குறுந்தொகை (51 - 100)
# குன்றியனார் # 51 நெய்தல் கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் நூல் அறு முத்தின் காலொடு பாறி துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை யானும் காதலென் யாயும் நனி வெய்யள் எந்தையும் கொடீஇயர் வேண்டும் 5 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே # பனம்பாரனார் # 52 குறிஞ்சி ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே 5 # கோப்பெருஞ்சோழன் # 53 மருதம் எம் அணங்கினவே மகிழ்ந முன்றில் நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல் வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் செந்நெல் வான் பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை 5 நேர் இறை முன்கை பற்றி சூர் அர_மகளிரோடு உற்ற சூளே # மீனெறி தூண்டிலார் # 54 குறிஞ்சி யானே ஈண்டையேனே என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ கான யானை கை விடு பசும் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே 5 # நெய்த கார்க்கியர் # 55 நெய்தல் மா கழி மணி பூ கூம்ப தூ திரை பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட்டு ஆகும் சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே 5 # சிறைக்குடி ஆந்தையார் # 56 பாலை வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர் வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் வருக தில் அம்ம தானே அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே 5 # சிறைக்குடி ஆந்தையார் # 57 நெய்தல் பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து 5 ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே # வெள்ளிவீதியார் # 58 குறிஞ்சி இடிக்கும் கேளிர் நும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல 5 பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே # மோசிகீரனார் # 59 பாலை பதலை பாணி பரிசிலர் கோமான் அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் சுரம் பல விலங்கிய அரும் பொருள் 5 நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே # பரணர் # 60 குறிஞ்சி குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் நல்கார் நயவார் ஆயினும் 5 பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே # தும்பிசேர்கீரன் # 61 மருதம் தச்சன் செய்த சிறு மா வையம் ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் பொய்கை ஊரன் கேண்மை 5 செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே # சிறைக்குடி ஆந்தையார் # 62 குறிஞ்சி கோடல் எதிர் முகை பசு வீ முல்லை நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே 5 # உகாய்க்குடி கிழார் # 63 பாலை ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு அம் மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே # கருவூர் கதப்பிள்ளை # 64 முல்லை பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என புன் தலை மன்றம் நோக்கி மாலை மட கண் குழவி அலம்வந்து அன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர் தோழி சேய்நாட்டோரே 5 # கோவூர் கிழார் # 65 முல்லை வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் இன்புறு துணையொடு மறுவந்து உகள தான் வந்தன்றே தளி தரு தண் கார் வாராது உறையுநர் வரல் நசைஇ வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே 5 # கோவர்த்தனார் # 66 முல்லை மடவ மன்ற தடவு நிலை கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதர கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியை கார் என மதித்தே 5 # அள்ளூர் நன்முல்லை # 67 பாலை உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே 5 # அள்ளூர் நன்முல்லை # 68 குறிஞ்சி பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் அரும் பனி அற்சிரம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே # கடுந்தோட் கரவீரன் # 69 குறிஞ்சி கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என கைம்மை உய்யா காமர் மந்தி கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் 5 வாரல் வாழியோ வருந்துதும் யாமே # ஓரம்போகியார் # 70 குறிஞ்சி ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் சில மெல்லியவே கிளவி அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே 5 # கருவூர் ஓதஞானி # 71 பாலை மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் கல் கெழு கானவர் நல்கு_உறு மகளே # மள்ளனார் # 72 குறிஞ்சி பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே தே மொழி திரண்ட மென் தோள் மா மலை பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே 5 # பரணர் # 73 குறிஞ்சி மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல் வாழி தோழி நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய ஒன்றுமொழி கோசர் போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே 5 # விட்ட குதிரையார் # 74 குறிஞ்சி விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன் யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் வேனில் ஆன் ஏறு போல சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே 5 # படுமரத்து மோசிகீரனார் # 75 மருதம் நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண் கோட்டு யானை சோனை படியும் பொன் மலி பாடலி பெறீஇயர் யார் வாய் கேட்டனை காதலர் வரவே 5 # கிள்ளிமங்கலங்கிழார் # 76 குறிஞ்சி காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு செல்ப என்பவோ கல் வரை மார்பர் சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை பெரும் களிற்று செவியின் மான தைஇ தண் வரல் வாடை தூக்கும் 5 கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே # மதுரை மருதன் இளநாகனார் # 77 பாலை அம்ம வாழி தோழி யாவதும் தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் அரிய கானம் சென்றோர்க்கு 5 எளிய ஆகிய தட மென் தோளே # நக்கீரனார் # 78 குறிஞ்சி பெரு வரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய் கோடியர் முழவின் ததும்பி சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப நோ_தக்கன்றே காமம் யாவதும் நன்று என உணரார் மாட்டும் 5 சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே # குடவாயி கீரனக்கன் # 79 பாலை கான யானை தோல் நயந்து உண்ட பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை அலங்கல் உலவை ஏறி ஒய்யென புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும் அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் 5 சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்கு செல்லாது ஏகல் வல்லுவோரே # ஔவையார் # 80 மருதம் கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி 5 முனை ஆன் பெரு நிரை போல கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே # வடம வண்ணக்கன் பேரிசாத்தன் # 81 குறிஞ்சி இவளே நின் சொல் கொண்ட என் சொல் தேறி பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் 5 நிலவும் இருளும் போல புலவு திரை கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே # கடுவன் மள்ளன் # 82 குறிஞ்சி வார்_உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் கொழும் கொடி அவரை பூக்கும் 5 அரும் பனி அற்சிரம் வாராதோரே # வெண்பூதன் # 83 குறிஞ்சி அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும் தீம் பழம் தூங்கும் பலவின் ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே 5 # மோசிகீரன் # 84 பாலை பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே 5 # வடம வண்ணக்கன் தாமோதரன் # 85 மருதம் யாரினும் இனியன் பேர் அன்பினனே உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் நாறா வெண் பூ கொழுதும் 5 யாணர் ஊரன் பாணன் வாயே # வெண்கொற்றன் # 86 குறிஞ்சி சிறை பனி உடைந்த சே அரி மழை கண் பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் 5 நா நவில் கொடு மணி நல்கூர் குரலே # கபிலர் # 87 குறிஞ்சி மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் பசைஇ பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே 5 # மதுரை கதக்கண்ணன் # 88 குறிஞ்சி ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி தொன் முரண் சொல்லும் துன் அரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம் வடு நாணலமே தோழி நாமே 5 # பரணர் # 89 மருதம் பா அடி உரல பகு வாய் வள்ளை ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய 5 நல் இயல் பாவை அன்ன இ மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே # மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் # 90 குறிஞ்சி எற்றோ வாழி தோழி முற்றுபு கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி வரை இழி அருவி உண்துறை தரூஉம் 5 குன்ற நாடன் கேண்மை மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே # ஔவையார் # 91 மருதம் அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் தண் துறை ஊரன் பெண்டினை ஆயின் பல ஆகுக நின் நெஞ்சில் படரே ஓவாது ஈயும் மாரி வண் கை 5 கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி கொன் முனை இரவு ஊர் போல சில ஆகுக நீ துஞ்சும் நாளே # தாமோதரன் # 92 நெய்தல் ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து அளிய தாமே கொடும் சிறை பறவை இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த பிள்ளை உள்வாய் செரீஇய இரை கொண்டமையின் விரையுமால் செலவே 5 # அள்ளூர் நன்முல்லையார் # 93 மருதம் நன் நலம் தொலைய நலம் மிக சாஅய் இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ புலவி அஃது எவனோ அன்பு இலம்_கடையே # கதக்கண்ணன் # 94 முல்லை பெரும் தண் மாரி பேதை பித்திகத்து அரும்பே முன்னும் மிக சிவந்தனவே யானே மருள்வென் தோழி பானாள் இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே 5 அருவி மா மலை தத்த கருவி மா மழை சிலைதரும் குரலே # கபிலர் # 95 குறிஞ்சி மால் வரை இழிதரும் தூ வெள் அருவி கல் முகை ததும்பும் பன் மலர் சாரல் சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் நீர் ஓர் அன்ன சாயல் தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே 5 # அள்ளூர் நன்முல்லை # 96 குறிஞ்சி அருவி வேங்கை பெரு மலை நாடற்கு யான் எவன் செய்கோ என்றி யான் அது நகை என உணரேன் ஆயின் என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே # வெண்பூதி # 97 நெய்தல் யானே ஈண்டையேனே என் நலனே ஆனா நோயொடு கானலஃதே துறைவன் தம் ஊரானே மறை அலர் ஆகி மன்றத்தஃதே # கோக்குளமுற்றன் # 98 முல்லை இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர் துன்ன சென்று செப்புநர் பெறினே நன்று-மன் வாழி தோழி நம் படப்பை நீர் வார் பைம் புதல் கலித்த மாரி பீரத்து அலர் சில கொண்டே 5 # ஔவையார் # 99 முல்லை உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உண சென்று அற்று ஆங்கு 5 அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே # கபிலர் # 100 குறிஞ்சி அருவி பரப்பின் ஐவனம் வித்தி பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் வல் வில் ஓரி கொல்லி குட வரை 5 பாவையின் மடவந்தனளே மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே |
---|