புறநானூறு (101 - 150)
# 101 ஔவையார் ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் பல நாள் பயின்று பலரொடு செல்லினும் தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ இழை அணி யானை இயல் தேர் அஞ்சி அதியமான் பரிசில் பெறூஉம் காலம் நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் கோட்டு இடை வைத்த கவளம் போல கையகத்தது அது பொய் ஆகாதே அருந்த ஏமாந்த நெஞ்சம் வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே # 102 ஔவையார் எருதே இளைய நுகம் உணராவே சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே அவல் இழியினும் மிசை ஏறினும் அவணது அறியுநர் யார் என உமணர் கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் நாள் நிறை மதியத்து அனையை இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே # 103 ஔவையார் ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என சுரன் முதல் இருந்த சில் வளை விறலி செல்வை ஆயின் சேணோன் அல்லன் முனை சுட எழுந்த மங்குல் மா புகை மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி பொழுது இடைப்படாஅ புலரா மண்டை மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப அலத்தல் காலை ஆயினும் புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே # 104 ஔவையார் போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ நுண் பல் கருமம் நினையாது இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே # 105 கபிலர் சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி தடவு வாய் கலித்த மா இதழ் குவளை வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்_பால் பாடினை செலினே #106 நல்லவும் தீயவும் அல்ல குவி இணர் புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும் கடவன் பாரி கைவண்மையே #107 பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவன் புகழ்வர் செம் நா புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே #108 குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி ஆரம் ஆதலின் அம் புகை அயலது சாரல் வேங்கை பூ சினை தவழும் பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு பாரியும் பரிசிலர் இரப்பின் வாரேன் என்னான் அவர் வரையன்னே #109 அளிதோ தானே பாரியது பறம்பே நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே வான் கண் அற்று அவன் மலையே வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே #110 கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே #111 அளிதோ தானே பேர் இரும் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே நீலத்து இணை மலர் புரையும் உண்கண் கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே # 112 பாரி மகளிர் அற்றை திங்கள் அ வெண் நிலவில் எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் இற்றை திங்கள் இ வெண் நிலவில் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே # 113 கபிலர் மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி நட்டனை-மன்னோ முன்னே இனியே பாரி மாய்ந்து என கலங்கி கையற்று நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர் நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே #114 கபிலர் ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற களிறு மென்று இட்ட கவளம் போல நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் வார் அசும்பு ஒழுகும் முன்றில் தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே # 115 கபிலர் ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார் வாக்க உக்க தே கள் தேறல் கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே #116 தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் புன் மூசு கவலைய முள் மிடை வேலி பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் பீரை நாறிய சுரை இவர் மருங்கின் ஈத்து இலை குப்பை ஏறி உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ நோகோ யானே தேய்கமா காலை பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் கலையும் கொள்ளா ஆக பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியல் மலை அற்றே அண்ணல் நெடு வரை ஏறி தந்தை பெரிய நறவின் கூர் வேல் பாரியது அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த வலம் படு தானை வேந்தர் பொலம் படை கலி_மா எண்ணுவோரே #117 மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் வயல்_அகம் நிறைய புதல் பூ மலர மனை தலை மகவை ஈன்ற அமர் கண் ஆமா நெடு வரை நன் புல் ஆர கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே #118 அறையும் பொறையும் மணந்த தலைய எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ கூர் வேல் குவைஇய மொய்ம்பின் தேர் வண் பாரி தண் பறம்பு நாடே #119 கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ நிழல் இல் நீள் இடை தனி மரம் போல பணை கெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே #120 வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல் கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து பூழி மயங்க பல உழுது வித்தி பல்லி ஆடிய பல் கிளை செவ்வி களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து வாலிதின் விளைந்த புது வரகு அரிய தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு பெரும் தோள் தாலம் பூசல் மேவர வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் பாடி ஆனா பண்பின் பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே # 121 கபிலர் ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை பலரும் வருவர் பரிசில்_மாக்கள் வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மா வண் தோன்றல் அது நற்கு அறிந்தனை ஆயின் பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே # 122 கபிலர் கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே வீயா திருவின் விறல் கெழு தானை மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே வட_மீன் புரையும் கற்பின் மட மொழி அரிவை தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே # 123 கபிலர் நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே தொலையா நல் இசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் பயன் கெழு முள்ளூர் மீமிசை பட்ட மாரி உறையினும் பலவே # 124 கபிலர் நாள் அன்று போகி புள் இடை தட்ப பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள பாடு ஆன்று இரங்கும் அருவி பீடு கெழு மலையன் பாடியோரே # 125 வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே நள்ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள நின் மகிழ் இருக்கையே உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே குன்றத்து அன்ன களிறு பெயர கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே வெலீஇயோன் இவன் என கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு விரைந்து வந்து சமம் தாங்கிய வல் வேல் மலையன் அல்லன் ஆயின் நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என தோற்றோன் தானும் நின் கூறும்மே தொலைஇயோன் இவன் என ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு இருக்கை சான்ற உயர் மலை திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே # 126 மாறோக்கத்து நப்பசலையார் ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு பாணர் சென்னி பொலிய தைஇ வாடா தாமரை சூட்டிய விழு சீர் ஓடா பூட்கை உரவோன் மருக வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே நின்_வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர் பொருந தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு சினம் மிகு தானை வானவன் குட கடல் பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை இன்மை துரப்ப இசை தர வந்து நின் வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய அரும் சமம் ததைய தாக்கி நன்றும் நண்ணா தெவ்வர் தாங்கும் பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே # 127 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில் சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய முரைசு கெழு செல்வர் நகர் போலாதே # 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் மன்ற பலவின் மா சினை மந்தி இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் ஆடு_மகள் குறுகின் அல்லது பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே # 129 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் குறி இறை குரம்பை குறவர் மாக்கள் வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து வேங்கை முன்றில் குரவை அயரும் தீம் சுளை பலவின் மா மலை கிழவன் ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று வானம் மீன் பல பூப்பின் ஆனாது ஒரு வழி கரு வழி இன்றி பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே # 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் கொங்கர் குட கடல் ஓட்டிய ஞான்றை தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே #131 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் குன்றம் பாடின-கொல்லோ களிறு மிக உடைய இ கவின் பெறு காடே #132 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி குவளை பைம் சுனை பருகி அயல தகர தண் நிழல் பிணையொடு வதியும் வட திசையதுவே வான் தோய் இமயம் தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே #133 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் கேட்பின் அல்லது காண்பு அறியலையே காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரை வளி உளர கலவ மஞ்ஞையின் காண்வர இயலி மாரி அன்ன வண்மை தேர் வேள் ஆயை காணிய சென்மே #134 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அற விலை வணிகன் ஆஅய் அல்லன் பிறரும் சான்றோர் சென்ற நெறி என ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே #135 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் வளை கை விறலி என் பின்னள் ஆக பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி வந்தெனன் எந்தை யானே என்றும் மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு கறை அடி யானை இரியல்_போக்கும் மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் களிறும் அன்றே மாவும் அன்றே ஒளிறு படை புரவிய தேரும் அன்றே பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் தமது என தொடுக்குவர் ஆயின் எமது என பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு அன்ன ஆக நின் ஊழி நின்னை காண்டல் வேண்டிய அளவை வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே #136 துறையூர் ஓடை கிழார் யாழ் பத்தர் புறம் கடுப்ப இழை வலந்த பல் துன்னத்து இடை புரை பற்றி பிணி விடாஅ ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ உண்ணாமையின் ஊன் வாடி தெண் நீரின் கண் மல்கி கசிவு_உற்ற என் பல் கிளையொடு பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ அன்ன தன்மையும் அறிந்தீயார் நின்னது தா என நிலை தளர மரம் பிறங்கிய நளி சிலம்பின் குரங்கு அன்ன புன் குறும் கூளியர் பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் என கருதி பெயர் ஏத்தி வாயார நின் இசை நம்பி சுடர் சுட்ட சுரத்து ஏறி இவண் வந்த பெரு நசையேம் எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என அனைத்து உரைத்தனன் யான் ஆக நினக்கு ஒத்தது நீ நாடி நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் தண் புனல் வாயில் துறையூர் முன்துறை நுண் பல மணலினும் ஏத்தி உண்குவம் பெரும நீ நல்கிய வளனே #137 ஒருசிறை பெரியனார் இரங்கு முரசின் இனம் சால் யானை முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை இன்னும் ஓர் யான் அவா அறியேனே நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது கழை கரும்பின் ஒலிக்குந்து கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் கண் அன்ன மலர் பூக்குந்து கரும் கால் வேங்கை மலரின் நாளும் பொன் அன்ன வீ சுமந்து மணி அன்ன நீர் கடல் படரும் செம் வரை படப்பை நாஞ்சில் பொருந சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை நீ வாழியர் நின் தந்தை தாய் வாழியர் நின் பயந்திசினோரே #138 மருதன் இளநாகனார் ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண நீயே பேர் எண்ணலையே நின் இறை மாறி வா என மொழியலன் மாதோ ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின் நின்னை வருதல் அறிந்தனர் யாரே #139 மருதன் இளநாகனார் சுவல் அழுந்த பல காய சில் ஓதி பல் இளைஞருமே அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலியருமே வாழ்தல் வேண்டி பொய் கூறேன் மெய் கூறுவல் ஓடா பூட்கை உரவோர் மருக உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந மாயா உள்ளமொடு பரிசில் துன்னி கனி பதம் பார்க்கும் காலை அன்றே ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் அரும் சமம் வருகுவது ஆயின் வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே #140 ஔவையார் தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் மடவன் மன்ற செம் நா புலவீர் வளை கை விறலியர் படப்பை கொய்த அடகின் கண்ணுறை ஆக யாம் சில அரிசி வேண்டினெம் ஆக தான் பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் தேற்றா ஈகையும் உளது-கொல் போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே #141 பரணர் பாணன் சூடிய பசும்_பொன் தாமரை மாண் இழை விறலி மாலையொடு விளங்க கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் யாரீரோ என வினவல் ஆனா காரென் ஒக்கல் கடும் பசி இரவல வென் வேல் அண்ணல் காணா ஊங்கே நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ கடாஅ யானை கலி_மான் பேகன் எ துணை ஆயினும் ஈதல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே #142 பரணர் அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போல கடாஅ யானை கழல் கால் பேகன் கொடை மடம்படுதல் அல்லது படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே #143 கபிலர் மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என கடவுள் பேணிய குறவர் மாக்கள் பெயல் கண்மாறிய உவகையர் சாரல் புனை தினை அயிலும் நாட சின போர் கைவள் ஈகை கடு மான் பேக யார்-கொல் அளியள் தானே நெருநல் சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என குணில் பாய் முரசின் இரங்கும் அருவி நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலை_அகம் நனைப்ப விம்மி குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே #144 கபிலர் அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் கார் எதிர் கானம் பாடினேம் ஆக நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப இனைதல் ஆனாள் ஆக இளையோய் கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல் ஊரானே #145 கபிலர் மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை கடாஅ யானை கலி_மான் பேக பசித்தும் வாரோம் பாரமும் இலமே களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் இன மணி நெடும் தேர் ஏறி இன்னாது உறைவி அரும் படர் களைமே #146 அரிசில் கிழார் அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல நன் நாடு பாட என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ நல்காமையின் நைவர சாஅய் அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ தண் கமழ் கோதை புனைய வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே #147 பெருங்குன்றூர் கிழார் கல் முழை அருவி பன் மலை நீந்தி சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை கார் வான் இன் உறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் அரி மதர் மழை கண் அம் மா அரிவை நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் மண்_உறு மணியின் மாசு அற மண்ணி புது மலர் கஞல இன்று பெயரின் அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே #148 வன்பரணர் கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி செய்யா கூறி கிளத்தல் எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே #149 வன்பரணர் நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் மாலை மருதம் பண்ணி காலை கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி வரவு எமர் மறந்தனர் அது நீ புரவு கடன் பூண்ட வண்மை யானே #150 வன் பரணர் கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை கான் அதர் மயங்கிய இளையர் வல்லே தாம் வந்து எய்தா அளவை ஒய்யென தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி நன் மரன் நளிய நறும் தண் சாரல் கல் மிசை அருவி தண்ணென பருகி விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் எ நாடோ என நாடும் சொல்லான் யாரீரோ என பேரும் சொல்லான் பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் பளிங்கு வகுத்து அன்ன தீ நீர் நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே |
---|