1. கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி
2. திருஈங்கோய்மலை எழுபது
3. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
4. திருஎழுகூற்றிருக்கை
5. பெருந்தேவபாணி
6. கோபப் பிரசாதம்
7. கார் எட்டு
8. போற்றித்திருக்கலிவெண்பா
9. திருமுருகாற்றுப்படை
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
|
** திருமுறை11
&5 நக்கீர தேவ நாயனார் பாசுரங்கள்
@1 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
#1
சொல்லும் பொருளுமே தூத் திரியும் நெய்யுமா
நல் இடிஞ்சில் என்னுடைய நா ஆகச் சொல் அரிய
வெண்பா விளக்கா வியன் கயிலை மேல் இருந்த
பெண்பாகற்கு ஏற்றினேன் பெற்று
#2
பெற்ற பயன் இதுவே அன்றே பிறந்து யான்
கற்றவர்கள் ஏத்தும் சீர்க் காளத்திக் கொற்றவர்க்குத்
தோள் ஆகத்து ஆடு அரவம் சூழ்ந்து அணிந்த அம்மானுக்கு
ஆளாகப் பெற்றேன் அடைந்து
#3
அடைந்து உய்ம்-மின் அம்மானை உம் ஆவி-தன்னைக்
குடைந்து உண்ண எண்ணிய வெம் கூற்று அங்கு அடைந்து நும்
கண் உளே பார்க்கும் பொழுது கயிலாயத்து
அண்ணலே கண்டீர் அரண்
#4
அரணம் ஒரு மூன்றும் ஆர் அழலாய் வீழ
முரண் அம்பு கோத்த முதல்வன் சரணமே
காணும் மால் உற்றவன்-தன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது
#5
பெரியவர் காணீர் என் உள்ளத்தின் பெற்றி
தெரிவு அரிய தேவாதி தேவன் பெரிதும்
திருத் தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்தது இடம்
#6
இடப் பாகம் நீள் கோட்டு இமவான் பயந்த
மடப் பாவை-தன் வடிவே ஆனால் விடப் பால்
கரு வடி சேர் கண்டத்து எம் காளத்தி ஆள்வார்க்கு
ஒரு வடிவே அன்றால் உரு
#7
உருவு பல கொண்டு உணர்வு அரிதாய் நிற்கும்
ஒருவன் ஒரு பால் இருக்கை மரு இனிய
பூக் கையில் கொண்டு எப்பொழுதும் புத்தேளிர் வந்து இறைஞ்சும்
மாக் கயிலை என்னும் மலை
#8
மலைவு அரும் போர் வானவரும் தானவரும் எல்லாம்
அலை கடல்-வாய் நஞ்சு எழல் கண்டு அஞ்சி நிலைதளரக்
கண்டமையால் தண் சாரல் காளத்தி ஆள்வார் நஞ்சு
உண்டமையால் உண்டு இவ் உலகு
#9
உலகம் அனைத்தினுக்கும் ஒள்_நுதல் மேல் இட்ட
திலகம் எனப் பெறினும் சீசீ இலகிய சீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசாது இருப்பார் பிறப்பு
#10
பிறப்பு உடையர் கற்றோர் பெரும் செல்வர் மற்றும்
சிறப்பு உடையர் ஆனாலும் சீசீ இறப்பு_இல்
கடி ஆர் நறும் சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணாதவர்
#11
அவரும் பிறந்தாராய்ப் போவார்-கொல் ஆவி
எவரும் தொழுது ஏத்தும் எந்தை சிவம் மன்னு
தேக்கு வார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது
#12
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்-கொல் அந்தோ கிறிபட்டார் கீள் ஆடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்ற
கண்ணப்பராவார் கதை
#13
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதை இருள் கண் மாலோடும் சென்று சிதையாச் சீர்த்
தீர்த்தன்-பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன் போர் வென்றிலனோ பண்டு
#14
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின் கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண்டு
ஆளத் தயா உண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தியாய் உன் கருத்து
#15
கருத்துக்குச் சேயையாய்க் காண் தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் ஒருத்தர்
அறிவான் உறுவார்க்கு அறியுமாறு உண்டோ
நெறிவார் சடையாய் நிலை
#16
நிலை_இல் பிறவி நெடும் சுழியில் பட்டுத்
தலைவ தடுமாறுகின்றேன் தொலைவு இன்றிப்
போந்து ஏறக் கை தாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தே இப் பாசத்தை விட்டு
#17
பாசத்தை விட்டு நின் பாதத்தின் கீழே என்
நேசத்தை வைக்க நினை கண்டாய் பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீ என்னைக்
காக்குமாறு இத் தனையே காண்
#18
காணாது அலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூண் ஆர மார்பன்-தன் பொன் பாதம் நாணாதே
கண்டிடுவான் யான் இருந்தேன் காணீர் கடல் நஞ்சை
உண்டிடுவான்-தன்னை ஒருங்கு
#19
ஒருங்காது உடனே நின்றோர் ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் நெருங்கிக்
கருங்கல் ஓங்கு உம்பல் கயிலாயம் மேயான்
வரும்-கொலோ நம்-பால் மதித்து
#20
நம்-பால் மதித்து உறையும் காளத்தி நண்ணாதே
வம்பு ஆர் மலர் தூய் வணங்காதே நம்பா நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யான் இருந்தேன்
காலங்கள் போன கழிந்து
#21
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாது
ஒழிந்த நாள் மேற்பட்டு உயர்ந்தோர் மொழிந்த சீர்க்
கண்_நுதலான் எந்தை கயிலாய மால் வரையே
நண்ணுதலாம் நன்மை நமக்கு
#22
நமக்கு இசைந்தவா நாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கு அழகு தாமே அறிவார் அமைப் பொதும்பில்
கல்லவாம் நீடு அருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து
#23
வாழ்த்துவாய் வாழ்த்தாது ஒழிவாய் மறு சுழி இட்டு
ஆழ்த்துவாய் அஃது அறிவாய் நீ அன்றே யாழ்த் தகைய
வண்டு ஆர் பொழில் கயிலை வாழ்க என்று இருப்பதே
கண்டாய் அடியேன் கடன்
#24
கட நாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க்கு இல்லை இடம் நாடி
இ நாட்டிற்கே வந்து இங்கு ஈண்டிற்றுக் கொண்டுபோய்
அ நாட்டில் உண்டு உழலுமாறு
#25
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இது அல்லால் தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கை இலை கண்டீர் இனிது
#26
இனிதே பிறவி இன மரங்கள் ஏறிக்
கனி தேர் கடுவன்கள் தம்மில் முனிவாய்ப்
பிணங்கி வரும் தண் சாரல் காளத்தி பேணி
வணங்க வல்லர் ஆயின் மகிழ்ந்து
#27
மகிழ்ந்து அலரும் வண் கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்து உள்ளே நெக்குத் திகழ்ந்து இலங்கும்
விண் நிறம் கா ஓங்கும் வியன் கயிலை மேயாய் என்
பெண் உறங்காள் என் செய்கேன் பேசு
#28
பேசும் பரிசு அறியாள் பேதை பிறர்க்கு எல்லாம்
ஏசும் பரிசு ஆனாளே பாவம் மா சுனை நீர்
காம்பை அலைத்து ஆலிக்கும் காளத்தி என்றென்று
பூம் பசலை மெய் முழுதும் போர்த்து
#29
போர்த்த களிற்று உரியும் பூண்ட பொறி அரவும்
தீர்த்த மகள் இருந்த செம் சடையும் மூர்த்தி
குயில் ஆய மென்_மொழியாள் கூறு ஆயவாறும்
கயிலாயா யான் காணக் காட்டு
#30
காட்டில் நடம் ஆடிக் கங்காளர் ஆகிப் போய்
நாட்டில் பலி திரிந்து நாள்-தோறும் ஓட்டு உண்பார்
ஆனாலும் என்-கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து
#31
வந்து அமரர் ஏத்தும் மடை கூழும் வார் சடை மேல்
கொந்து அவிழும் மாலை கொடுத்தார்-கொல் வந்தித்து
வால் உகுத்த வண் கயிலைக் கோமான் மா முடி மேல்
பால் உகுத்த மாணிக்குப் பண்டு
#32
பண்டு இதுவே அன்று ஆகில் கேளீர்-கொல் பல் சருகு
கொண்டு இலிங்கத்தும் பின் நூல் கூடு இழைப்பக் கண்டு
நலம் திக்கு எலாம் ஏத்தும் காளத்திநாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு
#33
செய்த சிறப்பு எண்ணில் எங்கு உலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க்கு எந்தை கயிலாயர் நொய்தளவில்
காலன் காய்ந்தார் அன்றே காணீர் கழல் தொழுத
பாலற்காய் அன்று பரிந்து
#34
பரிந்து உரைப்பார் சொல் கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்து இருக்ககில்லாமை பேசும் புரிந்து அமரர்
நாதா வா காளத்தி நம்பா வா என்றென்று என்
மாது ஆஆ உற்ற மயல்
#35
மயலைத் தவிர்க்க நீ வாராய் ஒரு மூன்று
எயிலைப் பொடி ஆக எய்தாய் கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பது அவாவுற்றாள் இவள்
#36
இவளுக்கு நல்லவாறு எண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடி இவள் மேல் சாத்தி இவளுக்குக்
காட்டு-மின்கள் காளத்தி காட்டிக் கமழ் கொன்றை
சூட்டு-மின்கள் தீரும் துயர்
#37
துயர்க்கு எலாம் கூடு ஆய தோல் குரம்பை புக்கு
மயக்கில் வழி காணமாட்டேன் வியல் கொடும் பேர்
ஏற்றானே வண் கயிலை எம்மானே என்-கொலோ
மேல் தான் இதற்கு விளைவு
#38
விளையும் வினை அரவின் வெய்ய விடத்தைக்
களை-மினோ காளத்தி ஆள்வார் வளைவில்
திருந்திய சீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினை நீர் வாயிலே வைத்து
#39
வாயிலே வைக்கும் அளவில் மருந்து ஆகித்
தீய பிறவி நோய் தீர்க்குமே தூய ஏ
கம் பெருமாதேவியொடு மன்னு கயிலாயத்து
எம்பெருமான் ஓர் அஞ்செழுத்து
#40
அஞ்செழுத்தும் கண்டீர் அரு மறைகள் ஆவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்து ஆகும் நஞ்சு அவித்த
காளத்தியார் யார்க்கும் காண்டற்கு அரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி
#41
நெறி வார் சடையாய் நிலையின்மை நீ ஒன்று
அறியாய்-கொல் அந்தோ அயர்ந்தாள் நெறியில்
கனைத்து அருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்து அருவி கண் சோர நின்று
#42
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் யாம்
என்றும் நினைந்தாலும் என்-கொலோ சென்று தன்
தாள் வானவர் இறைஞ்சும் தண் சாரல் காளத்தி
ஆள்வான் அருளாதவாறு
#43
அருளாதவாறு உண்டே யார்க்கேனும் ஆக
இருள் ஆர் கறை மிடற்று எம் ஈசன் பொருள் ஆய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன் கயிலை மேயான் வந்து
இம்மையே தீர்க்கும் இடர்
#44
இடரீர் உமக்கு ஓர் இடம் நாடிக்கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் கடல்-வாய்க்
கருப்பட்டோம் கொள் முகில் சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து
#45
உணருங்கால் ஒன்றை உருத் தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போன்று இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்
இனியவா காண் நின் இயல்பு
#46
நின் இயல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னிய சீர்க் காளத்தி மன்னவனே நின்னில்
வெளிப்படுவது ஏழ் உலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமானால் உரை
#47
உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும் போல் விம்மிப் புரை இன்றிச்
சென்றவாறு ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவாறு எங்கும் நிறைந்து
#48
நிறைந்து எங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்து ஐம்புலன் காண வாராய் சிறந்த
கணி ஆரும் தண் சாரல் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என் முன் பரிசு
#49
பரிசு அறியேன் பற்று இலேன் கற்றிலேன் முற்றும்
கரி உரியாய் பாதமே கண்டாய் திரியும்
புரம் மாளச் செற்றவனே பொன் கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று
#50
பற்று ஆவான் எவ் உயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றா வெண் திங்கள் முளை சூடி வற்றாவாம்
கங்கை சேர் செம் சடையான் காளத்தியுள் நின்ற
மங்கை சேர் பாகத்து மன்
#51
மன்னா கயிலாயா மா முத்தம் மாணிக்கம்
பொன் ஆரமாக் கொண்டு பூணாதே எந்நாளும்
மின் செய் வார் செம் சடையாய் வெள் எலும்பு பூண்கின்றது
என் செய்வான் எந்தாய் இயம்பு
#52
இயம்பாய் மட நெஞ்சே ஏனோர்-பால் என்ன
பயம் பார்த்துப் பற்றுவான் உற்றாய் புயம் பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து
#53
இருந்தவா காணீர் இது என்ன மாயம்
அரும் தண் கயிலாயத்து அண்ணல் வருந்திப் போய்த்
தான் நாளும் பிச்சை புகும் போலும் தன் அடியார்
வான் ஆள மண் ஆள வைத்து
#54
வைத்த இருநிதியே என்னுடைய வாழ் முதலே
நித்திலமே காளத்தி நீள் சுடரே மொய்த்து ஒளி சேர்
அக் காலத்து ஆசை அடி நாயேன் காணும் கால்
எக்காலத்து எப்பிறவி யான்
#55
யான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பதனை
யான் என்றும் கொண்டிருப்பன் ஆனாலும் தேன் உண்டு
அளிகள் தாம் பாடும் அகன் கயிலை மேயான்
தெளி கொடான் மாயங்கள் செய்து
#56
மாயங்கள் செய்து ஐவர் சொன்ன வழி நின்று
காயம் கொண்டாடல் கணக்கு அன்று காயமே
நிற்பதன்று ஆதலால் காளத்தி நின் மலர் சீர்
கற்பதே கண்டீர் கணக்கு
#57
கணக்கிட்டுக்கொண்டு இருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் பிணக்கு இன்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவிய நல்
சூலத்தான் பாதம் தொழு
#58
தொழுவாள் பெறாளே தோள் வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி எழுவாள்
நறு மா மலர்க் கொன்றை நம் முன்னே நாளைப்
பெறுமாறு காணீர் என் பெண்
#59
பெண் இன்று அயலார் முன் பேதை பிறை_சூடி
கண் நின்ற நெற்றிக் கயிலைக்கோன் உள் நின்ற
காமம்தான் மீதூர நைவாட்கு உன் கார்க் கொன்றைத்
தாமம் தா மற்று இவளைச் சார்ந்து
#60
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்து அன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் கூர்ந்து உள்ளே
மூளத் தியானிப்பார் முன் வந்து நிற்பனவும்
காளத்தியார்-தம் கழல்
#61
தங்கு அழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலன் என்று
அம் கழல்கள் ஆர்ப்ப அனல் ஏந்திப் பொங்கு அகலத்து
ஆர்த்து ஆடு அரவம் அகன் கயிலை மேயாய் நீ
கூத்தாடல் மேவியவா கூறு
#62
கூறாய் நின் பொன் வாயால் கோலச் சிறு கிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே நீல் தாவும்
மஞ்சு அடையும் நீள் குடுமி வாள் அருவிக் காளத்திச்
செம் சடை எம் ஈசன் திறம்
#63
ஈசன் திறமே நினைந்து உருகும் எம்மைப் போல்
மாசு_இல் நிறத்த மடக் குருகே கூசி
இருத்தியாய் நீயும் இரும் கயிலை மேயாற்கு
அருத்தியாய்க் காமுற்றாயாம்
#64
காமுற்றாயாம் அன்றே காளத்தியான் கழற்கே
யாம் உற்றது உற்றாய் இரும் கடலே யாமத்து
ஞாலத்து உயிர் எல்லாம் கண் துஞ்சும் நள்ளிருள் கூர்
காலத்தும் துஞ்சாது உன் கண்
#65
கண்ணும் கருத்தும் கயிலாயரே எமக்கு என்று
எண்ணி இருப்பவன் யான் எப்பொழுதும் நண்ணும்
பொறி ஆடு அரவு அசைத்த பூதப் படையார்
அறியார்-கொல் நெஞ்சே அவர்
#66
நெஞ்சே அவர் கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருள்செய்வார் நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல் கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்
#67
அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத்து ஆண்டு புலர் காலத்து
ஒன்றாகி மீண்டு பல ஆகி நிற்கின்றான்
குன்றாத சீர்க் கயிலைக் கோ
#68
கோத்த மலர் வாளி கொண்டு அனங்கன் காளத்திக்
கூத்தன் மேல் அன்று குறித்து எய்யப் பார்த்தலுமே
பண்பு ஒழியாக் கோபத் தீச் சுற்றுதலும் பற்று அற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து
#69
வெம் திறல் வேல் பார்த்தற்கு அருள்செய்வான் வேண்டி ஒர்
செம் தறுகண் கேழல் திறம்புரிந்து வந்து அருளும்
கானவனாம் கோலம் யான் காணக் கயிலாயா
வானவர்-தம் கோமானே வா
#70
வாமான் தேர் வல்ல வயப் போர் விசயனைப் போல்
தாம் ஆர் உலகில் தவம் உடையார் தாம் யார்க்கும்
காண்டற்கு அரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத் தாம் பெற்றமையால் சென்று
#71
சென்று இறைஞ்சும் வானோர்-தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன் நிற்பர் நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க்கு இவர்
#72
இவரே முதல் தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவர் அல்லர் என்று இருக்க வேண்டா கவராதே
காதலித்து இன்று ஏத்துதிரேல் காளத்தி ஆள்வார் நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்
#73
ஆம் என்று நாளை உள என்று வாழ்விலே
தாம் இன்று வீழ்தல் தவம் அன்று யாம் என்றும்
இ மாய வாழ்வினையே பேணாது இரும் கயிலை
அம்மானைச் சேர்வது அறிவு
#74
அறியாமலேனும் அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் நெறிநின்று
நல் முகில் சேர் காளத்திநாதன் அடி பணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்
#75
போகின்ற மா முகிலே பொன் கயிலை வெற்பு அளவும்
ஏகு இன்று எமக்காக எம்பெருமான் ஏகினால்
உண்ணப்படா நஞ்சம் உண்டாற்கு என் உள் உறு நோய்
விண்ணப்பம்செய் கண்டாய் வேறு
#76
வேறேயும் காக்கத் தகுவேனே மெல்_இயலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே ஏறு ஏறும்
அன்பா அடியேற்கு அருளாது ஒழிகின்றது
என் பாவமே அன்றோ இன்று
#77
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யான் உனக்கு
என்றும் இளமதியே எம்பெருமான் என்றும் என்
உள் காதல் உண்மை உயர் கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பம்செய்
#78
செய்ய சடை முடி என் செல்வனை யான் கண்டு எனது
கையறவும் உள் மெலிவும் யான் காட்டப் பையவே
கார் ஏறு பூம் சோலைக் காளத்தி ஆள்வார்-தம்
போர் ஏறே இத் தெருவே போது
#79
போது நெறியனவே பேசி நின் பொன் வாயால்
ஊதத் தருவன் ஒளி வண்டே காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத்து எம்பெருமான்
வண் தார் மோந்து என் குழற்கே வா
#80
வாவா மணி வாயால் மாவின் தளிர் கோதிக்
கூவாது இருந்த குயில் பிள்ளாய் ஓவாதே
பூ மாம் பொழில் உடுத்த பொன் மதில் சூழ் காளத்திக்
கோமான் வர ஒருகால் கூவு
#81
கூவுதலும் பாற்கடலே சென்று அவனைக் கூடுக என்று
ஏவினான் பொன் கயிலை எம்பெருமான் மேவிய சீர்
அன்பால் புலிக்காலன் பாலன்-பால் ஆசையினால்
தன்-பால் பால் வேண்டுதலும் தான்
#82
தானே உலகு ஆள்வான் தான் கண்டவா வழக்கம்
ஆனான் மற்று ஆர் இதனை அன்று என்பார் வானோர்
களைகண் தானாய் நின்ற காளத்தி ஆள்வார்
வளை கொண்டார் மால் தந்தார் வந்து
#83
வந்து ஓர் அரக்கனார் வண் கயிலை மால் வரையைத்
தம் தோள் வலியினையே தாம் கருதி அந்தோ
இடந்தார் இடந்திட்டு இடார்க் கீழ் எலி போல்
கிடந்தார் வலி எலாம் கெட்டு
#84
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்-கொல்
பட்டதுவும் ஓராது பண்டு ஒருநாள் ஒட்டக்
கலந்து அரனார் காளத்தி ஆள்வார் மேல் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்
#85
தாம் பட்டது ஒன்றும் அறியார்-கொல் சார்வரே
காம்புற்ற செந்நெல் கயிலைக்கோன் பாம்பு உற்ற
ஆரத்தான் பத்தர்க்கு அருகு அணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது
#86
தொழுது நமனும் தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழு_இல் சீர்க் காளத்தி மன்னன் பழுது இலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்து அகலப் போ-மின்கள்
எத்தனையும் சேய்த்து ஆக என்று
#87
வென்று ஐந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் சென்று அங்கை
மான் உடையான் என்னை உடையான் வட கயிலை
தான் உடையான்-தன்னுடைய தாள்
#88
தாள் ஒன்றால் பாதாளம் ஊடுருவத் தண் விசும்பில்
தாள் ஒன்றால் அண்டம் கடந்து உருவித் தோள் ஒன்றால்
திக்கு அனைத்தும் போர்க்கும் திறல் காளி காளத்தி
நக்கனைத் தான் கண்ட நடம்
#89
நடம் ஆடும் சங்கரன் தாள் நான்முகனும் காணான்
படம் ஆடும் பாம்பு_அணையான் காணான் விடம் மேவும்
கார் ஏறு கண்டன் கயிலாயன்-தன் உருவை
யாரே அறிவார் இசைந்து
#90
இசையும் தன் கோலத்தை யான் காண வேண்டி
வசை_இல் சீர்க் காளத்தி மன்னன் அசைவு இன்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்து என்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு
#91
கூடி இருந்து பிறர் செய்யும் குற்றங்கள்
நாடித் தம் குற்றங்கள் நாடாதே வாடி
வட கயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அடகு அயில ஆரமுதை விட்டு
#92
விட்டு ஆவி போக உடல் கிடந்து வெம் தீயில்
பட்டு ஆங்கு வேமாறு பார்த்திருந்தும் ஒட்டாவாம்
கள் அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தியுள் நின்ற
வள்ளலைச் சென்று ஏத்த மனம்
#93
மனம் முற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனம் உற்றும் காமத்தே வீழ்வர் புனம் முற்று
இனக் குறவர் ஏத்தும் இரும் கயிலை மேயான்
தனக்கு உறவு செய்கலார் தாழ்ந்து
#94
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலி அதளும் சூழ் அரவும் சேர்ந்து
நெருக்கி வானோர் இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்கு
இருக்கும் மா கோலங்கள் ஏற்று
#95
ஏற்றின் மணியே அமையாதோ ஈர் சடை மேல்
வீற்றிருந்த வெண் மதியும் வேண்டுமோ ஆற்று அருவி
கல் மேல் பட்டார்க்கும் கயிலாயத்து எம்பெருமான்
என் மேல் படைவிடுப்பாற்கு ஈங்கு
#96
ஈங்கே வா என்று அருளி என் மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீ வந்து நின்றாலும் தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல
படுகின்ற வண்ணம் பணி
#97
பணியாது முன் இவனைப் பாவியேன் வாளா
கணியாது காலம் கழித்தேன் அணியும்
கரு மா மிடற்று எம் கயிலாயத்து எங்கள்
பெருமானது இல்லை பிழை
#98
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியேன் பித்தேறினால் போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் அழைத்தாலும்
என் ஆதரவே கொண்டு இன் பொழில் சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்
#99
வரமாவது எல்லாம் வட கயிலை மன்னும்
பரமா உன் பாதாரவிந்தம் சிரம் ஆர
ஏத்திடும் போதாக வந்து என் மனத்தில் எப்பொழுதும்
வாய்த்திடு நீ வேண்டேன் யான் மற்று
#100
மற்றுப் பலி பிதற்ற வேண்டா மட நெஞ்சே
கற்றைச் சடை அண்ணல் காளத்தி நெற்றிக்கண்
ஆராவமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதும் சொல்
*** கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி முற்றிற்று
@2 திருஈங்கோய்மலை எழுபது
#1
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்து ஏறி நொடியுங்கால்,
இன்னது என அறியா ஈங்கோயே ஓங்காரம்
மன் அது என நின்றான் மலை
#2
அந்த இள மாக் குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்து அவிழ் தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின்
இலை வளைக் கையால் கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலை வளைக் கை வில்லி மலை
#3
அம் பவள வாய் மகளிர் அம்மனைக்குத் தம் அனையைச்
செம்பவளம் தா என்னச் சீர்க் குறத்தி கொம்பின்
இறு தலையினால் கிளைக்கும் ஈங்கோயே நம் மேல்
மறுதலை நோய் தீர்ப்பான் மலை
#4
அரி கரியைக் கண்டவிடத்து அச் சலிப்பாய் ஓடப்
பிரிவு அரிய தன் பிடியைப் பேணிக் கரி பெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதம் சிறக்கும் ஈங்கோயே
மை அடுத்த கண்டன் மலை
#5
அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பல் மலர் கொண்டு ஏறிச் சொரிய
எரி_ஆடி கண்டு உகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமல் செற்றான் சிலம்பு
#6
ஆளி தொடர அரி தொடர ஆங்கு உடனே
வாளி கொடு தொடரும் மாக் குறவர் கோளின்
இடு சிலையினால் புடைக்கும் ஈங்கோயே நம் மேல்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று
#7
இடு தினை தின் வேழம் கடியக் குறவர்
வெடிபடு வெம் கவண்கல் ஊன்ற நெடுநெடென
நீண்ட கழை முத்து உதிர்க்கும் ஈங்கோயே ஏங்கு மணி
பூண்ட கழை ஏறி பொருப்பு
#8
ஈன்ற குறமகளிர்க்கு ஏழை முதுகுறத்தி
நான்ற கறிக்கு ஏறு அசலை நல் கிழங்கை ஊன்ற வைத்து
என் அன்னை உண் என்று எடுத்துரைக்கும் எங்கோயே
மின் அன்ன செம் சடையான் வெற்பு
#9
ஈன்ற குழவிக்கு மந்தி இரு வரை மேல்
நான்ற நறவத்தைத் தான் நணுகித் தோன்ற
விரலால் தேன் தோய்த்து ஊட்டும் ஈங்கோயே நம் மேல்
வரல் ஆம் நோய் தீர்ப்பான் மலை
#10
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப் போய்ப்
பண்டு இருந்த யாழ் முரலப் பைம் பொழில்-வாய்க் கண்டிருந்த
மா மயில்கள் ஆடி மருங்கு வரும் ஈங்கோயே
பூ மயிலி தாதை பொருப்பு
#11
ஊடிப் பிடி உறங்க ஒண் கதலி வண் கனிகள்
நாடிக் களிறு நயந்து எடுத்துக் கூடிக்
குணம் மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணம் மருட்டுங் கோள் அரவன் குன்று
#12
எய்யத் தொடுத்தோன் குறத்தி நோக்கு உற்றது எனக்
கையில் கணை களைந்து கன்னி மான் பையப் போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கு எயில்கள்
சென்று அன்று வென்றான் சிலம்பு
#13
ஏழை இள மாதே என்னொடு நீ போது என்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் வேழ
வினைக்கு வால்வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக் குவால் வீட்டுவிப்பான் வெற்பு
#14
ஏனம் உழுத புழுதி இன மணியைக்
கானவர்-தம் மக்கள் கனல் என்னக் கூனல்
இறுக்கம் கதிர் வெதுப்பும் ஈங்கோயே நம் மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை
#15
ஏனம் கிளைத்த இன பவள மா மணிகள்
கான் அல் எரி பரப்பக் கண்டு அஞ்சி யானை
இனம் இரிய முல்லை நகும் ஈங்கோயே நம் மேல்
வினை இரியச் செற்று உகந்தான் வெற்பு
#16
ஒரு கணையும் கேழல் உயிர் செகுத்துக் கையில்
இரு கணையும் ஆனை மேல் எய்ய அருகு அணையும்
ஆளரிதான் ஓட அரி வெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பு அரியான் குன்று
#17
ஓங்கிப் பரந்து எழுந்த ஒள் இலவம் தண் போதைத்
தூங்குவது ஓர் கொள்ளி எனக் கடுவன் மூங்கில்
தழை இறுத்துக்கொண்டு ஓச்சும் ஈங்கோயே சங்கக்
குழை இறுத்த காது உடையான் குன்று
#18
ஓடும் முகிலை உகிரால் இற ஊன்றி
மாடு புக வான் கை மிக மடுத்து நீடு அருவி
மாச் சீயம் உண்டு மனம் களிக்கும் ஈங்கோயே
கோச் சீயம் காண்பு அரியான் குன்று
#19
கண்ட கனி நுகர்ந்த மந்தி கரும் சுனை நீர்
உண்டு குளிர்ந்தில என்று ஊடிப்போய்க் கொண்டல்
இறைக் கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கு ஈறு கண்டான் மலை
#20
கரும் களிற்றின் வெண் கொம்பால் கல் உரல்-வாய் நல்லார்
பெருந்தினை வெண் பிண்டி இடிப்ப வரும் குறவன்
கைக் கொணரும் செந்தேன் கலந்து உண்ணும் ஈங்கோயே
மைக் கொணரும் கண்டன் மலை
#21
கனைய பல ஆம் கனிகள் கல் இலையர் தொக்க
நனைய கலத்து உரத்தில் ஏந்தி மனைகள்
வர விரும்பி ஆய் பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவு அரும்பு செம் சடையான் குன்று
#22
கடக் களிறு கண்வளரக் கார் நிற வண்டு ஆர்ப்பச்
சுடர்க் குழையார் பாட்டு எழவு கேட்டு மடக் கிளிகள்
கீதம் தெரிந்து உரைக்கும் ஈங்கோயே ஆல் கீழ் நால்
வேதம் தெரிந்து உரைப்பான் வெற்பு
#23
கறுத்த முலைச் சூல் பிடிக்குக் கார் யானை சந்தம்
இறுத்துக் கை நீட்டும் ஈங்கோயே செறுத்த
கட தடத்த தோல் உரிவைக் காப்பு அமையப் போர்த்த
விடம் மிடற்றினான் மருவும் வெற்பு
#24
கங்குல் இரை தேரும் காகோதரம் கேழல்
கொம்பினிடைக் கிடந்த கூர் மணியைப் பொங்கும்
உரும் என்று புற்று அடையும் ஈங்கோயே காமன்
வெருவு ஒன்றக் கண் சிவந்தான் வெற்பு
#25
கலவிக் களிறு அசைந்த காற்று எங்கும் காணாது
இலை கைக் கொண்டு ஏந்திக் கால் வீச உலவிச் சென்று
ஒண் பிடி காற்று ஏற்று உகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடி நீற்றான் மருவும் வெற்பு
#26
கன்னிப் பிடி முதுகில் கப்பு உருவம் உட்பருகி
அன்னைக் குடி வரலாறு அஞ்சியே பின்னரே
ஏன்று அருக்கி மா தவம் செய் ஈங்கோயே நீங்காத
மான் தரித்த கையான் மலை
#27
கள்ள முதுமறவர் காட்டகத்து மா வேட்டை
கொள் என்று அழைத்த குரல் கேட்டுத் துள்ளி
இனக் கவ் வலை பாய்ந்து ஓடும் ஈங்கோயே நந்தம்
மனக் கவலை தீர்ப்பான் மலை
#28
கல்லைப் புனம் மேய்ந்து கார்க் கொன்றைத் தார் போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும் புறவின் முல்லை அங்கண்
பல் அரும்ப மொய்த்து ஈனும் ஈங்கோயே மூ_எயிலும்
கொல் அரும்பக் கோல் கோத்தான் குன்று
#29
கல்லாக் குரங்கு பளிங்கின் கனி காட்ட
எல்லாக் குரங்கும் உடன் ஈண்டி வல்லே
இரும் துகிரால் கல் கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்த அராப் பூண்டான் பொருப்பு
#30
கண் கொண்டு அவிர் மணியின் நாப்பண் கரும் கேழல்
வெண் கோடு வீழ்ந்த வியன் சாரல் தண் கோடு
இளம்பிறை சேர் வான் கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பு இறை சேர் வான் கடுக்கும் வெற்பு
#31
காந்தள் அம் கைத்தலங்கள் காட்டக் களி மஞ்ஞை
கூந்தல் விரித்து உடனே கூத்தாடச் சாய்ந்து இரங்கி
ஏர்க் கொன்றை பொன் கொடுக்கும் ஈங்கோயே செம் சடை மேல்
கார்க் கொன்றை ஏன்றான் கடறு
#32
குறமகளிர் கூடிக் கொழும் தினைகள் குற்றி
நறவம் ஆக்கு அஞ்சு அகங்கள் நாடிச் சிறுகுறவர்
கை நீட்டி உண்ணக் களித்து உவக்கும் ஈங்கோயே
மை நீட்டும் கண்டன் மலை
#33
கூழை முதுமந்தி கோல் கொண்டு தேன் பாய
ஏழை இள மந்தி சென்றிருந்து வாழை
இலையால் தேன் உண்டு உவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால் தான் செற்றான் சிலம்பு
#34
கொல்லை இள வேங்கைக் கொத்து இறுத்துக்கொண்டு சுனை
மல்லை நீர் மஞ்சனமா நாட்டிக்கொண்டு ஒல்லை
இரும் கைக் களிறு ஏறும் ஈங்கோயே மேல் நோய்
வரும் கைக் களைவான் மலை
#35
கொவ்வைக் கனி வாய்க் குறமகளிர் கூந்தல் சேர்
கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் செவ்வை
எறித்த மலர் கொண்டு விடும் ஈங்கோயே அன்பர்
குறித்த வரம் தான் கொடுப்பான் குன்று
#36
கொடு வில் சிலை வேடர் கொல்லை புகாமல்
படு குழிகள் கல்லுதல் பார்த்து அஞ்சி நெடு நாகம்
தண்டு ஊன்றிச் செல்லும் சீர் ஈங்கோயே தாழ் சடை மேல்
வண்டு ஊன்றும் தாரான் மலை
#37
கோங்கின் அரும்பு அழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கை மணி நீழல் விளையாடி வேங்கை
வர அதனைக் கண்டு இரியும் ஈங்கோயே தீங்கு
வர அதனைக் காப்பான் மலை
#38
சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து யானை
மம் தண் மடப் பிடியின் வாய்க் கொடுப்ப வந்து அதன்
கண் களிக்கத் தான் களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண் களிக்க நஞ்சுண்டான் வெற்பு
#39
சந்தின் இலையதனுள் தண் பிண்டி தேன் கலந்து
கொந்தி இனிது உண்ணக் குறமகளிர் மந்தி
இள மகளிர் வாய்க் கொடுத்து உண் ஈங்கோயே வெற்பின்
வள மகளிர்_பாகன் மலை
#40
சாரல் குறத்தியர்கள் தண் மருப்பால் வெண் பிண்டி
சேரத் தருக்கி மதுக் கலந்து வீரத்
தமர் இனிதா உண்ணும் சீர் ஈங்கோயே வெற்பின்
குமரன் முதுதாதையார் குன்று
#41
தாய் ஓங்கித் தாம் அடரும் தண் சாரல் ஒண் கானம்
வேய் ஓங்கி முத்தம் எதிர் பிதுங்கித் தீ ஓங்கிக்
கண் கன்றித் தீ விளைக்கும் ஈங்கோயே செம் சடை மேல்
வண் கொன்றைத் தாரான் வரை
#42
செடி முட்டச் சிங்கத்தின் சீற்றத் தீக்கு அஞ்சிப்
பிடி அட்டம் மாக் களிறு போந்து கடம் முட்டி
என்னே சீ என்னும் சீர் ஈங்கோயே ஏந்து அழலில்
பொன் நேர் அனையான் பொருப்பு
#43
சுனை நீடு தாமரையின் தாது அளைந்து சோதிப்
புனை நீடு பொன் நிறத்த வண்டு மனை நீடி
மன்னி மணம் புணரும் ஈங்கோயே மா மதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு
#44
செந்தினையின் வெண் பிண்டி பச்சைத் தேனால் குழைத்து
வந்த விருந்து ஊட்டும் மணிக் குறத்தி பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச் சிறப்பு உரைக்கும் ஈங்கோயே
மாக் கலைகள் வைத்தான் மலை
#45
தடம் குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம் புகுத்து அங்கு இன் நறவம் மாந்தி உடன் கலந்து
மாக் குரவை ஆடி மகிழ்ந்து வரும் ஈங்கோயே
கோக் குரவை ஆடி கொழும் குன்று
#46
தாமரையின் தாள் தகைத்த தாமர் ஐ கள் தாள் தகையத்
தாம் அரையில் பாய்ந்து உகளும் தண் புறவில் தா மரையின்
ஈட்டம் புலி சிதறும் ஈங்கோயே எவ் உயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை
#47
தெள் அகட்ட பூம் சுனைய தாமரையின் தே மலர் வாய்
வள்ள வட்டப் பாழி மடல் ஏறி வெள் அகட்ட
கார் ஆமை கண் படுக்கும் ஈங்கோயே வெம் கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு
#48
தேன் பலவின் வான் சுளைகள் செம் முகத்த பைம் குரங்கு
தான் கொணர்ந்து மக்கள் கையில் கொடுத்து வான் குணங்கள்
பாராட்டி ஊட்டும் சீர் ஈங்கோயே பாங்கு அமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு
#49
தேன் மருவு பூம் சுனைகள் புக்குச் செழும் சந்தின்
கான் அமர் கல் பேரழகு கண் குளிர மேல் நின்று
அருவிகள் தாம் வந்து இழியும் ஈங்கோயே வானோர்
வெருவு கடல் நஞ்சுண்டான் வெற்பு
#50
தோகை மயில் இனங்கள் சூழ்ந்து மணி வரை மேல்
ஓகை செறி ஆயத்தோடு ஆட நாகம்
இன வளையில் புக்கு ஒளிக்கும் ஈங்கோயே நம் மேல்
வினை வளையச் செற்று உகந்தான் வெற்பு
#51
நறவம் நனி மாந்தி நள்ளிருள்-கண் ஏனம்
இறவில் இயங்குவான் பார்த்துக் குறவர்
இறைத்து வலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத் துவலைச் செம் சடையான் வெற்பு
#52
நாக முழை நுழைந்த நாகம் போய் நல் வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று நாகம்தான்
மாக் கையால் மஞ்சு உரிஞ்சும் ஈங்கோயே ஓங்கி செம்
தீக் கையால் ஏந்தி சிலம்பு
#53
நாகம் களிறு நுங்க நல் உழுவை தாம் மரையின்
ஆகம் தழுவி அசைவு எய்த மேகம்
கருவிடைக் கணீர் சோரும் ஈங்கோயே ஓங்கு
பொரு விடைக்-கண் ஊர்வான் பொருப்பு
#54
பணவ நிலைப் புற்றின் பழஞ்சோற்று அமலை
கணவன் இடந்து இட்ட கட்டி உண வேண்டி
எண்கு அங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செம் சடை மேல்
வண் கங்கை ஏற்றான் மலை
#55
பன்றி பருக் கோட்டால் பார் உழுத பைம் புழுதித்
தென்றி மணி கிடப்பத் தீ என்று கன்றிக்
கரி வெருவிக் கான் படரும் ஈங்கோயே வானோர்
மருவு அரியான் மன்னும் மலை
#56
பாறை மிசைத் தன் நிழலைக் கண்டு பகடு என்று
சீறி மருப்பு ஒசித்த செம் முக மாத் தேறிக்கொண்டு
எல்லே பிடி என்னும் ஈங்கோயே மூ_எயிலும்
வில்லே கொடு வெகுண்டான் வெற்பு
#57
பிடி பிரிந்த வேழம் பெரும் திசை நான்கு ஓடிப்
படி முகிலைப் பல்காலும் பார்த்திட்டு இடரா
இரு மருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குரு அருள் குன்றாய் நின்றான் குன்று
#58
பொருத கரியின் முரி மருப்பின் போந்து
சொரி முத்தைத் தூ நீர் என்று எண்ணிக் கருமந்தி
முக்கி விக்கி நக்கு இருக்கும் ஈங்கோயே மூ_எயிலும்
திக்கு உகக்கச் செற்றான் சிலம்பு
#59
மற வெம் களிற்றின் மருப்பு உகுத்த முத்தம்
குறவர் சிறார் குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில் தீ அட்டு உண்ணும் ஈங்கோயே மூன்று
வள வெயில் தீ இட்டான் மலை
#60
மலை திரிந்த மாக் குறவன் மான் கொணர நோக்கிச்
சிலை_நுதலி சீறிச் சிலைத்துக் கலை பிரிய
இ மான் கொணர்தல் இழுக்கு என்னும் ஈங்கோயே
மெய் மான் புணர்ந்த கையான் வெற்பு
#61
மரை அதளும் ஆடும் மயில் இறகும் வேய்ந்த
புரை இதணம் பூங்கொடியார் புக்கு நுரை சிறந்த
இன் நறவு உண்டு ஆடி இசை முரலும் ஈங்கோயே
பொன் நிற வெண்_நீற்றான் பொருப்பு
#62
மலையர் கிளி கடிய மற்று அப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு சிலையை
இருந்து எடுத்துக் கோல் தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்து இடத்துக் கொண்டான் பொருப்பு
#63
மத்தக் கரி முகத்தை வாள் அரிகள் பீற ஒளிர்
முத்தம் பனி நிகர்க்கும் மொய்ம்பிற்றால் அத்தகைய
ஏனல் புனம் நீடும் ஈங்கோயே தேங்கு புனல்
கூனல் பிறை அணிந்தான் குன்று
#64
மந்தி இனங்கள் மணி வரையின் உச்சி மேல்
முந்தி இருந்து முறைமுறையே நந்தி
அளைந்து ஆடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்து ஓடச் செற்றான் மலை
#65
மந்தி மக இனங்கள் வண் பலவின் ஒண் சுளைக்-கண்
முந்திப் பறித்த முறி-அதன் உள் சிந்திப்போய்த்
தேன் ஆறு பாயும் சீர் ஈங்கோயே செம் சடை மேல்
வான் ஆறு வைத்தான் மலை
#66
முள் ஆர்ந்த வெள் இலவம் ஏறி வெறியாது
கள் ஆர்ந்த பூப் படியும் கார் மயில் தான் ஒள் ஆர்
எரி நடுவுள் பெண் கொடியார் ஏய்க்கும் ஈங்கோயே
புரி நெடு நூல் மார்பன் பொருப்பு
#67
வளர்ந்த இளம் கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல்
எல்லிப் புக நுழையும் ஈங்கோயே தீம் கருப்பு_
வில்லிக்குக் கூற்று ஆனான் வெற்பு
#68
வான மதி தடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண் ஏறித் தான் அங்
கிருந்து உயரக் கை நீட்டும் ஈங்கோயே நம் மேல்
வரும் துயரம் தீர்ப்பான் மலை
#69
வேய் வனத்துள் யானை தினை கவர வேறு இருந்து
காய் வனத்தே வேடன் கணை விசைப்ப வேய் அணைத்து
மாப் பிடி முன் ஒட்டும் ஈங்கோயே மறை கலிக்கும்
பூப் பிடி பொன் தாளான் பொருப்பு
#70
வழகு இதழ்க் காந்தள் மேல் வண்டு இருப்ப ஒண் தீ
முழுகியது என்று அஞ்சி முதுமந்தி பழகி
எழுந்தெழுந்து கை நெரிக்கும் ஈங்கோயே திங்கள்
கொழுந்து எழுந்த செம் சடையான் குன்று
** திருஈங்கோய் மலை எழுபது முற்றிற்று
@3 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
#1
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்து உடன்
பொரு கடல் முகந்து கரு முகில் கணம் நல்
பட அரவு ஒடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்து இழி அருவி குணகடல்
மடுக்கும் காவிரி மடந்தை வார் புனல் 5
உடுத்த மணி நீர் வலஞ்சுழி
அணி நீர்க் கொன்றை அண்ணலது அடியே
#2
அடிப் போது தம் தலை வைத்து அவ் வடிகள் உன்னிக்
கடிப் போது கைக்கொண்டார் கண்டார் முடிப் போதா
வாள் நாகம் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொன் கழல்
#3
கழல் வண்ணமும் சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல் வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவர் அம் தாமரையின்
நிழல் வண்ணம் பொன் வண்ணம் நீர் நிற வண்ணம் நெடிய வண்ணம்
அழல் வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே
#4
அண்ணலது பெருமை கண்டனம் கண்_நுதல்
கடவுள் மன்னிய தடம் மல்கு வலஞ்சுழிப்
பனிப் பொருள் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழ் ஒளி முறுவல் தே மொழிச் செவ் வாய்த்
திருந்து இரும் குழலியைக் கண்டு 5
வருந்தி என் உள்ளம் வந்த அப்போதே
#5
போது எலாம் பூம் கொன்றை கொண்டிருந்த பூம் கொன்றைத்
தாது எலாம் தன் மேனி தைவருமால் தீது_இல்
மறைக் கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக் கண்டம் கண்டு அணைந்த பெண்
#6
பெண் கொண்டிருந்து வருந்தும்-கொலாம் பெருமான் திருமால்
வண் கொண்ட சோலை வலஞ்சுழியான் மதி சூடி நெற்றிக்
கண் கொண்ட கோபம் கலந்தன போல் மின்னிக் கார்ப் புனத்துப்
பண் கொண்டு வண்டு இனம் பாட நின்று ஆர்த்தன
#7
முகில் கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணி நடை மடப் பிடி அருகு வந்து அணைதரும்
சாரல் தண் பொழில் அணைந்து சேரும்
தடம் மாசு தழீஇயது அகலிடம் துடைத்த 5
தேன் உகு தண் தழை தெய்வம் நாறும்
சரு வரி வாரல் எம் பெரும நீர் மல்கு
சடை முடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணி திகழ் தோற்றத்து அம் கயத்து எழுந்த
மணி நீர்க் குவளை அன்ன 10
அணி நீர்க் கரும் கண் ஆய்_இழை பொருட்டே
#8
பொருள் தக்கீர் சில் பலிக்கென்று இல் புகுந்தீரேனும்
அருள் தக்கீர் யாது நும் ஊர் என்றேன் மருள் தக்க
மா மறையம் என்றார் வலஞ்சுழி நம் வாழ்வு என்றார்
தாம் மறைந்தார் காணேன் கைச் சங்கு
#9
சங்கம் புரளத் திரை சுமந்து ஏறும் கழி அருகே
வங்கம் மலியும் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழி ஆறு
அங்கம் புலன் ஐந்தும் ஆகிய நான்மறை முக்கண் நக்கன்
பங்கு அன்று இருவர்க்கு ஒரு வடிவு ஆகிய பாவையையே
#10
பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளம்கொண்ட சூழலும் கள்ளக்
கரும் கண் போன்ற காவியும் நெருங்கி 5
அவளே போன்றது அன்றே தவளச்
சாம்பல் அம் பொடி சாந்து எனத் தைவந்து
தேம்பல் வெண் பிறை சென்னி மிசை வைத்த
வெள் ஏற்று உழவன் வீங்கு புனல் வலஞ்சுழி
வண்டு இனம் பாடும் சோலைக் 10
கண்ட அம்ம அக் கடி பொழில் தானே
#11
தான் ஏறும் ஆன் ஏறு கைதொழேன் தன் சடை மேல்
தேன் ஏறு கொன்றைத் திறம் பேசேன் வான் ஏறும்
மை ஆரும் சோலை வலஞ்சுழியான் என்-கொல் என்
கை ஆர் வளை கவர்ந்தவாறு
#12
ஆறு கற்றைச் சடைக் கொண்டு ஒர் ஒற்றைப் பிறை சூடி மற்றைக்
கூறு பெண்ணாயவன் கண் ஆர் வலஞ்சுழிக் கொங்கு தங்கு
நாறு தண் கொம்பர்_அன்னீர்கள் இன்னே நடந்தே கடந்தார்
சீறு வென்றிச் சிலைக் கானவர் வாழ்கின்ற சேண் நெறியே
#13
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ் நூல் சீறியாழ்ப் பாண
பொய்கை ஊரன் புது மணம் புணர்தர
மூவோம் மூன்று பயன் பெற்றனமே
நீ அவன் 5
புனை தார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமல் பேச வன்மையில்
வான் அரமகளிர் வான் பொருள் பெற்றனை
அவரேல் 10
எங்கையர் கொங்கைக் குங்குமம் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன் அமர்ந்து உறையும் அணி நீர் வலஞ்சுழிச்
சுரும்பு இவர் நற வயல் சூழ்ந்து எழு கரும்பின்
தீ நீர் அன்ன வாய் நீர் சோரும் 15
சிலம்பு குரல் சிறுபறை பூண்ட
அலம்பு குரல் கிண்கிணிக் களிறு பெற்றனனே
#14
தனம் ஏறிப் பீர் பொங்கித் தன் அங்கம் வேறாய்
மனம் வேறுபட்டு ஒழிந்தாள் மாதோ இனம் ஏறிப்
பாடாலம் வண்டு அலம்பும் பாய் நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டு அணைந்த கொம்பு
#15
கொம்பு ஆர் குளிர் மறைக்காடனை வானவர் கூடி நின்று
நம்பா என வணங்கப்பெறுவானை நகர் எரிய
அம்பு ஆய்ந்தவனை வலஞ்சுழியானை அண்ணாமலை மேல்
வம்பு ஆர் நறும் கொன்றைத் தார்_உடையானை வணங்குதுமே
** திருவலஞ்சுழி மும்மணிக்கோவை முற்றிற்று
@4 திருஎழுகூற்றிருக்கை
#1
ஒர் உடம்பு ஈர் உரு ஆயினை ஒன்று புரிந்து
ஒன்றின் ஈர் இதழ்க் கொன்றை சூடினை
மூ இலைச் சூலம் ஏந்தினை
சுடரும் சென்னி மீமிசை
இரு கோட்டு ஒரு மதி எழில்பெற மிலைச்சினை 5
ஒரு கணை இரு தோள் செவியுற வாங்கி
மூ_எயில் நால் திசை முரண் அரண் செகுத்தனை
ஆற்ற முன் நெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க்கு உறுதி ஆயினை 10
அ நெறி ஒன்று
மனம்வைத்து இரண்டு நினைவு இலோர்க்கு
முன் நெறி உலகம் காட்டினை அ நெறி
நான்கு என ஊழி தோற்றினை
சொல்லும் ஐம் தலை அரவு அசைத்து அசைந்தனை 15
நான்முகன் மேல் முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவ நின் ஆதி காணாது இருவர்
மூ_உலகு உழன்று நால் திசை ஊழிதர 20
ஐம் பெரும் குன்றத்து அழலாய்த் தோன்றினை
ஆறு நின் சடையது ஐந்து நின் நிலையது
நான்கு நின் வாய்மொழி மூன்று நின் கண்ணே
இரண்டு நின் குழையே ஒன்று நின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க 25
இரும் களிற்று உரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழிலாளர்க்கு உறுதி பயந்தனை
ஏழில் இன் நரம்பு இசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில் 30
விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்று இருந்து அற நெறி
நால்வர் கேட்க நன்கு இனிது உரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர் மாக்
கொன்று அங்கு இரு வரை எறிந்த ஒருவன் 35
தாதை ஒர் உடல் திருவடி வாயினை
தருமம் மூ வகை உலகம் உணரக்
கூறுவை நால் வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணையவனொடு காலனை அடர்த்தனை 40
அறு வகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழ் இன் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டு அவன்-தலை அளி பொருந்தினை
ஆறிய சிந்தை ஆகி ஐங்கதித்
தேரொடு திசை செல விடுத்தோன் 45
நால் தோள் நலனே நந்தி பிங்கு இருடி என்று
ஏற்ற பூதம் மூன்றுடன் பாட
இரு கண் மொந்தை ஒரு கணம் கொட்ட
மட்டு விரி அலங்கல் மலை_மகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால் 50
சிறியேன் சொன்ன அறிவு_இல் வாசகம்
வறிது எனக் கொள்ளாயாகல் வேண்டும்
வெறி கமழ் கொன்றையொடு வெண் நிலவு அணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியில் பரவுவன் பணிந்தே 55
#2
பணிந்தேன் நின் பாதம் பரமேட்டீ பால் நீறு
அணிந்து ஆலவாயில் அமர்ந்தாய் தணிந்து என் மேல்
மெய் எரிவு தீரப் பணித்து அருளு வேதியனே
ஐயுறவு ஒன்று இன்றி அமர்ந்து
** திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று
@5 பெருந்தேவபாணி
#1
சூல_பாணியை சுடர் தரு வடிவனை
நீல கண்டனை நெற்றி ஓர் கண்ணனை
பால் வெண் நீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறை மிடற்று அண்ணலை
நூல் அணி மார்பனை நுண்ணிய கேள்வியை 5
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேல் உடைக் கையனை விண் தோய் முடியனை
ஞாலத் தீயினை நாத்-தனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
காலம் ஆகிய கடி கமழ் தாரனை 10
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச்சுவரனை
கீதம் பாடியை கிளர் பொறி அரவனை
போது அணி கொன்றை எம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை 15
சாதி வானவர்-தம் பெருமான்தனை
வேத விச்சையை விடை உடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத்து ஒருவனை
நாதன் ஆகிய நல் நெறிப் பொருளினை
மாலை தான் எரி மயானத்து ஆடியை 20
வேலை நஞ்சினை மிக அமுது ஆக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அரும் தவ முதல்வனை
ஆயிரம் நூற்றுக்கு அறிவு அரியானை
பேய் உருவு தந்த பிறை அணி சடையனை 25
மாசறு சோதியை மலை_மகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கு அரும் காலனைச்
சீரிய அடியால் செற்று அருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடு உடை ஆற்றை பிராணி தலைவனை 30
நீடிய நிமலனை நிறை மறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறு_இல் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத்து உள்ளனை
தாது அணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை 35
சூழ் சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார் மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீது அமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெரும் தலை நிறைவது ஆகக் 40
கரு மன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உரு ஆர் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆவம் உண் நஞ்சம் அமுதம் ஆக்கினை 45
ஈரம்_இல் நெஞ்சத்து இராவணன்-தன்னை
வீரம் அழித்து விறல் வாள் கொடுத்தனை
திக்கு அமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே 50
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே 55
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன் நெறி நீயே
மால் வரை நீயே மறி கடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே 60
விண் முதல் பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கு அரும் தன்மைத் தொல்லோய் நீயே
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அரும் தமிழ் பழித்தனன் அடியேன் 65
ஈண்டிய சிறப்பின் இணை அடிக் கீழ் நின்று
வேண்டும் அது இனி வேண்டுவன் விரைந்தே
#2
விரைந்தேன் மற்று எம்பெருமான் வேண்டியது வேண்டாது
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்து என் மேல்
சீற்றத்தைத் தீர்த்து அருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் நீ செய்யும் அருள்
** பெருந்தேவபாணி முற்றிற்று
@6 கோபப் பிரசாதம்
#1
தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே
வெண் திரைக் கரும் கடல் மேல் துயில்கொள்ளும்
அண்டவாணனுக்கு ஆழி அன்று அருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன்-தன்னை வான்சிரம் அரிந்தும் 5
கான வேடுவன் கண் பரிந்து அப்ப
வான நாடு மற்று அவற்கு அருளியும்
கடி படி பூம் கணைக் காமனார் உடல்
பொடிபட விழித்தும் பூதலத்து இசைந்த
மானுடன் ஆகிய சண்டியை 10
வானவன் ஆக்கியும்
மறி கடல் உலகின் மன் உயிர் கவரும்
கூற்றுவன்-தனக்கு ஓர் கூற்றுவன் ஆகியும்
கடல் படு நஞ்சம் கண்டத்து அடக்கியும்
பரு வரை சிலையாப் பாந்தள் நாணாத் 15
திரிபுரம் எரிய ஒரு கணை துரந்தும்
கல் கொண்டு எறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண்டு இன் அருள் தான் மிக அளித்தும்
கூற்று எனத் தோன்றியும் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத்து ஈர் உரி போர்த்தும் 20
நெற்றிக்கண்ணும் நீள் புயம் நான்கும்
நற்றா நந்தீச்சுவரற்கு அருளியும்
அறிவினை ஓரா அரக்கனார் உடல்
நெறுநெற இறுதர ஒரு விரல் ஊன்றியும்
திருவுருவத்தொடு செம் கண் ஏறும் 25
அரியன திண் திறல் அசுரனுக்கு அருளியும்
பல் கதிர் உரவோன் பல் கெடப் பாய்ந்து
மல்கு பிருங்கு இருடிக்கு மா வரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகை கெடச் சிதைத்து
மிக்க வரம் நந்திமாகாளர்க்கு அருளியும் 30
செம் தீக்கடவுள்-தன் கரதலம் செற்றும்
பைம் தார் நெடும் படை பார்த்தற்கு அருளியும்
கதிர் மதி-தனை ஓர் கால் பயன் கெடுத்தும்
நிதி பயில் குபேரற்கு நீள் நகர் ஈந்தும்
சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும் 35
மறை பயில் மார்க்கண்டேயனுக்கு அருளியும்
தாருகன் கொல்ல முன் காளியைப் படைத்தும்
சீர் மலி சிலந்திக்கு இன் அரசு அளித்தும்
கார் மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழ் இருந்து அற நெறி அருளியும் 40
இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதம் கூறும் காலைக்
கடி மலர் இருந்தோன் கார்க் கடல் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன் நகர் காப்போன்
உரைப்போர் ஆகிலும் ஒண் கடல் மா நீர் 45
அங்கை கொண்டு இறைக்கும் ஆதர் போன்று உளர்
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத்து அறிவு_இல் சிந்தைக்
கிருமி நாவால் கிளத்தும் தரமே அதாஅன்று
ஒரு வகைத் தேவரும் இரு வகைத் திறமும் 50
மூ வகைக் குணமும் நால் வகை வேதமும்
ஐ வகைப் பூதமும் அறு வகை இரதமும்
எழு வகை ஓசையும் எண் வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண் மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை 55
இன்பனை நினைவோர்க்கு என்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்
தஞ்சம் என்று ஒழுகும் தன் அடியார்-தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடு உயர்
செம் தழல் பவளச் சேணுறு வரையனை 60
முக்கண் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளம் கைவிட்டு உள்ளமது உருகிக்
கலந்து கசிந்து தன் கழல் இணை அவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ் சிவலோகனைப் 65
பாவ நாசனைப் படர் ஒளி உருவனை
வேய் ஆர் தோளி மெல்_இயல் கூறனைத்
தாயாய் மன் உயிர் தாங்கும் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லும் கடலும் ஆகிய கண்டனைத் 70
தோற்றம் நிலை ஈறு ஆகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக் கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்று அறிவு அரியவன் 75
தனை முன் விட்டுத் தாம் மற்று நினைப்போர்
மா முயல் விட்டுக்
காக்கைப் பின் போம் கலவர் போலவும்
விளக்கு அங்கு இருக்க மின்மினி கவரும்
அளப்பு அரும் சிறப்பில் ஆதர் போலவும் 80
கச்சம் கொண்டு கடும் தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவர் என்று எண்ணிப்
பிச்சரைப் போல ஓர்
ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று 85
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்து உன்
தலை மீன் தலை எண் பலம் என்றால் அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மத்திரம் ஆகுவர் மா நெறி கிடப்ப ஓர்
சித்திரம் பேசுவர் தேவர் ஆகில் 90
இன்னோர்க்கு ஆய்ந்தனர் இன்னோர்க்கு அருளினர்
என்று அறிய உலகின்
முன்னே உரைப்பது இல்லை ஆகிலும்
மாடு போலக் கூடி நின்று அழைத்தும்
மாக்கள் போல வேட்கை ஈடுண்டும் 95
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்று இரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னே கொண்டு ஏகாக் கூற்றம்
தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே 100
** கோபப்பிரசாதம் முற்றிற்று
@7 கார் எட்டு
#1
அரவம் அரைக்கு அசைத்த அண்ணல் சடை போல்
விரவி எழுந்து எங்கும் மின்னி அரவு இனங்கள்
அச்சம்கொண்டு ஓடி அணைய அடைவுற்றே
கைச் சங்கம் போல் முழங்கும் கார்
#2
மை ஆர் மணி மிடறு போல் கருகி மற்று அவன்-தன்
கை ஆர் சிலை விலகிக் காட்டிற்றே ஐ வாய்
அழல் அரவம் பூண்டான் அவிர் சடை போல் மின்னிக்
கழல் அரவம் காண்புற்ற கார்
#3
ஆல் அமர் கண்டத்து அரன்-தன் மணி மிடறும்
கோலக் குழல் சடையும் கொல் ஏறும் போல்வ
இருண்டு ஒன்று மின் தோன்றி அம்பு ஒன்று அவ் வானம்
கருண்டு ஒன்று கூடுதலின் கார்
#4
இருள் கொண்ட கண்டத்து இறைவன்-தன் சென்னிக்
குருள் கொண்ட செம் சடை போல் மின்னிச் சுருள் கொண்டு
பாம்பு இனங்கள் அஞ்சிப் படம் ஒடுங்க ஆர்த்ததே
காம்பு இனங்கள் தோள் ஈயக் கார்
#5
கோடு அரவம் கோடல் அரும்பக் குரு மணி கான்று
ஆடு அரவம் எல்லாம் அளை அடைய நீடு அரவப்
பொற்பு அகலம் பூண்டான் புரி சடை போல் மின்னிற்றே
கற்பு அகலம் காண்புற்ற கார்
#6
பாரும் பனி விசும்பும் பாசுபதன் பல் சடையும்
ஆரும் இருள் கீண்டு மின் விலகி ஊரும்
அரவம் செல அஞ்சும் அம்_சொலார் காண்பார்
கர இந்து அம் என்பார் அக் கார்
#7
செழும் தழல் வண்ணன் செம் சடை போல் மின்னி
அழுந்தி அலர் போல் உயர எழுந்து எங்கும்
ஆவி சோர் நெஞ்சினரை அன்பு அளக்க உற்றதே
காவி சேர் கண்ணாய் அக் கார்
#8
காந்தள் மலரக் கமழ் கொன்றை பொன் சொரியப்
பூம் தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்து ஒளி சேர்
அண்டம் போல் மீது இருண்ட ஆதியான் ஆய் மணி சேர்
கண்டம் போல் மீது இருண்ட கார்
** கார் எட்டு முற்றிற்று
@8 போற்றித் திருக்கலிவெண்பா
#1
திருத் தங்கு மார்பின் திருமால் வரை போல்
எருத்தத்து இலங்கிய வெண் கோட்டுப் பருத்த
#2
குறுத் தாள் நெடு மூக்கின் குன்றிக் கண் நீல
நிறத்தால் பொலிந்து நிலம் ஏழ் உறத் தாழ்ந்து
#3
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலை போற்றி அன்றியும்
#4
புண்டரிகத்து உள் இருந்த புத்தேள் கழுகு உருவாய்
அண்டர் அண்டம் ஊடுருவ ஆங்கு ஓடிப் பண்டு ஒருநாள்
#5
காணான் இழியக் கனக முடி கவித்துக்
கோணாது நின்ற குறி போற்றி நாணாளும்
#6
பேணிக் காலங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதில் கடவூர்க் காண
#7
வரத்தில் பெரிய வலி தொலையக் காலன்
உரத்தில் உதைத்த உதை போற்றி கரத்தான் மே
#8
வெற்பன் மடப் பாவை கொங்கை மேல் குங்குமத்தின்
கற்பு அழியும் வண்ணம் கசிவிப்பான் பொற்பு உடைய
#9
வாமன் மகனாய் மலர்க் கணை ஒன்று ஓட்டிய அக்
காமன் அழகு அழித்த கண் போற்றி தூமப்
#10
படமெடுத்த வாள் அரவம் பார்த்து ஆடப் பற்றி
விடம் எடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்
#11
முடங்க வலிக்கும் முயலகன்-தன் மொய்ம்பை
அடங்க மிதித்த அடர் போற்றி நடுங்கத்
#12
திருமால் முதலாய தேவாசுரர்கள்
கரு மால் கடல் நாகம் பற்றிக் குரு மாற
#13
நீலம் உண்ட நீள் முகில் போல் நெஞ்சு அழல வந்து எழுந்த
ஆலம் உண்ட கண்டம் அது போற்றி சால மண்டிப்
#14
போர் உகந்த வானவர்கள் புக்கு ஒடுங்க மிக்கு அடர்க்கும்
தாருகன்-தன் மார்பில் தனிச் சூலம் வீரம்
#15
கொடுத்து எறியும் மாகாளி கோபம் தவிர
எடுத்த நடத்து இயல்பு போற்றி தடுத்து
#16
வரை எடுத்த வாள் அரக்கன் வாய் ஆறு உதிரம்
நிரை எடுத்து நெக்கு உடலம் இற்றுப் புரை எடுத்த
#17
பத்து அனைய பொன் முடியும் தோள் இருபதும் நெரிய
மெத்தெனவே வைத்த விரல் போற்றி அத் தகைத்த
#18
வானவர்கள் தாம் கூடி மந்திரித்த மந்திரத்தை
மேல் நவில ஓடி விதிர்விதிர்த்துத் தானவருக்கு
#19
ஒட்டிக் குறளை உரைத்த அயன் சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல் போற்றி மட்டித்து
#20
வாலுகத்தால் நல் இலிங்க மா வகுத்து மற்று அதன் மேல்
பால் உகுப்பக் கண்டு பதைத்து ஓடி மேல் உதைத்து அங்கு
#21
ஓட்டிய வன் தாதை இரு தாள் எறிந்து உயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்-கண்
#22
பொன் கோயில் உள் இருத்திப் பூ மாலை போனகமும்
நல் கோலம் ஈந்த நலம் போற்றி நிற்க
#23
வலம் தரும் மால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்து அரு மால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச்
#24
சக்கரத்தால் ஈர்ந்து அரி-தன் தாமரைக் கண் சாத்துதலும்
மிக்கு அஃது அன்று ஈந்த விறல் போற்றி அக்கணமே
#25
நக்கு இருந்த நாமகளை மூக்கரிந்து நால் வேதம்
தொக்கு இருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கு இருந்த
#26
அங்கைத் தலத்தே அணி மாலை ஆங்கு அளித்த
செம் கைத் திறத்த திறல் போற்றி திங்களைத்
#27
தேய்த்ததுவே செம்பொன் செழும் சடை மேல் சேர்வித்து
வாய்த்து இமையோர்-தம்மை எல்லாம் வான் சிறையில் பாய்த்திப்
#28
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரம் அன்று அளித்த வலி போற்றி புரம் எரித்த
#29
அன்று உய்ந்த மூவர்க்கு அமர்ந்து வரம் அளித்து
நின்று உய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று
#30
நடை காவல் மிக்க அருள் கொடுத்துக் கோயில்
கடை காவல் கொண்டவா போற்றி விடை காவல்
#31
தானவர்கட்கு ஆற்றாது தன் அடைந்த நன்மை விறல்
வானவர்கள் வேண்ட மயில் ஊரும் கோனவனைச்
#32
சேனாபதியாகச் செம்பொன் முடி கவித்து
வான் ஆளவைத்த வரம் போற்றி மேனாள்
#33
அதிர்த்து எழுந்த அந்தகனை அண்டர் அண்டம் உய்யக்
கொதித்து எழுந்த சூலத்தால் கோத்துத் துதித்து அங்கு
#34
அவன் இருக்கும் வண்ணம் அருள் கொடுத்து அங்கு ஏழேழ்
பவம் அறுத்த பாவனைகள் போற்றி கவை முகத்த
#35
பொன் பாகரைப் பிளந்து கூறு இரண்டாப் போகட்டு
மென் பாசறைப் போக மேல் விலகி நில் பால
#36
மும்மதத்து வெண் கோட்டுக் கார் நிறத்துப் பைம் தறுகண்
வெம் மதத்த வேகத்தால் மிக்கு ஓடி விம்மி
#37
அடர்த்து இரைத்துப் பாயும் அடு களிற்றைப் போக
எடுத்து உரித்துப் போர்த்த இசை போற்றி தொடுத்து அமைத்த
#38
நாள் மாலை கொண்டு அணிந்த நால்வர்க்கு அன்று ஆல் நிழல் கீழ்
வாள் மாலை ஆகும் வகை அருளித் தோள் மாலை
#39
விட்டு இலங்கத் தக்கிணமே நோக்கி வியந்த குணம்
எட்டு இலங்க வைத்த இறை போற்றி ஒட்டி
#40
விசையன் விசை அளப்பான் வேடு உருவம் ஆகி
அசைய உடல் திரியாநின்று வசையினால்
#41
பேசு பதப்பு ஆன பிழை பொறுத்து மற்று அவற்குப்
பாசுபதம் ஈந்த பதம் போற்றி நேசத்தால்
#42
வாயில் நீர் கொண்டு மகுடத்து உமிழ்ந்து இறைச்சி
ஆய சீர்ப் போனகமா அங்கு அமைத்துத் தூய சீர்க்
#43
கண் இடந்த கண்ணப்பர்-தம்மை மிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல் போற்றி மண்ணின் மேல்
#44
காளத்தி போற்றி கயிலை மலை போற்றி என
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோடு
#45
எத்திசையும் பல் முரசம் ஆர்த்து இமையோர் போற்று இசைப்ப
அத்தன் அடி சேர்வார்கள் ஆங்கு
** போற்றித் திருக்கலிவெண்பா முற்றிற்று
@9 திருமுருகாற்றுப்படை
#1
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை 5
மறு_இல் கற்பின் வாள்_நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப் பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10
உருள் பூம் தண் தார் புரளும் மார்பினன்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
கணைக் கால் வாங்கிய நுசுப்பின் பணைத் தோள்
கோபத்து அன்ன தோயாப் பூம் துகில் 15
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20
செம் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு
பைம் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி
தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்_பகு_வாய் தாழ மண்ணுறுத்து 25
துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ் அரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணைத் தக 30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூம் கேழ்த் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இள முலைக் கொட்டி விரி மலர் 35
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்பப் பாடி 40
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசாச் சுடர் பூம் காந்தள்
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு 45
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழிப் பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு 50
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள்
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடைக் கரும் தலை
ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா 55
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு_இல் கொற்றத்து 60
எய்யா நல் இசை செவ் வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து 70
மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின்
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி எல் படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் 75
அம் சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை 80
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப 85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா_இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே 90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத் திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் 100
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அ மூ_இரு முகனும் முறை நவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு 105
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை
மார்பொடு விளங்க ஒரு கை
தாரொடு பொலிய ஒரு கை
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒரு கை
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை 115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை
வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்_இயம் கறங்க திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல 120
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று 125
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் 130
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனி_இல் காட்சி முனிவர் முன் புக
புகை முகந்து அன்ன மாசு_இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் 140
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகைப் 145
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு_இல் மகளிரொடு மறு இன்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடும் சிறைப் 150
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ_எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் 155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தடக் கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும்
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய 160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா_இல் ஊழி
நான்முக ஒருவர்ச் சுட்டி காண்வர 165
பகலில் தோன்றும் இகல்_இல் காட்சி
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடைத் 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீப் பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன் காண
தா_இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி
நா இயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறைக் காய் இடை இடுபு வேலன் 190
அம் பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தே கள் தேறல் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் 200
முடித்த குல்லை இலை உடை நறும் பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உணத் தொடுத்த பெரும் தண் மாத் தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு 205
செய்யன் சிவந்த ஆடையன் செவ் அரைச்
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல்_இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்_இல் சேவல் அம் 210
கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி 215
மென் தோள் பல் பிணை தழீஇத் தலைத்தந்து
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயின் பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் 220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும்
காடும் காவும் கவின் பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப் பூம் கடம்பும் 225
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்
மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ 230
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து 235
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி
நறும் புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன்_இயம் கறங்க 240
உருவப் பல் பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகு_இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு_களம் சிலம்பப் பாடி பல உடன் 245
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி
ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக 250
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி
கைதொழூஉப் பரவி கால் உற வணங்கி
நெடும் பெரும் சிமையத்து நீலப் பைம் சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ 255
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்கு வில் தானை தலைவ 260
மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தடக் கை சால் பெரும் செல்வ 265
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண் பொரு நெடு வரை குறிஞ்சிக் கிழவ
பலர் புகழ் நல் மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள 270
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி 275
போர் மிகு பொருந குருசில் எனப் பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் 280
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி
அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என 285
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி 290
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பல உடன் 295
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நல் பல 300
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர யூகமொடு
மா முக முசுக் கலை பனிப்ப பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று 305
நல் பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா
வாழை முழுமுதல் துமிய தாழை
இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கிக்
கறிக் கொடிக் கரும் துணர் சாயப் பொறிப் புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ 310
கோழி வயப் பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளைச் செறிய கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப சேண்-நின்று 315
இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே
** திருமுருகாற்றுப்படை முற்றிற்று
** தனி வெண்பாக்கள்
#2
குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர் தடிந்தாய்
புன் தலைய பூதப் பொரு படையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறு ஊர்ந்தான் ஏறே
உளையாய் என் உள்ளத்து உறை
#3
குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும்
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கல் பொதும்பில் காத்ததுவும்
மெய் விடா வீரன் கை வேல்
#4
வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல் செவ்வேள் திருக்கை வேல் வாரி
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை
#5
இன்னம் ஒரு கால் எனது இடும்பைக் குன்றுக்குக்
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா முன்னம்
பனி வேய் நெடும் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்
#6
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிரு கைக்
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்து அருளும்
வேலப்பா செந்தி வாழ்வே
#7
அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெம் சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
#8
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு_கை_முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்
#9
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக் கால்
ஆர்க்குப் பரமாம் அறு முகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர் வேலா நல்ல
இடம் காண் இரங்காய் இனி
#10
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்-தன் பாதம்
கரம் கூப்பிக் கண் குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணி முருகாற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்
#11
நக்கீரர் தாம் உரைத்த நல் முருகாற்றுப்படையைத்
தற்கோல நாள்-தோறும் சாற்றினால் முன் கோல
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்து அருளித்
தான் நினைத்த எல்லாம் தரும்
@10 திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
#1
திருக் கண்ணப்பன் செய் தவத் திறத்து
விருப்பு உடைத்து அம்ம விரி கடல் உலகே பிறந்தது
தேன் அழித்து ஊன் உண் கானவர் குலத்தே திரிவது
பொரு புலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது
செம் கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது 5
வெம் திறல் சிலையொடு வேல் வாள் முதலிய
அந்தம்_இல் படைக்கலம் அவையே உறைவது
குறை தசை பயின்று குடம் பல நிரைத்துக்
கறை மலி படைக்கலம் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை 10
வாலிய புலித் தோல் மறைப்ப வெள் வார்
இரவும் பகலும் இகழா முயற்றியொடும்
அடைத்த தேனும் வல் நாய் விட்டும்
சிலை விடு கணையிலும் திண் சுரி கையிலும்
பல கிளை அவையொடும் பதைப்பப் படுத்துத் 15
தொல் உயிர் கொல்லும் தொழிலே வடிவே
மறப் புலி கடித்த வன் திரள் முன்கை
திறல் படை கிழித்த திண் வரை அகலம்
எயிற்று எண்கு கவர்ந்த இரும் தண் நெற்றி
அயில் கோட்டு ஏனம் எடுத்து எழு குறங்கு 20
செடித்து எழு குஞ்சி செம் நிறத்து உறு கண்
கடுத்து எழும் வெவ் உரை அ வாய்க் கரு நிறத்து
அடு படை பிரியாக் கொடு விறலதுவே மனமே
மிகக் கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்கு அகன் அமர்ந்ததுவே இது அக் 25
கானத் தலைவன் தன்மை கண்_நுதல்
வானத் தலைவன் மலை_மகள் பங்கன்
எண்ண அரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பு ஆர் மலர் இணை
தாய்க்-கண் கன்று எனச் சென்று கண்டு அல்லது 30
வாய்க்கு இடும் உண்டி வழக்கு அறியானே அதாஅன்று
கட்டு அழல் விரித்த கனல் கதிர் உச்சியில்
சுட்டு அடி இடும்-தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முள் பயில் வளாகத்து
எதிர் இனம் கடவிய வேட்டையில் விரும்பி 35
எழுப்பிய விருகத்து இனங்களை மறுக்குறத்
தன் நாய் கடித்து இரித்திட வடிக் கணை தொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினில் கடைந்த வெம் கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு 40
அண்ணற்கு அமிர்து என்று அது வேறு அமைத்துத்
தண் நறும் சுனை நீர் தன் வாய்க் குடத்தால்
மஞ்சனமாக முகந்து மலர் எனக்
குஞ்சியில் துவர்க் குலை செருகிக் குனி சிலை
கடும் கணை அதனொடும் ஏந்திக் கனல் விழிக் 45
கடும் குரல் நாய் பின்தொடர யாவரும்
வெருக் கோள் உற்ற வெம் கடும் பகலில்
திருக்காளத்தி எய்தி அச் சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
துகில் இடைச் சுற்றியில் தூ நீர் ஆட்டி 50
நல்லன விரை மலர் நறும் புகை விளக்கு அவி
சொல்லின பரிசில் சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து
அருச்சனை செய்து ஆங்கு அவன் அடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி 55
மந்திரம் எண்ணி வலம் இடம் வந்து
விடைகொண்டு ஏகின பின் தொழில்
பூசனை-தன்னைப் புக்கு ஒரு காலில்
தொடு செருப்பு அடியால் நீக்கி வாயில்
இடு புனல் மேனியில் ஆட்டித் தன் தலைத் 60
தங்கிய துவர்ப் பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண்டு உள்ளம் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்து முன் ஆடிக் குரை கழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா 65
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
அற்றை அயலினில் கழித்து ஆங்கு இரவியும்
உதித்த போழ்தத்துள் நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீர் ஆர் சிவற்குத் தான் முன் செய்வதோர் 70
பொற்பு உடைப் பூசனை காணான் முடி மிசை
ஏற்றிய துவர் கண்டு ஒழியான் மறித்தும்
இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்-கொல் என்று
கரந்து இருந்து அவன் அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று 75
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையில் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும் அவ் வழிப்பட்டு இறைவ
உற்றது கேட்டு அருள் உன்றனக்கு அழகா
நாள்-தொறும் நான் செய் பூசனை-தன்னை 80
ஈங்கு ஒரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித்
தொடு செருப்பு அடியால் நீக்கி வாயில்
இடு புனல் மேனியில் ஆட்டித் தன் தலை
தங்கிய சருகிலை உதிர்த்து ஓர் இறைச்சியை 85
நின் திருக்கோயிலில் இட்டுப் போம் அது
என்றும் உன்-தனக்கு இனிதே எனை உருக்
காணில் கொன்றிடும் யாவராலும்
விலக்குறும் குணத்தன் அல்லன் என் உன்
திருக்குறிப்பு என்று அவன் சென்ற அல்லிடைக் 90
கனவில் ஆதரிக்கும் அந்தணன்-தனக்குச்
சீர் ஆர் திருக்காளத்தியுள் அப்பன்
பிறை அணி இலங்கு பின்னு புன் சடை முடிக்
கறை அணி மிடற்றுக் கனல் மழுத் தடக் கை
நெற்றி நாட்டத்து நிறை நீற்று ஆக 95
ஒற்றை மால் விடை உமை ஒரு மருங்கில்
திருவுருக் காட்டியருளிப்
புரிவொடு பூசனை செய்யும்
குணி சிலை வேடன் குணம் அவை ஆவன
உரிமையில் சிறந்த நல் மாதவன் என்று உணர் 100
அவன் உகந்து இயங்கிய இடம் முனி வனம் அதுவே அவன்
செருப்பு அடி ஆவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூய பொன் குடமே
அதனில் தங்கு நீர் கங்கையின் புனலே
புனற்கு இடு மா மணி அவன் நிறைப் பல்லே 105
அதற்கு இடு தூ மலர் அவனது நாவே
உப் புனல் விடும் பொழுது உரிஞ்சிய மீசைப்
புன் மயிர் குசையினும் நம் முடிக்கு இனிதே அவன் தலை
தங்கிய சருகிலை தருப்பையில் பொதிந்த
அங்குலி கற்பகத்து அலரே அவன் உகந்து 110
இட்ட இறைச்சி எனக்கு நல் மாதவர்
இட்ட நெய் பால் அவியே
இது எனக்கு உனக்கு அவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலம் திகழ் அருச்சனை செய்து ஆங்கு இரு என்று 115
இறைவன் எழுந்தருளினன்
அருளலும் மறையவன் அறிவுற்று எழுந்து
மனம் மிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான் முன் செய்வதோர்
பொற்பு உடைப் பூசனை புகழ்தரச் செய்து 120
தோன்றா வண்ணம் இருந்தனன் ஆக இரவியும்
வான் தனி முகட்டில் வந்து அழல் சிந்தக்
கடும் பகல் வேட்டையில் காதலித் தடிந்த
உடும்பொடு சிலை கணை உடைத் தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் 125
செல்வன் திருக்காளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கு ஒரு கண்ணில் உதிரம்
ஒழியாது ஒழுக இருந்தனன் ஆகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனம் சுழன்று 130
வாய்ப் புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணை சிலை சிந்த
நிலம் படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக் கொடும் படை கடிது எடுத்து இது படுத்தவர்
அடுத்த இவ் வனத்து உளர் எனத் திரிந்து ஆஅங்கு 135
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழி-தொறும்
நெக்கு இழி குருதியைக் கண்டு நிலைதளர்ந்து என்
அத்தனுக்கு அடுத்தது என் அத்தனுக்கு அடுத்தது என் என்று
அன்பொடும் கனற்றி 140
இத்தனை தரிக்கிலன் இது-தனைக் கண்ட என்
கண்-தனை இடந்து கடவுள்-தன் கண் உறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்று ஒரு கண்ணிடைக்
கணை அது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலும் குருதி 145
நிற்பது ஒத்து உருப்பெறக் கண்டு நெஞ்சு உகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக் கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என்
அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என்று
இன் உரை அதனொடும் எழில் சிவலிங்கம் 150
தன்னிடைப் பிறந்த தட மலர்க் கையால்
அன்னவன் தன் கை அம்பொடும் அகப்படப் பிடித்து
அருளினன் அருளலும்
விண் மிசை வானவர்
மலர் மழை பொழிந்தனர் வளை ஒலி படகம் 155
துந்துபி கறங்கின தொல் சீர் முனிவரும்
ஏத்தினர் இன் இசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக் கண்ணப்பனே
** தனி வெண்பா
#2
தத்தையாம் தாய் தந்தை நாகனாம் தன் பிறப்புப்
பொத்தப்பி நாட்டு உடுப்பூர் வேடுவனாம் தித்திக்கும்
திண்ணப்பனாம் சிறு பேர் செய் தவத்தால் காளத்திக்
கண்ணப்பனாய் நின்றான் காண்
*** திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று
*
|