திருமந்திரம்
0.பாயிரம் 1 - 112 |
1.முதல் தந்திரம் 113 - 336 |
2.இரண்டாம் தந்திரம் 337 - 548 |
3.மூன்றாம் தந்திரம் 549 - 883 |
4.நான்காம் தந்திரம் 884 - 1418 |
---|---|---|---|---|
5.ஐந்தாம் தந்திரம் 1419 - 1572 |
6.ஆறாம் தந்திரம் 1573 - 1703 |
7.ஏழாம் தந்திரம் 1704 - 2121 |
8.எட்டாம் தந்திரம் 2122 - 2648 |
9.ஒன்பதாம் தந்திரம் 2649 - 3047 |
@5 ஐந்தாம் தந்திரம் #1419 ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற பேரறிவாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் தாரணி நால் வகை சைவமும் ஆமே மேல் #1420 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே மேல் #1421 கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே மேல் #1422 வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே மேல் #1423 இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது அணைவாம் சரியை கிரியையினார்க்கே மேல் #1424 காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே மேல் #1425 கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம் கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே மேல் #1426 ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் மோன திசையும் முழு எண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே மேல் #1427 பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே மேல் #1428 கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன் பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே மேல் #1429 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று ஆக முடிந்த அரும் சுத்த சைவமே மேல் #1430 சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும் சத்தும் அசத்தும் தணந்த பராபரை உய்த்த பராபரை உள்ளாம் பராபரை அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே மேல் #1431 சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியும் அங்கே சிறந்து உள தானே மேல் #1432 தன்னை பரனை சதாசிவன் என்கின்ற மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே மேல் #1433 பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம் ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு நேர் என ஈராறு நீதி நெடும் போகம் காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே மேல் #1434 மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல் கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே மேல் #1435 வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர் நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள் வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர் சாதாரணம் அன்ன சைவர் உபாயமே மேல் #1436 விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள் கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள் எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும் அண்ணலை சென்று அணுகா பசு பாசமே மேல் #1437 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தை பாதத்தால் சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே மேல் #1438 வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட சாடும் சிவபோதகர் சுத்த சைவரே மேல் #1439 உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் மடலான மா மாயை மற்று உள்ள நீவ படலான கேவல பாசம் துடைத்து திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே மேல் #1440 சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே மேல் #1441 நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே மேல் #1442 சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே மேல் #1443 நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே மேல் #1444 உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறு ஆவாகனம் புற பூசை செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே மேல் #1445 நாடு நகரமும் நல் திருக்கோயிலும் தேடி திரிந்து சிவபெருமான் என்று பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின் கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே மேல் #1446 பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் சுத்த இயமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே மேல் #1447 சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே மேல் #1448 கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை அரிய சிவன் உரு அமரும் அரூபம் தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை உரியன நேயத்து உயர் பூசை ஆமே மேல் #1449 சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருளானது நந்தி பொன் நகர் போந்து மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே மேல் #1450 சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே மேல் #1451 பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு ஒத்து திருவடி நீழல் சரண் என தத்தும் வினை கடல் சாராது காணுமே மேல் #1452 கானுறு கோடி கடி கமழ் சந்தனம் வானுறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே மேல் #1453 கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின் ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும் வான கன்று ஆகிய வானவர் கைதொழு மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே மேல் #1454 இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன் இது பணி மானுடர் செய் பணி ஈசன் பதி பணி செய்வது பத்திமை காணே மேல் #1455 பத்தன் கிரியை சரியை பயில்வுற்று சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே மேல் #1456 அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் செம்பொன் செய் மேனி கமல திருவடி முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் என்பினுள் சோதி இலங்குகின்றானே மேல் #1457 நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தால் போல் தம்மை இருத்தி சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே மேல் #1458 ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே மேல் #1459 பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல் சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு நாவி அணைந்த நடு தறி ஆமே மேல் #1460 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியை சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே மேல் #1461 எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலை பாச பிறவியும் நீங்கா அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே மேல் #1462 விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே மேல் #1463 பேணில் பிறவா உலகு அருள்செய்திடும் காணில் தனது கலவியுளே நிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே மேல் #1464 ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே மேல் #1465 யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே மேல் #1466 யோக சமயமே யோகம் பல உன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் யோக நிர்வாணமே உற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே மேல் #1467 ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே மேல் #1468 சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே மேல் #1469 தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே மேல் #1470 இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் வருக்கம் சராசரம் ஆகும் உலகம் தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே மேல் #1471 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர் மன்னும் பேரருளாளன் குறியும் குணமும் குரை கழல் நீங்கா நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே மேல் #1472 ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும் கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே மேல் #1473 ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம் மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் தான் இ குலத்தோர் சரியை கிரியையே மேல் #1474 ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி ஞான கிரியையே நல் முத்தி நாடலே மேல் #1475 நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே மேல் #1476 ஞான சமயமே நாடும் தனை காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் ஞான அபிடேகமே நற்குரு பாதமே மேல் #1477 சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம் தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய் கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே மேல் #1478 சைவ பெருமை தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே மேல் #1479 தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட குருபத்தி செய்யும் குவலயத்தோர்க்கு தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே மேல் #1480 தெளிவு அறியாதார் சிவனை அறியார் தெளிவு அறியாதார் சீவனும் ஆகார் தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே மேல் #1481 தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும் ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே மேல் #1482 சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும் சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும் சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம் எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ மேல் #1483 சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார் சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே மேல் #1484 சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே மேல் #1485 அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முன்னும் அவத்தையும் மூல பகுதியும் பின்னிய ஞானமும் போதாதி பேதமும் தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே மேல் #1486 பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே மேல் #1487 மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர் மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே மேல் #1488 சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே மேல் #1489 மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே மேல் #1490 யோக சமாதியின் உள்ளே அகல் இடம் யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி யோக சமாதியின் உள்ளே உள சத்தி யோக சமாதி உகந்தவர் சித்தரே மேல் #1491 யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் போகம் புவியில் புருடார்த்த சித்தியது ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே மேல் #1492 ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி போதாலயத்து புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே மேல் #1493 பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயிர் மன வாளால் கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே மேல் #1494 வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும் வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே மேல் #1495 மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில் தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில் ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே மேல் #1496 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே மேல் #1497 அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும் மறுகா நரை அன்னம் தாமரை நீலம் குறுகா நறு மலர் கொய்வன கண்டும் சிறுகால் அறநெறி சேரகிலாரே மேல் #1498 அரும் கரை ஆவது அ அடி நீழல் பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே மேல் #1499 உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன் அடிக்கே முறை செய்-மின் பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும் பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே மேல் #1500 நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை என்றும் தொழுவன் எழில் பரஞ்சோதியை துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே மேல் #1501 திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே மேல் #1502 எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல் அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே மேல் #1503 அது இது ஆதி பரம் என்று அகல்வர் இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை விதிவழியே சென்று வேந்தனை நாடும் அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே மேல் #1504 அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல் வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும் வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே மேல் #1505 அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ கண் அவன் என்று கருதும் அவர்கட்கு பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே மேல் #1506 வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை நேசத்து இருந்த நினைவு அறியாரே மேல் #1507 சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால் மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் பாலோகம் இல்லா பரன் உரு ஆமே மேல் #1508 சமயம் கிரியையில் தன் மனம் கோயில் சமய மனு முறை தானே விசேடம் சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம் சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே மேல் #1509 பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம் பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் பாசம் கரை பதி சாயுச்சியமே மேல் #1510 தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம் தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர் இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே மேல் #1511 சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே சயிலம் அது ஆகும் சராசரம் போல பயிலும் குருவின் பதி புக்க-போதே கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே மேல் #1512 சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல் சைவம் சிவானந்தம் சாயுச்சியமே மேல் #1513 சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல் சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல் சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே மேல் #1514 இருட்டு அறை மூலை இருந்த கிழவி குருட்டு கிழவனை கூடல் குறித்து குருட்டினை நீங்கி குணம் பல காட்டி மருட்டி அவனை மணம் புரிந்தாளே மேல் #1515 தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே மேல் #1516 இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும் மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே மேல் #1517 இருள் சூழ் அறையில் இருந்தது நாடில் பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே மேல் #1518 மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து குருட்டினை நீக்கி குணம் பல காட்டி அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே மேல் #1519 கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர் கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர் கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல் பின்னை பிறவி பிறிது இல்லை தானே மேல் #1520 செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன் எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம் கையன் இவன் என்று காதல் செய்வீரே மேல் #1521 எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் தையலும் தானும் தனிநாயகம் என்பர் வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு கையில் கருமம் செய் காட்டது ஆமே மேல் #1522 கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர் வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே மேல் #1523 அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே மேல் #1524 பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குற பெண் குவி முலை கோமளவல்லி சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே மேல் #1525 தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன் பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும் ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே மேல் #1526 நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் பணிகிலும் பல் மலர் தூவி பணிவன் அணுகியது ஒன்று அறியாத ஒருவன் அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே மேல் #1527 இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி குரு என வந்து குணம் பல நீக்கி தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால் திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே மேல் #1528 இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை உன்னி அரவம்செய்யாமல் அவளுடன் சேர பரிவொன்றில் ஆளும் பராபரை தானே மேல் #1529 மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து ஊனை விளக்கி உடன் இருந்தானே மேல் #1530 ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா மாய குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே மேல் #1531 உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும் கள்ள தலைவன் கருத்து அறியார்களே மேல் #1532 உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே மேல் #1533 ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமய பொருளும் அவன் அலன் தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின் மாறுதல் இன்றி மனை புகலாமே மேல் #1534 சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம் தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே மேல் #1535 அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம் உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் மண் நின்று ஒழியும் வகை அறியார்களே மேல் #1536 சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் பவகதி பாச பிறவி ஒன்று உண்டு தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில் அவகதி மூவரும் அ வகை ஆமே மேல் #1537 நூறு சமயம் உளவா நுவலும்-கால் ஆறு சமயம் அ ஆறு உட்படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா வீறு பரநெறி இல்லா நெறி அன்றே மேல் #1538 கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே மேல் #1539 மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில் பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே மேல் #1540 சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு மாயன் மயக்கிய மானுடராம் அவர் காயம் விளைக்கும் கருத்து அறியார்களே மேல் #1541 வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல் சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே மேல் #1542 மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர் நாதம் அது ஆக அறியப்படும் நந்தி பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் ஆதியும் அ நெறி ஆகி நின்றானே மேல் #1543 அரன்நெறி அப்பனை ஆதி பிரானை உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரன் அறியாவிடில் பல் வகை தூரமே மேல் #1544 பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன் பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும் துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன் அரிது அவன் வைத்த அறநெறி தானே மேல் #1545 ஆன சமயம் அது இது நன்று எனும் மாய மனிதர் மயக்கம் அது ஒழி கானம் கடந்த கடவுளை நாடு-மின் ஊனம் கடந்த உரு அது ஆமே மேல் #1546 அ நெறி நாடி அமரர் முனிவரும் செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின் முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே மேல் #1547 உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே மேல் #1548 வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் சுழி நடக்கும் துயரம் அது நீக்கி பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே மேல் #1549 வழி சென்ற மாதவம் வைகின்ற-போது பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே மேல் #1550 இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே மேல் #1551 பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி உலகில் இருந்து அழுவாரே மேல் #1552 இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் வருந்தா வகை செய்து வானவர் கோனும் பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே மேல் #1553 தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே மேல் #1554 அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறி அது கண்டும் கொடுவினையாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே மேல் #1555 மன்னும் ஒருவன் மருவும் மனோமயன் என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் துன்னி மனமே தொழு-மின் துணை_இலி தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே மேல் #1556 ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே மேல் #1557 இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே மேல் #1558 ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள என்றது போல இரு முச்சமயமும் நன்று இது தீது இது என்று உரையாளர்கள் குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே மேல் #1559 சைவ பெருமை தனிநாயகன்-தன்னை உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய் வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே மேல் #1560 சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் பவன் அவன் வைத்த பழ வழி நாடி இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே மேல் #1561 ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும் போமாறு அ ஆதார பூங்கொடியாளே மேல் #1562 அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும் சிர நெறி தேடி திரிந்த அந்நாளும் உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும் தர நெறி நின்ற தனிச்சுடர் தானே மேல் #1563 தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி ஆமே மேல் #1564 ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின் ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே மேல் #1565 மினல் குறியாளனை வேதியர் வேதத்து அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை நினை குறியாளனை ஞான கொழுந்தின் நய குறி காணில் அரன்நெறி ஆமே மேல் #1566 ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே மேல் #1567 சைவ பெருமை தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே மேல் #1568 இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும் பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என் ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே மேல் #1569 ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே மேல் #1570 ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும் பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே மேல் #1571 ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே மேல் #1572 அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே மேல் |
---|