய களிறு பொருத வாள் வரி உழுவை கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ 5 மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் திரு மணி அரவு தேர்ந்து உழல 10 உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே # பாலை பாடிய பெருங்கடுங்கோ # 256 பாலை நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி 5 களவுடன் கமழ பிடவு தளை அவிழ கார் பெயல் செய்த காமர் காலை மட பிணை தழீஇய மா எருத்து இரலை காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த கண் கவர் வரி நிழல் வதியும் 10 தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே # வண்ணக்கன் சோருமருங்குமரனார் # 257 குறிஞ்சி விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை 5 பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் நன் மலை நாட நயந்தனை அருளாய் இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி கடு மா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி நோகோ யானே 10 # நக்கீரர் # 258 நெய்தல் பல் பூ கானல் பகற்குறி மரீஇ செல்வல் கொண்க செறித்தனள் யாயே கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த 5 கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் 10 நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே # கொற்றம் கொற்றனார் # 259 குறிஞ்சி யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி 5 சாரல் ஆரம் வண்டு பட நீவி பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி அரிய போல காண்பேன் விரி திரை கடல் பெயர்ந்து அனைய ஆகி புலர் பதம் கொண்டன ஏனல் குரலே 10 # பரணர் # 260 மருதம் கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை பழன தாமரை பனி மலர் முணைஇ தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர வெய்யை போல முயங்குதி முனை எழ 5 தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே 10 # சேந்தன் பூதனார் # 261 குறிஞ்சி அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து 5 களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை எருவை நறும் பூ நீடிய பெரு வரை சிறு நெறி வருதலானே 10 # பெருந்தலை சாத்தனார் # 262 பாலை தண் புன கருவிளை கண் போல் மா மலர் ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் 5 பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் குவளை நாறும் கூந்தல் தே மொழி இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் அரிது மன்று அம்ம இன்மையது இளிவே 10 # இளவெயினனார் # 263 நெய்தல் பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் இறை வரை நில்லா வளையும் மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு கடும் சூல் வயவொடு கானல் எய்தாது 5 கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு உரைத்த தோழி உண்கண் நீரே 10 # ஆவூர் காவிதிகள் சாதேவனார் # 264 பாலை பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பு இன் காலை அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர 5 ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த ஆ பூண் தெண் மணி இயம்பும் ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே # பரணர் # 265 குறிஞ்சி இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத்து அன்ன ஆர மார்பின் 5 சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன மாரி வண் மகிழ் ஓரி கொல்லி கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் நம்_வயினானே # கச்சிப்பேட்டு இளந்தச்சனார் # 266 முல்லை கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் அகலுள் ஆங்கண் சீறூரேமே அதுவே சாலும் காமம் அன்றியும் 5 எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு இரீஇய_காலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் நிலையே # கபிலர் # 267 நெய்தல் நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் 5 தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் 10 இவை மகன் என்னா அளவை வய_மான் தோன்றல் வந்து நின்றனனே # வெறி பாடிய காமக்கண்ணியார் # 268 குறிஞ்சி சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு 5 காதல் செய்தவும் காதல் அன்மை யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே # எயினந்தை மகன் இளங்கீரனார் # 269 பாலை குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி 5 திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் சிறு பல் குன்றம் இறப்போர் அறிவார் யார் அவர் முன்னியவ்வே # பரணர் # 270 நெய்தல் தடம் தாள் தாழை குடம்பை நோனா தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி உருள் பொறி போல எம் முனை வருதல் அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா 5 பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே 10 மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே # 271 பாலை இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் 5 வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு 10 மா இரும் தாழி கவிப்ப தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே # முக்கல் ஆசான் நல்வெள்ளையார் # 272 நெய்தல் கடல் அம் காக்கை செ வாய் சேவல் படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி 5 பூ உடை குட்டம் துழவும் துறைவன் நல்காமையின் நசை பழுது ஆக பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் அம்பல் மூதூர் அலர்ந்து நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே 10 # மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் # 273 குறிஞ்சி இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் வெம்மையின் தான் வருத்து_உறீஇ நம்_வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என வேலன் உரைக்கும் என்ப ஆகலின் 5 வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் குன்ற நாடனை உள்ளு-தொறும் நெஞ்சு நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே 10 # காவன் முல்லை பூதனார் # 274 பாலை நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் 5 எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு இரும் புலி வழங்கும் சோலை பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே # அம்மூவனார் # 275 நெய்தல் செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற காணார் முதலொடு போந்து என பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை தன் உறு விழுமம் அறியா மென்மெல தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் 5 பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து அறன் இலாளன் புகழ என் பெறினும் வல்லேன்-மன் தோழி யானே # தொல் கபிலர் # 276 குறிஞ்சி கோடு துவையா கோள் வாய் நாயொடு காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு வயவர் மகளிர் என்றி ஆயின் குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் 5 கான மஞ்ஞை கட்சி சேக்கும் கல் அகத்தது எம் ஊரே செல்லாது சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை வாங்கு அமை பழுனிய நறவு உண்டு வேங்கை முன்றில் குரவையும் கண்டே 10 # தும்பி சேர் கீரனார் # 277 பாலை கொடியை வாழி தும்பி இ நோய் படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என மெய்யே கருமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை 5 நுண் முள் வேலி தாதொடு பொதுளிய தாறு படு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர் 10 வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய் சென்று அவண் வரவே # உலோச்சனார் # 278 நெய்தல் படு காழ் நாறிய பராஅரை புன்னை அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ பொன்னின் அன்ன தாது படு பன் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை 5 இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி குளம்பினும் சே_இறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே # கயமனார் # 279 பாலை வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு 5 பொருத யானை புல் தாள் ஏய்ப்ப பசி பிடி உதைத்த ஓமை செம் வரை வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் சிலம்பு கழீஇய செல்வம் 10 பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே # பரணர் # 280 மருதம் கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் தண் துறை ஊரன் தண்டா பரத்தமை புலவாய் என்றி தோழி புலவேன் 5 பழன யாமை பாசடை புறத்து கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் நன் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தா மாறே 10 # கழார் கீரன் எயிற்றியார் # 281 பாலை மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் அடங்கா சொன்றி அம் பல் யாணர் 5 விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப மழை அமைந்து_உற்ற மால் இருள் நடுநாள் தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி துஞ்சாம் ஆகலும் அறிவோர் 10 அன்பு இலர் தோழி நம் காதலோரே # நல்லூர் சிறு மேதாவியார் # 282 குறிஞ்சி தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட நன் நுதல் சாய படர் மலி அரு நோய் காதலன் தந்தமை அறியாது உணர்த்த அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் 5 கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை ஆடு மழை மங்குலின் மறைக்கும் நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே # மதுரை மருதன் இளநாகனார் # 283 நெய்தல் ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை 5 முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே # தேய்புரி பழங்கயிற்றினார் # 284 பாலை புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம் செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் செய்_வினை முடியாது எவ்வம் செய்தல் 5 எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என உறுதி தூக்கா தூங்கி அறிவே சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய் புரி பழம் கயிறு போல 10 வீவது-கொல் என் வருந்திய உடம்பே # மதுரை கொல்லன் வெண்ணாகனார் # 285 குறிஞ்சி அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் இரவின் வருதல் அன்றியும் உரவு கணை வன் கை கானவன் வெம் சிலை வணக்கி உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட 5 வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட நடு கால் குரம்பை தன் குடி_வயின் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே நன்றால் வாழி தோழி என்றும் அயலோர் அம்பலின் அகலான் 10 பகலின் வரூஉம் எறி புனத்தானே # துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் # 286 பாலை ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன அத்த குமிழின் ஆய் இதழ் அலரி கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து 5 இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணி பெற வரற்கும் அன்றோ தோழி அவர் சென்ற திறமே # உலோச்சனார் # 287 நெய்தல் விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த நல் எயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போல கொடும் கழி பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் 5 நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை அருகாது ஆகி அவன்_கண் நெஞ்சம் நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும் தேர் மணி தெள் இசை-கொல் என 10 ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே # குளம்பனார் # 288 குறிஞ்சி அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் குன்ற நாடன் பிரிவின் சென்று நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை 5 செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் சிறு கிளி கடிகம் சென்றும் இ நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே 10 # மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார் # 289 முல்லை அம்ம வாழி தோழி காதலர் நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே வானம் நளி கடல் முகந்து செறி_தக இருளி கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி 5 கார் செய்து என் உழையதுவே ஆயிடை கொல்லை கோவலர் எல்லி மாட்டிய பெரு மர ஒடியல் போல அருள் இலேன் அம்ம அளியேன் யானே # மதுரை மருதன் இளநாகனார் # 290 மருதம் வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே 5 நீயே பெரு நலத்தையே அவனே நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப மகன் என்னாரே # கபிலர் # 291 நெய்தல் நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு குப்பை வெண் மணல் ஏறி அரைசர் ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் 5 கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து எல்லி தரீஇய இன நிரை பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே # நல்வேட்டனார் # 292 குறிஞ்சி நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை 5 ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் கராஅம் பேணாய் இரவரின் வாழேன் ஐய மை கூர் பனியே # கயமனார் # 293 பாலை மணி குரல் நொச்சி தெரியல் சூடி பலி கள் ஆர்கை பார் முது குயவன் இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் 5 பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே # புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் # 294 குறிஞ்சி தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ மாயம் அன்று தோழி வேய் பயின்று எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ 5 கொன்ற யானை கோடு கண்டு அன்ன செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் சிலம்பு உடன் கமழும் சாரல் இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே # ஔவையார் # 295 நெய்தல் முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை வேறு பல் நாட்டு கால் தர வந்த 5 பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் இள நலம் இல்_கடை ஒழிய சேறும் வாழியோ முதிர்கம் யாமே # குதிரை தறியனார் # 296 பாலை என் ஆவது-கொல் தோழி மன்னர் வினை வல் யானை புகர் முகத்து அணிந்த பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் ஏ கல் மீமிசை மே தக மலரும் 5 பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ செல்ப என்ப காதலர் ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே # மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் # 297 குறிஞ்சி பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை 5 நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் மெல்ல வந்து நல் அகம் பெற்றமை மையல் உறுகுவள் அன்னை 10 ஐயம் இன்றி கடும் கவவினளே # விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் # 298 பாலை வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட எருவை சேவல் கிளை_வயின் பெயரும் அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை 5 பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார் பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் ஒருமை செப்பிய அருமை வான் முகை 10 இரும் போது கமழும் கூந்தல் பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே # வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் # 299 நெய்தல் உரு கெழு யானை உடை கோடு அன்ன ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண் 5 நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ வில் எறி பஞ்சி போல மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே # 300 மருதம் சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் 5 முன்கடை நிறீஇ சென்றிசினோனே நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 10 பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே |
---|