குறுந்தொகை (201 - 250)
# 201 குறிஞ்சி அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு நீல மென் சிறை வள் உகிர் பறவை நெல்லி அம் புளி மாந்தி அயலது முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் கழை நிவந்து ஓங்கிய சோலை மலை கெழு நாடனை வரும் என்றோளே # 202 மருதம் நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே # அள்ளூர் நன்முல்லை # 203 மருதம் மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணின் காண நண்ணு_வழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே # நெடும்பல்லியத்தன் # 204 குறிஞ்சி காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் மூதா தைவந்த ஆங்கு விருந்தே காமம் பெரும் தோளோயே # மிளை பெரும் கந்தன் # 205 நெய்தல் மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன் யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே # உலோச்சன் # 206 குறிஞ்சி அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி அன்ன இனியோள் குணனும் இன்ன இன்னா அரும் படர் செய்யும் ஆயின் உடன் உறைவு அரிதே காமம் குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே # ஐயூர் முடவன் # 207 பாலை செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று அத்த ஓமை அம் கவட்டு இருந்த இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி நல் அடி பொறிப்ப தாஅய் சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே # உறையன் # 208 குறிஞ்சி ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார் நின்று கொய மலரும் நாடனொடு ஒன்றேன் தோழி ஒன்றினானே # கபிலர் # 209 பாலை சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் மற புலி குருளை கோள் இடம் கரக்கும் இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் கடற்றில் கலித்த முட சினை வெட்சி தளை அவிழ் பல் போது கமழும் மை இரும் கூந்தல் மடந்தை நட்பே # பாலை பாடிய பெருங்கடுங்கோ # 210 முல்லை திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வர கரைந்த காக்கையது பலியே # காக்கை பாடினியார் நச்செள்ளையார் # 211 பாலை அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும் தும்பி நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே # காவன் முல்லை பூதனார் # 212 நெய்தல் கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர் தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப காண வந்து நாண பெயரும் அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே # நெய்தல் கார்க்கியன் # 213 பாலை நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென கவை தலை முது கலை காலின் ஒற்றி பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி நின்று வெயில் கழிக்கும் என்ப நம் இன் துயில் முனிநர் சென்ற ஆறே # கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன் # 214 குறிஞ்சி மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி செயலை முழு_முதல் ஒழிய அயலது அரலை மாலை சூட்டி ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே # கூடலுலுர் கிழார் # 215 பாலை படரும் பைபய பெயரும் சுடரும் என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ கொடு வரி இரும் புலி காக்கும் நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே # மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் # 216 பாலை அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை வாடா வள்ளி அம் காடு இறந்தோரே யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே அன்னள் அளியள் என்னாது மா மழை இன்னும் பெய்யும் முழங்கி மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே # கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன் # 217 குறிஞ்சி தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற ஐது ஏகு அம்ம யானே கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே # தங்கால் முடக்கொல்லனார் # 218 பாலை விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு கடனும் பூணாம் கை நூல் யாவாம் புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று இமைப்பு வரை அமையா நம்_வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே # கொற்றன் # 219 நெய்தல் பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே செறிவும் சேண் இகந்தன்றே அறிவே ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே வல்லா கூறி இருக்கும் அள் இலை தடவு நிலை தாழை சேர்ப்பற்கு இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே # வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் # 220 முல்லை பழ மழை கலித்த புது புன வரகின் இரலை மேய்ந்த குறை தலை பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் வண்டு சூழ் மாலையும் வாரார் கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே # ஒக்கூர் மாசாத்தியார் # 221 முல்லை அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறி உடை கையர் மறி இனத்து ஒழிய பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடு உடை இடை_மகன் சென்னி சூடிய எல்லாம் சிறு பசு முகையே # உறையூர் முதுகொற்றன் # 222 குறிஞ்சி தலை புணை கொளினே தலை புணை கொள்ளும் கடை புணை கொளினே கடை புணை கொள்ளும் புணை கைவிட்டு புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் துளி தலை தலைஇய தளிர் அன்னோளே # சிறைக்குடி ஆந்தையார் # 223 குறிஞ்சி பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் நல்லோர் நல்ல பலவால் தில்ல தழலும் தட்டையும் முறியும் தந்து இவை ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி அன்னை ஓம்பிய ஆய் நலம் என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே # மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகன் # 224 பாலை கவலை யாத்த அவல நீள் இடை சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா நோயினும் நோய் ஆகின்றே கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே # கூவன் மைந்தன் # 225 குறிஞ்சி கன்று தன் பய முலை மாந்த முன்றில் தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே # கபிலர் # 226 நெய்தல் பூவொடு புரையும் கண்ணும் வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என மதி மயக்கு_உறூஉம் நுதலும் நன்றும் நல்ல-மன் வாழி தோழி அல்கலும் தயங்கு திரை பொருத தாழை வெண் பூ குருகு என மலரும் பெரும் துறை விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே # மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் # 227 நெய்தல் பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து இவண் தேரோன் போகிய கானலானே # ஓத ஞானி # 228 நெய்தல் வீழ் தாழ் தாழை ஊழ்_உறு கொழு முகை குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து நெடும் சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே # செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் # 229 பாலை இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் துணை மலர் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே # மோதாசனார் # 230 நெய்தல் அம்ம வாழி தோழி கொண்கன் தான் அது துணிகுவன் அல்லன் யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ வய சுறா வழங்கு நீர் அத்தம் தவ சில் நாளினன் வரவு அறியானே # அறிவுடை நம்பி # 231 மருதம் ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் ஏதிலாளர் சுடலை போல காணா கழிப-மன்னே நாண் அட்டு நல் அறிவு இழந்த காமம் வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே # பாலை பாடிய பெருங்கடுங்கோ # 232 பாலை உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ மரல் புகா அருந்திய மா எருத்து இரலை உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல் துஞ்சும் மா இரும் சோலை மலை இறந்தோரே # ஊண்பித்தை # 233 முல்லை கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரை கோள் அறியா சொன்றி நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே # பேயன் # 234 முல்லை சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து எல் அறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கியோரே குடுமி கோழி நெடு நகர் இயம்பும் பெரும் புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணை இலோர்க்கே # மிளைப்பெரும் கந்தன் # 235 பாலை ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி கல் உயர் நண்ணியதுவே நெல்லி மரை_இனம் ஆரும் முன்றில் புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே # மாயேண்டன் # 236 நெய்தல் விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய் படு சினை வம்ப நாரை சேக்கும் தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே # நரிவெரூஉத்தலையார் # 237 பாலை அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇ நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் சேய அம்ம இருவாம் இடையே மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே # அள்ளூர் நன்முல்லை # 238 மருதம் பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே # குன்றியன் # 239 குறிஞ்சி தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே # ஆசிரியன் பெருங்கண்ணன் # 240 முல்லை பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி வாடை வந்ததன் தலையும் நோய் பொர கண்டிசின் வாழி தோழி தெண் திரை கடல் ஆழ் கலத்தின் தோன்றி மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே # கொல்லின் அழிசி # 241 குறிஞ்சி யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் கெழுதகைமையின் அழுதன தோழி கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏம பூசல் விண் தோய் விடர்_அகத்து இயம்பும் குன்ற நாடன் கண்ட எம் கண்ணே # கபிலர் # 242 முல்லை கான கோழி கவர் குரல் சேவல் ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் சீறூரோளே மடந்தை வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும் சேந்து வரல் அறியாது செம்மல் தேரே # குழற்றத்தன் # 243 நெய்தல் மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே # நம்பி குட்டுவன் # 244 குறிஞ்சி பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும ஓரி முருங்க பீலி சாய நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே # கண்ணனார் # 245 நெய்தல் கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்ததனினும் நனி இன்னாதே வாள் போல் வாய கொழு மடல் தாழை மாலை வேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம்புலம்பன் கொடுமை பல்லோர் அறிய பரந்து வெளிப்படினே # மாலை மாறன் # 246 நெய்தல் பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை களிற்று செவி அன்ன பாசடை மயக்கி பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு ஓரும் அலைக்கும் அன்னை பிறரும் பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் இளையரும் மடவரும் உளரே அலையா தாயரொடு நற்பாலோரே # கபிலர் # 247 குறிஞ்சி எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் திறவோர் செய்_வினை அறவது ஆகும் கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை வீயா மென் சினை வீ உக யானை ஆர் துயில் இயம்பும் நாடன் மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே # சேந்தம்பூதன் # 248 நெய்தல் அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி ஈங்கு ஆகின்றே தோழி கானல் ஆடு அரை புதைய கோடை இட்ட அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை குறிய ஆகும் துறைவனை பெரிய கூறி யாய் அறிந்தனளே # உலோச்சன் # 249 குறிஞ்சி இன மயில் அகவும் மரம் பயில் கானத்து நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு குன்றம் நோக்கினென் தோழி பண்டை அற்றோ கண்டிசின் நுதலே # கபிலர் # 250 பாலை பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு இரலை நன் மான் நெறி முதல் உகளும் மாலை வாரா அளவை கால் இயல் கடு மா கடவு-மதி பாக நெடு நீர் பொரு கயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி தெருமரல் உயவே # நாமலார் மகன் இளங்கண்ணன் |
---|