திருவிசைப்பா 1.திருமாளிகைத்தேவர்
| திருவிசைப்பா 2.சேந்தனார்
| திருவிசைப்பா 3.கருவூர்த்தேவர்
| திருவிசைப்பா 4.பூந்துருத்தி நம்பி காட நம்பி
| திருவிசைப்பா 5.கண்டராதித்தர்
|
திருவிசைப்பா 6.வேணாட்டடிகள்
| திருவிசைப்பா 7.திருவாலியமுதனார்
| திருவிசைப்பா 8.புருடோத்தமநம்பி
| திருவிசைப்பா 9.சேதிராயர்
| திருப்பல்லாண்டு 10.சேந்தனார்
|
தேவையான ஆசிரியர் பெயர் மேல் சொடுக்கிப் பின்னர் பதிகத் தலைப்பைச் சொடுக்கவும்
|
பதிகங்கள்
|
திருவிசைப்பா - 1.திருமாளிகைத்தேவர் பதிகங்கள்
|
1.கோயில் - ஒளிவளர் விளக்கே
2.கோயில் - உயர்கொடி ஆடை
3.கோயில் - உறவாகிய யோகம்
4 கோயில் - இணங்கிலா ஈசன்
|
** திருமுறை 9
&1 திருமாளிகைத் தேவர்
@1 கோயில் - ஒளிவளர் விளக்கே
** பண் :பஞ்சமம்
#1
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளி வளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளி வளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக
வெளி வளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே
**பண் :பஞ்சமம்
#2
இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ
அடல் விடைப் பாகா அம்பலக் கூத்தா அயனொடு மால் அறியாமைப்
படர் ஒளி பரப்பிப் பரந்து நின்றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே
**பண் :பஞ்சமம்
#3
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்த பொன்னம்பலத்து அரசே
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயைத் தொண்டனேன் கருதுமா கருதே
**பண் :பஞ்சமம்
#4
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே
**பண் :பஞ்சமம்
#5
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே
ஞாலமே தமியேன் நல் தவத்தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே
**பண் :பஞ்சமம்
#6
நீறு அணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா
ஆறு அணி சடை எம் அற்புதக் கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே
**பண் :பஞ்சமம்
#7
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே
கனக நல் தூணே கற்பகக் கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே
நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே
**பண் :பஞ்சமம்
#8
திறம்பிய பிறவிச் சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனைத் திகையாமே
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடிக் கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத் தொண்டனேன் புணருமா புணரே
**பண் :பஞ்சமம்
#9
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டு உருள ஒண் திருப் புருவம் நெறித்து அருளிய உருத்திரனே
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆடப் பொன்னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே
**பண் :பஞ்சமம்
#10
மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர்
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிகத் தேர் ஏறிய ஏறு சேவகனே
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரைக் கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே
**பண் :பஞ்சமம்
#11
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே
@2 கோயில் - உயர்கொடி ஆடை
** பண் :பஞ்சமம்
#1
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூமப் படலத்தின்
பியர் நெடு மாடத்து அகில் புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர்
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தா
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர்ச் சேவடிகள் என் மனத்து வைத்தருளே
** பண் :பஞ்சமம்
#2
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுடக் கனக மாளிகை கலந்து எங்கும்
பெரு வள முத்தீ நான்மறைத் தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர்த்
திரு வளர் தெய்வப் பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பலக் கூத்தா
உரு வளர் இன்பச் சிலம்பு ஒலி அலம்பும் உன் அடிக் கீழது என் உயிரே
** பண் :பஞ்சமம்
#3
வரம்பு இரி வாளை மிளிர் மடுக் கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி
பிரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர்ச்
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினை திருக் கணைக் கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே
** பண் :பஞ்சமம்
#4
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின்
பேரொலி பரந்து கடல் ஒலி மலியப் பொலிதரு பெரும்பற்றப்புலியூர்ச்
சீர் நிலவு இலயத் திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பலக் கூத்தா
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணிக் குறங்கு அடைந்தது என் மதியே
** பண் :பஞ்சமம்
#5
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மாப்
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடைப் பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர்ச்
சிறைகொள் நீர்த் தரளத் திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பலக் கூத்தா
பொறை அணி நிதம்பப் புலி அதள் ஆடைக் கச்சு நூல் புகுந்தது என் புகலே
** பண் :பஞ்சமம்
#6
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப்புலியூர்ச்
செது மதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்தா
மது மதி வெள்ளத் திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே
** பண் :பஞ்சமம்
#7
பொரு வரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம்
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர்த்
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பலக் கூத்தா
உரு மருவு உதரத் தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே
**பண் :பஞ்சமம்
#8
கணி எரி விசிறு கரம் துடி விட வாய்க் கங்கணம் செம் கை மற்று அபயம்
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர்த்
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பலக் கூத்தா
அணி மணி முறுவல் பவள வாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே
** பண் :பஞ்சமம்
#9
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர்ச்
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பலக் கூத்தா
கரு வடி குழைக் காது அமலச் செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே
** பண் :பஞ்சமம்
#10
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன்
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர்ச்
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே
** பண் :பஞ்சமம்
#11
காமன் அக் காலன் தக்கன் மிக்க எச்சன் படக் கடைக்கணித்தவன் அல்லாப்
பேய் மனம் பிறிந்த தவப் பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர்ச்
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வச் சிற்றம்பலக் கூத்தா
பூ மலர் அடிக் கீழ்ப் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே
@3 கோயில் - உறவாகிய யோகம்
** பண் :பஞ்சமம்
#1
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள்
சிறவாதவர் புரம் செற்ற கொற்றச் சிலை கொண்டு பன்றிப் பின் சென்று நின்ற
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#2
காடு ஆடு பல் கணம் சூழக் கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும்
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#3
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும்
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#4
வெறி ஏறு பன்றிப் பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும்
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#5
செழும் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத்து அந்தரப் புட்கு அரசுக்கு அரசே அமரர் தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்
#6
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத்தின் பின்
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும்
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#7
கடுப்பாய்ப் பறை கறங்கக் கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு
உடுப்பு ஆய தோல் செருப்புச் சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#8
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேமத் துணையே என்னும்
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும்
பூ ஏந்தி மூவாயிரவர் தொழப் புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்
#9
தர வார் புனம் சுனைத் தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர்
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல்
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம்
குரவா என்னும் குணக் குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#10
திருநீறு இடா உருத் தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டிப்
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றிப் பெரும் தெருவே திரியும்
வரு நீர் அருவி மகேந்திரப் பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும்
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
** பண் :பஞ்சமம்
#11
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றிப் பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும்
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
**பண் :பஞ்சமம்
#12
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும்
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலாத் தில்லை அம்பலக் கூத்தனையே
@4 கோயில் - இணங்கிலா ஈசன்
** பண் :காந்தாரம்
#1
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு
மணம்கொள் சீர்த் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறு_இல் கோறை வாய்ப் பீறல் பிண்டப்
பிணங்களைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#2
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா
அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்கள் ஆய
பிரட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#4
துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லாச்
சிணுக்கரைச் செத்தல் கொத்தைச் சிதம்பரைச் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#5
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தித் தில்லைக் கூத்து உகந்து தீய
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#6
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும்
சேடர் சேவடிகள் சூடாத் திரு இலா உருவினாரைச்
சாடரைச் சாண் கை மோடச் சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#7
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறாத்
திருக்குறிப்பு அருளும் தில்லைச் செல்வன்-பால் செல்லும் செல்வு_இல்
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#8
செக்கர் ஒத்து இரவி நூறாயிரத் திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்டாம் மிண்ட எத்தரைப் புத்தர் ஆதிப்
பொக்கரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#9
எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித்து இடபம் ஏறி
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும்
பிச்சரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#10
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும்
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லாத்
தெண்ணரைத் தெருளா உள்ளத்து இருளரைத் திட்டைமுட்டைப்
பெண்ணரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
** பண் :காந்தாரம்
#11
சிறப்பு உடை அடியார் தில்லைச் செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம்
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார்
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும்
பிறப்பரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
****
*
|