புறநானூறு (351 - 400)
# 351 மதுரை படைமங்க மன்னியார் படு மணி மருங்கின பணை தாள் யானையும் கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் படை அமை மறவரொடு துவன்றி கல்லென கடல் கண்டு அன்ன கண் அகன் தானை வென்று எறி முரசின் வேந்தர் என்றும் வண் கை எயினன் வாகை அன்ன இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் என் ஆவது-கொல் தானே தெண் நீர் பொய்கை மேய்ந்த செ வரி நாரை தேம் கொள் மருதின் பூ சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும் ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே # 352 பரணர் தேஎம் கொண்ட வெண் மண்டையான் வீங்கு முலை கறக்குந்து அவல் வகுத்த பசும் குடையான் புதன் முல்லை பூ பறிக்குந்து ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் குன்று ஏறி புனல் பாயின் புற வாயால் புனல் வரையுந்து நொடை நறவின் மா வண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை அன்ன உரை சால் நன் கலம் கொடுப்பவும் கொளாஅ விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் சிறு கோல் உளையும் புரவியொடு யாரே # 353 காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் ஈகை கண்ணி இலங்க தைஇ தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை வினவல் ஆனா வெல் போர் அண்ணல் யார் மகள் என்போய் கூற கேள் இனி குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு நாள் கடா அழித்த நனம் தலை குப்பை வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் கூறி வந்த மா முது வேந்தர்க்கு உழக்கு குருதி ஓட்டி கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு பஞ்சியும் களையா புண்ணர் அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே # 354 பரணர் அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் வயல் அமர் கழனி வாயில் பொய்கை கயல் ஆர் நாரை உகைத்த வாளை புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை வீங்கு இறை பணை தோள் மடந்தை மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே # 355 மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் ஊரது நிலைமையும் இதுவே மற்றே எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி # 356 தாயங்கண்ணனார் களரி பரந்து கள்ளி போகி பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதை எல்லாம் தானாய் தன் புறம் காண்போர் காண்பு அறியாதே # 357 பிரமனார் குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் பொதுமை சுட்டிய மூவர் உலகமும் பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே வைத்தது அன்றே வெறுக்கை புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ தொக்கு உயிர் வௌவும்_காலை இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே # 358 வான்மீகியார் பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅதோர் இவள் விடப்பட்டோரே # 359 கரவட்டனாரி பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் வேறு படு குரல வெம் வாய் கூகையொடு பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி ஈம விளக்கின் வெருவர பேரும் காடு முன்னினரே நாடு கொண்டோரும் நினக்கும் வருதல் வைகல் அற்றே வசையும் நிற்கும் இசையும் நிற்கும் அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் நசை வேண்டாது நன்று மொழிந்தும் நிலவு கோட்டு பல களிற்றோடு பொலம் படைய மா மயங்கிட இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது கொள் என விடுவை ஆயின் வெள்ளென ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே # 360 சங்க வருணர் என்னும் நாகரியர் பெரிது ஆரா சிறு சினத்தர் சில சொல்லால் பல கேள்வியர் நுண் உணர்வினால் பெரும் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர் கனி குய்யான் கொழும் துவையர் தாழ் உவந்து தழூஉ மொழியர் பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் சிலரே பெரும கேள் இனி நாளும் பலரே தகையஃது அறியாதோரே அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது இன்னும் அற்று அதன் பண்பே அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர பாறு இறைகொண்ட பறந்தலை மா கத கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு அழல் வாய் புக்க பின்னும் பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே # 361 கார் எதிர் உருமின் உரறி கல்லென ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை தாயின் நன்று பலர்க்கு ஈத்து தெருள் நடை மா களிறொடு தன் அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும் உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் புரி மாலையர் பாடினிக்கு பொலம் தாமரை பூ பாணரொடு கலந்து அளைஇய நீள் இருக்கையால் பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் வில் என விலங்கிய புருவத்து வல்லென நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் அல்குல் தாங்கா அசைஇ மெல்லென கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் நில்லா உலகத்து நிலையாமை நீ சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே # 362 சிறுவெண்டேரையார் ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த மதி உறழ் ஆரம் மார்பில் புரள பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர் செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் ஆ குரல் காண்பின் அந்தணாளர் நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ கை பெய்த நீர் கடல் பரப்ப ஆம் இருந்த அடை நல்கி சோறு கொடுத்து மிக பெரிதும் வீறு சால் நன் கலம் வீசி நன்றும் சிறு வெள் என்பின் நெடு வெண் களரின் வாய் வன் காக்கை கூகையொடு கூடி பகலும் கூவும் அகலுள் ஆங்கண் காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு இல் என்று இல் வயின் பெயர மெல்ல இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே # 363 ஐயாதி சிறுவெண்டேரையார் இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி தாமே ஆண்ட ஏமம் காவலர் இடு திரை மணலினும் பலரே சுடு பிண காடு பதி ஆக போகி தத்தம் நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பு இலாஅ அவி புழுக்கல் கை கொண்டு பிறக்கு நோக்காது இழிபிறப்பினோன் ஈய பெற்று நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய் நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே # 364 கூகை கோரியார் வாடா மாலை பாடினி அணிய பாணன் சென்னி கேணி பூவா எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழ்கம் வம்மோ மற போரோயே அரிய ஆகலும் உரிய பெரும நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் முது மர பொத்தின் கதுமென இயம்பும் கூகை கோழி ஆனா தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே # 365 மார்க்கண்டேயனார் மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி பொருநர் காணா செரு மிகு முன்பின் முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும் விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே # 366 கோதமனாரி விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப ஒரு தாம் ஆகிய பெருமையோரும் தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் உரைப்ப கேள்-மதி நின் ஊற்றம் பிறர் அறியாது பிறர் கூறிய மொழி தெரியா ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி இரவின் எல்லை வருவது நாடி உரைத்திசின் பெரும நன்றும் உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப கெடல் அரும் திருவ உண்மோ விடை வீழ்த்து சூடு கிழிப்ப மடை வேண்டுநர்க்கு இடை அருகாது அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் இடம் கெட தொகுத்த விடையின் மடங்கல் உண்மை மாயமோ அன்றே # 367 ஔவையார் நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் வாழ செய்த நல்வினை அல்லது ஆழும்_காலை புணை பிறிது இல்லை ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ புரைய காண்_தக இருந்த கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர் யான் அறி அளவையோ இதுவே வானத்து வயங்கி தோன்றும் மீனினும் இம்மென பரந்து இயங்கும் மா மழை உறையினும் உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே # 368 கழா தலையார் களிறு முகந்து பெயர்குவம் எனினே ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே கடும் பரி நன் மான் வாங்கு_வயின் ஒல்கி நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி வளி வழக்கு அறுத்த வங்கம் போல குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க முகவை இன்மையின் உகவை இன்றி இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ கடாஅ யானை கால்_வழி அன்ன என் தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி பாடி வந்தது எல்லாம் கோடியர் முழவு மருள் திரு மணி மிடைந்த நின் அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே # 369 பரணர் இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின் கரும் கை யானை கொண்மூ ஆக நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த குருதி பலிய முரசு முழக்கு ஆக அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் வெம் விசை புரவி வீசு வளி ஆக விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை ஈர செறு வயின் தேர் ஏர் ஆக விடியல் புக்கு நெடிய நீட்டி நின் செரு படை மிளிர்ந்த திருத்து_உறு பைம் சாலி பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ் பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு கண நரியோடு கழுது களம் படுப்ப பூதம் காப்ப பொலி_களம் தழீஇ பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி வேய்வை காணா விருந்தின் போர்வை அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று எழிலி தோயும் இமிழ் இசை அருவி பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன ஓடை நுதல ஒல்குதல் அறியா துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த வேழ முகவை நல்கு-மதி தாழா ஈகை தகை வெய்யோயே # 370 ஊன்பொதி பசுங்குடையார் வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை வரி மரல் திரங்கிய கானம் பிற்பட பழு மரம் உள்ளிய பறவை போல ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து படு பிண பல் போர்பு அழிய வாங்கி எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி அதரி திரித்த ஆள் உகு கடாவின் அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த தொடி உடை தட கை ஓச்சி வெருவார் இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு செம் செவி எருவை திரிதரும் அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே # 371 கல்லாடனார் அகன் தலை வையத்து புரவலர் காணாது மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி போது அவிழ் அலரி நாரின் தொடுத்து தயங்கு இரும் பித்தை பொலிய சூடி பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய் ஆடு_உறு குழிசி பாடு இன்று தூக்கி மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி அதரி திரித்த ஆள் உகு கடாவின் மதியத்து அன்ன என் விசி_உறு தடாரி அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள் குடர் தலை மாலை சூடி உண தின ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து வயங்கு பன் மீனினும் வாழியர் பல என உரு கெழு பேய்_மகள் அயர குருதி துகள் ஆடிய களம் கிழவோயே # 372 மாங்குடி கிழார் விசி பிணி தடாரி விம்மென ஒற்றி ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என புலவு களம் பொலிய வேட்டோய் நின் நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே # 373 கோவூர்கிழார் உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப செரு நவில் வேழம் கொண்மூ ஆக தேர் மா அழி துளி தலைஇ நாம் உற கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே தண்ட மா பொறி மட கண் மயில் இயல் மறலி ஆங்கு நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண் உவந்து உளை அணி புரவி வாழ்க என சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா வாளில் தாக்கான் வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு உரும் எறி மலையின் இரு நிலம் சேர சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப வஞ்சி முற்றம் வய களன் ஆக அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து கொண்டனை பெரும குட புலத்து அதரி பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி கொண்டனர் என்ப பெரியோர் யானும் அம் கண் மா கிணை அதிர ஒற்ற முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு தா இன்று உதவும் பண்பின் பேயொடு கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து செம் செவி எருவை குழீஇ அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே # 374 உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா சிலை_பால் பட்ட முளவு_மான் கொழும் குறை விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம் புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல வண்மையும் உடையையோ ஞாயிறு கொன் விளங்குதியால் விசும்பினானே # 375 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக முழா அரை போந்தை அர வாய் மா மடல் நாரும் போழும் கிணையோடு சுருக்கி ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என புரசம் தூங்கும் அறாஅ யாணர் வரை அணி படப்பை நன் நாட்டு பொருந பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய் யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் புலவர் புக்கில் ஆகி நிலவரை நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து நிலவன்மாரோ புரவலர் துன்னி பெரிய ஓதினும் சிறிய உணரா பீடு இன்று பெருகிய திருவின் பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே # 376 புறத்திணை நன்னாகனார் விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ பாணர் ஆரும் அளவை யான் தன் யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற பண்டு அறி வாரா உருவோடு என் அரை தொன்றுபடு துளையொடு பரு இழை போகி நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி நன்றும் அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே இரவினானே ஈத்தோன் எந்தை அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை ஞாங்கர் நெடுமொழி பயிற்றி தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே # 377 உலோச்சனார் பனி பழுநிய பல் யாமத்து பாறு தலை மயிர் நனைய இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி அவி உணவினோர் புறம்காப்ப அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று அதன் கொண்டு வரல் ஏத்தி கரவு இல்லா கவி வண் கையான் வாழ்க என பெயர் பெற்றோர் பிறர்க்கு உவமம் தான் அல்லது தனக்கு உவமம் பிறர் இல் என அது நினைத்து மதி மழுகி அங்கு நின்ற என் காணூஉ சேய் நாட்டு செல் கிணைஞனை நீ புரவலை எமக்கு என்ன மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல் நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர் கவர் பரி கச்சை நன் மான் வடி மணி வாங்கு உருள கொடி மிசை நல் தேர் குழுவினர் கதழ் இசை வன்கணினர் வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி கடல் ஒலி கொண்ட தானை அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே # 378 ஊன்பொதி பசுங்குடையார் தென் பரதவர் மிடல் சாய வட வடுகர் வாள் ஓட்டிய தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் நல் தார் கள்ளின் சோழன் கோயில் புது பிறை அன்ன சுதை செய் மாடத்து பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் அரி கூடு மா கிணை இரிய ஒற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட எமக்கு என வகுத்த அல்ல மிக பல மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே அது கண்டு இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் விரல் செறி மரபின செவி தொடக்குநரும் செவி தொடர் மரபின விரல் செறிக்குநரும் அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும் மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே இரும் கிளை தலைமை எய்தி அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே # 379 புறத்திணை நன்னாகனார் யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை அவனே பெறுக என் நா இசை நுவறல் நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் பின்னை மறத்தோடு அரிய கல் செத்து அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன் கிணையேம் பெரும குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர் நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா வல்லன் எந்தை பசி தீர்த்தல் என கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது விண் தோய் தலைய குன்றம் பிற்பட வந்தனென் யானே தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே # 380 தென் பவ்வத்து முத்து பூண்டு வட_குன்றத்து சாந்தம் உரீஇ கடல் தானை இன் இசைய விறல் வென்றி தென்னவர் வய மறவன் மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன் நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் வல் வேல் கந்தன் நல் இசை அல்ல சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர் அன்னன் ஆகன் மாறே இ நிலம் இலம்படு காலை ஆயினும் புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே # 381 புறத்திணை நன்னகனாரி ஊனும் ஊணும் முனையின் இனிது என பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்து_உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் ஈயா மன்னர் புறங்கடை தோன்றி சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் இரு நிலம் கூலம் பாற கோடை வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை சேயை ஆயினும் இவணை ஆயினும் இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை ஒலி வெள் அருவி வேங்கட நாடன் உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று இரும் கோள் ஈரா பூட்கை கரும்பனூரன் காதல் மகனே # 382 கோவூர் கிழார் கடல் படை அடல் கொண்டி மண்டு உற்ற மலிர் நோன் தாள் தண் சோழ நாட்டு பொருநன் அலங்கு உளை அணி இவுளி நலங்கிள்ளி நசை பொருநரேம் பிறர் பாடி பெறல் வேண்டேம் அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என நெய் குய்ய ஊன் நவின்ற பல் சோற்றான் இன் சுவைய நல்குரவின் பசி துன்பின் நின் முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி கண் கேள்வி சுவை நாவின் நிறன் உற்ற அராஅ போலும் வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் வென்ற தேர் பிறர் வேத்தவையானே # 383 மாறோக்கத்து நப்பசலையார் ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் கழை படு சொலியின் இழை அணி வாரா ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல என் பெயர்ந்த நோக்கி கல் கொண்டு அழித்து பிறந்தனென் ஆகி அ வழி பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் குன்று பல கெழீஇய கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என ஒருவனை உடையேன்-மன்னே யானே அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே # 384 புறத்திணை நன்னாகனார் மென்_பாலான் உடன் அணைஇ வஞ்சி கோட்டு உறங்கும் நாரை அறை கரும்பின் பூ அருந்தும் வன்_பாலான் கரும் கால் வரகின் அம் கண் குறு முயல் வெருவ அயல கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து கரும்பனூரன் கிணையேம் பெரும நெல் என்னா பொன் என்னாம் கனற்ற கொண்ட நறவு என்னும் மனை என்னா அவை பலவும் யான் தண்டவும் தான் தண்டான் நிணம் பெருத்த கொழும் சோற்று இடை மண் நாண புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கி புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி மாண்ட உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் தின்ற நன் பல் ஊன் தோண்டவும் வந்த வைகல் அல்லது சென்ற எல்லை செலவு அறியேனே # 385 கல்லாடனார் வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப புலரி விடியல் பகடு பல வாழ்த்தி தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து வெளியது உடீஇ என் பசி களைந்தோனே காவிரி அணையும் தாழ் நீர் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன் நல் அருவந்தை வாழியர் புல்லிய வேங்கட விறல் வரைப்பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே # 386 கோவூர் கிழார் நெடு நீர நிறை கயத்து படு மாரி துளி போல நெய் துள்ளிய வறை முகக்கவும் சூடு கிழித்து வாடூன் மிசையவும் ஊன் கொண்ட வெண் மண்டை ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் வெய்து உண்ட வியர்ப்பு அல்லது செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை ஈத்தோன் எந்தை இசை தனது ஆக வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்தி பன் மலர் பூ ததும்பின புறவே புல் அருந்து பல் ஆயத்தான் வில் இருந்த வெம் குறும்பின்று கடலே கால் தந்த கலம் எண்ணுவோர் கானல் புன்னை சினை நிலைக்குந்து கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து அன்ன நன் நாட்டு பொருநம் யாமே பொராஅ பொருநரேம் குண திசை நின்று குட முதல் செலினும் குட திசை நின்று குண முதல் செலினும் வட திசை நின்று தென்_வயின் செலினும் தென் திசை நின்று குறுகாது நீடினும் யாண்டும் நிற்க வெள்ளி யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே # 387 குண்டுகட் பாலியாதனார் வள் உகிர வயல் ஆமை வெள் அகடு கண்டு அன்ன வீங்கு விசி புது போர்வை தெண் கண் மா கிணை இயக்கி என்றும் மாறுகொண்டோர் மதில் இடறி நீறு ஆடிய நறும் கவுள பூம் பொறி பணை எருத்தின வேறு_வேறு பரந்து இயங்கி வேந்து உடை மிளை அயல் பரக்கும் ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை திருந்து தொழில் பல பகடு பகை புல மன்னர் பணி திறை தந்து நின் நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று யாஅன் இசைப்பின் நனி நன்று எனா பல பிற வாழ்த்த இருந்தோர்_தம் கோன் மருவ இன் நகர் அகன் கடை தலை திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி வென்று இரங்கும் விறல் முரசினோன் என் சிறுமையின் இழித்து நோக்கான் தன் பெருமையின் தகவு நோக்கி குன்று உறழ்ந்த களிறு என்கோ கொய் உளைய மா என்கோ மன்று நிறையும் நிரை என்கோ மனை களமரொடு களம் என்கோ ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் நல்கியோனே நகை சால் தோன்றல் ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன் விடுவர் மாதோ நெடிதோ நில்லா புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் பல் ஊர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே # 388 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் பள்ளம் வாடிய பயன் இல் காலை இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி தன் நிலை அறியுநன் ஆக அ நிலை இடுக்கண் இரியல்_போக உடைய கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை அண்ணல் யானை வழுதி கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே # 389 கள்ளில் ஆத்திரையனாரி நீர் நுங்கின் கண் வலிப்ப கான வேம்பின் காய் திரங்க கயம் களியும் கோடை ஆயினும் ஏலா வெண்பொன் போகு_உறு_காலை எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் செலினே காணா வழியனும் அல்லன் புன் தலை மட பிடி இனைய கன்று தந்து குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் செல்வு_உழி எழாஅ நல் ஏர் முதியன் ஆதனுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும ஐது அகல் அல்குல் மகளிர் நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே # 390 ஔவையார் அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் கனவினும் குறுகா கடி உடை வியன் நகர் மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் அரி குரல் தடாரி இரிய ஒற்றி பாடி நின்ற பன் நாள் அன்றியும் சென்ற ஞான்றை சென்று படர் இரவின் வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற புன் தலை பொருநன் அளியன் தான் என தன் உழை குறுகல் வேண்டி என் அரை முது நீர் பாசி அன்ன உடை களைந்து திரு மலர் அன்ன புது மடி கொளீஇ மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும் அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன பகடு தரு செந்நெல் போரொடு நல்கி கொண்டி பெறுக என்றோனே உண்துறை மலை அலர் அணியும் தலை நீர் நாடன் கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி வான் அறியல என் பாடு பசி போக்கல் அண்ணல் யானை வேந்தர் உண்மையோ அறியலர் காண்பு அறியலரே # 391 கல்லாடனார் தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண் தோய் பிறங்கல் முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற திருந்தா மூரி பரந்து பட கெண்டி அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி நனம் தலை மூதூர் வினவலின் முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் அளியன் ஆகலின் பொருநன் இவன் என நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற காண்கு வந்திசின் பெரும மாண் தக இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின் நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் துளி பதன் அறிந்து பொழிய வேலி ஆயிரம் விளைக நின் வயலே # 392 ஔவையார் மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் பசலை நிலவின் பனி படு விடியல் பொரு களிற்று அடி வழி அன்ன என் கை ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ வாழிய பெரிது என சென்று யான் நின்றனென் ஆக அன்றே ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை விருந்து இறை நல்கியோனே அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே # 393 நல்லிறையனார் பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை குறு நெடும் துணையொடும் கூமை வீதலின் குடி முறை பாடி ஒய்யென வருந்தி அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா உலகம் எல்லாம் ஒரு_பால் பட்டு என மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப கோடை பருத்தி வீடு நிறை பெய்த மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன வெண் நிண மூரி அருள நாள் உற ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி போது விரி பகன்றை புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி கோடை ஆயினும் கோடி காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந வாய் வாள் வளவன் வாழ்க என பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே # 394 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன் வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் துன் அரும் பரிசில் தரும் என என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே # 395 மதுரை நக்கீரர் மென்_புலத்து வயல் உழவர் வன்_புலத்து பகடு விட்டு குறு முயலின் குழை சூட்டொடு நெடு வாளை பல் உவியல் பழம் சோற்று புக வருந்தி புதல் தளவின் பூ சூடி அரி_பறையால் புள் ஓப்பி அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து மனை கோழி பைம் பயிரின்னே கான கோழி கவர் குரலொடு நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து வேய் அன்ன மென் தோளால் மயில் அன்ன மென் சாயலார் கிளி கடியின்னே அகல் அள்ளல் புள் இரீஇயுந்து ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் சீர் சான்ற விழு சிறப்பின் சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் செல்லா நல் இசை உறந்தை குணாது நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி கதிர் நனி சென்ற கனை இருள் மாலை தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் தீம் குரல் அரி குரல் தடாரியொடு ஆங்கு நின்ற என் கண்டு சிறிதும் நில்லான் பெரிதும் கூறான் அரும் கலம் வரவே அருளினன் வேண்டி ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை பொன் போல் மடந்தையை காட்டி இவனை என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே அகன் ஞாலம் பெரிது வெம்பினும் மிக வானுள் எரி தோன்றினும் குள_மீனோடும் தாள் புகையினும் பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என உள்ளதும் இல்லதும் அறியாது ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே # 396 மாங்குடி கிழார் கீழ் நீரால் மீன் வழங்குந்து மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து கழி சுற்றிய விளை கழனி அரி_பறையான் புள் ஓப்புந்து நெடு நீர் கூஉம் மணல் தண் கான் மென் பறையான் புள் இரியுந்து நனை கள்ளின் மனை கோசர் தீம் தேறல் நறவு மகிழ்ந்து தீம் குரவை கொளை தாங்குந்து உள் இலோர்க்கு வலி ஆகுவன் கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் கழுமிய வென் வேல் வேளே வள நீர் வாட்டாற்று எழினியாதன் கிணையேம் பெரும கொழும் தடிய சூடு என்கோ வள நனையின் மட்டு என்கோ குறு முயலின் நிணம் பெய்தந்த நறு நெய்ய சோறு என்கோ திறந்து மறந்து கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு என்கோ அன்னவை பல_பல வருந்திய இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை எம்மோர் ஆக்க கங்கு உண்டே மாரி வானத்து மீன் நாப்பண் விரி கதிர வெண் திங்களின் விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் நிரை சால் நன் கலன் நல்கி உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே # 397 வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே பொய்கையும் போடு கண் விழித்தன பைபய சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவு புறங்கண்ட காலை தோன்றி எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை வைகறை அரவம் கேளியர் பல கோள் செய் தார் மார்ப எழு-மதி துயில் என தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி நெடும் கடை தோன்றியேனே அது நயந்து உள்ளி வந்த பரிசிலன் இவன் என நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு மாரி அன்ன வண்மையின் சொரிந்து வேனில் அன்ன என் வெப்பு நீங்க அரும் கலம் நல்கியோனே என்றும் செறுவில் பூத்த சே இதழ் தாமரை அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே # 398 திருத்தாமனார் மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல் பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப பொய்கை பூ முகை மலர பாணர் கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க இரவு புறம்பெற்ற ஏம வைகறை பரிசிலர் வரையா விரை செய் பந்தர் வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு புலி_இனம் மடிந்த கல் அளை போல துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என என் வரவு அறீஇ சிறிதிற்கு பெரிது உவந்து விரும்பிய முகத்தன் ஆகி என் அரை துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை நிழல் காண் தேறல் நிறைய வாக்கி யான் உண அருளல் அன்றியும் தான் உண் மண்டைய கண்ட மான் வறை கருனை கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே பறை இசை அருவி பாயல் கோவே # 399 ஐயூர் முடவனார் அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி காடி வெள் உலை கொளீஇ நீழல் ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன மெய் களைந்து இனனொடு விரைஇ மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் அழிகளின் படுநர் களி அட வைகின் பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை காவிரி கிழவன் மாயா நல் இசை கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன் நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் இசையின் கொண்டான் நசை அமுது உண்க என மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை விசிப்பு_உறுத்து அமைந்த புது காழ் போர்வை அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் பகடே அத்தை யான் வேண்டி வந்தது என ஒன்று யான் பெட்டா அளவை அன்றே ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள இழுமென இழிதரும் அருவி வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே # 400 கோவூர் கிழார் மாக விசும்பின் வெண் திங்கள் மூ_ஐந்தால் முறை முற்ற கடல் நடுவண் கண்டு அன்ன என் இயம் இசையா மரபு ஏத்தி கடை தோன்றிய கடை கங்குலான் பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து போது அறியேன் பதி பழகவும் தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் பசி பகை கடிதலும் வல்லன் மாதோ மறவர் மலிந்த தன் கேள்வி மலிந்த வேள்வி தூணத்து இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் உறைவு இன் யாணர் நாடு கிழவோனே |
---|