திருமந்திரம்
0.பாயிரம் 1 - 112 |
1.முதல் தந்திரம் 113 - 336 |
2.இரண்டாம் தந்திரம் 337 - 548 |
3.மூன்றாம் தந்திரம் 549 - 883 |
4.நான்காம் தந்திரம் 884 - 1418 |
---|---|---|---|---|
5.ஐந்தாம் தந்திரம் 1419 - 1572 |
6.ஆறாம் தந்திரம் 1573 - 1703 |
7.ஏழாம் தந்திரம் 1704 - 2121 |
8.எட்டாம் தந்திரம் 2122 - 2648 |
9.ஒன்பதாம் தந்திரம் 2649 - 3047 |
@7 ஏழாம் தந்திரம் #1704 நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலம் கண்டான் அடி காணலும் ஆமே மேல் #1705 ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி போதாலயத்து அவிகாரம்-தனில் போத மேதாதி ஆதாரம் மீதான உண்மையே மேல் #1706 மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால் தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் பார் எங்கும் ஆகி பரந்த பராபரம் கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே மேல் #1707 ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி போதாலயத்து புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே மேல் #1708 மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் ஆதாரம் செய்போகம் ஆவது காயமே மேல் #1709 ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே மேல் #1710 ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே மேல் #1711 ஆயும் மலரின் அணி மலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் மேய அறிவாய் விளைந்தது தானே மேல் #1712 இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும் இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே மேல் #1713 உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகம் எடுத்த சதாசிவன் தானே மேல் #1714 போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகமது அத்துவா ஆறும் சிவமே மேல் #1715 ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று காத்தனர் என்னும் கருத்து அறியாரே மேல் #1716 ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள் தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே மேல் #1717 தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே மேல் #1718 தூய விமானமும் தூலம் அது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம் பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே மேல் #1719 முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம் உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே மேல் #1720 துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல் இரதம் சலம் வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன் தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே மேல் #1721 மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான் இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும் குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும் துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே மேல் #1722 அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி எது உணரா வகை நின்றனன் ஈசன் புது உணர்வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே மேல் #1723 அகல் இடமாய் அறியாமல் அடங்கும் உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே மேல் #1724 போது புனை கழல் பூமி அது ஆவது மாது புனை முடி வானகம் ஆவது நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் ஆதியுற நின்றது அ பரிசு ஆமே மேல் #1725 தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரை பொரு நீர் அது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே மேல் #1726 மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே மேல் #1727 உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர் நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே மேல் #1728 கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும் வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே மேல் #1729 கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே மேல் #1730 கூடிய பாதம் இரண்டும் படி மிசை பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே மேல் #1731 வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்த சிவனொடும் சாதாரணம் ஆம் சதாசிவம் தானே மேல் #1732 ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே மேல் #1733 அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம் அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே மேல் #1734 சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள சமயத்து எழுந்த இராசி ஈராறு உள சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள சமயத்து எழுந்த சதாசிவம் தானே மேல் #1735 நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு நடுவு படிகம் நல் குங்கும வன்னம் அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால் அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே மேல் #1736 அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே மேல் #1737 சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவம் முப்பத்தாறே மேல் #1738 தத்துவமாவது அருவம் சராசரம் தத்துவமாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவன் தானே மேல் #1739 கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு மாறு செய்வான் என் மனம் புகுந்தானே மேல் #1740 இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே மேல் #1741 சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே மேல் #1742 நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும் தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே மேல் #1743 நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம் வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே மேல் #1744 எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம் பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே மேல் #1745 சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும் சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும் சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே மேல் #1746 மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே மேல் #1747 ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே மேல் #1748 உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே மேல் #1749 ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே மேல் #1750 தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும் தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும் தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம் தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே மேல் #1751 ஆரும் அறியார் அகாரம் அவன் என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே மேல் #1752 இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம் இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே மேல் #1753 அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் அது ஆமே மேல் #1754 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதி பீட நாதமே போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே மேல் #1755 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே மேல் #1756 தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம் வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே மேல் #1757 விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்து அதே பீட நாத இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே மேல் #1758 சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே மேல் #1759 மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே மேல் #1760 பராபரன் எந்தை பனி மதி சூடி தராபரன் தன் அடியார் மன கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்து உறைந்தானே மேல் #1761 பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம் குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே மேல் #1762 அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள் என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே மேல் #1763 உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் தரு என நல்கும் சதாசிவன் தானே மேல் #1764 நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே மேல் #1765 தேவர் பிரானை திசைமுகநாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே மேல் #1766 வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்தகையானொடும் கன்னி உணரினும் மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே மேல் #1767 ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே மேல் #1768 சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே மேல் #1769 கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும் எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே மேல் #1770 எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே மேல் #1771 சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே மேல் #1772 சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும் சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே மேல் #1773 குரைக்கின்ற வாரி குவலய நீரும் பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும் நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே மேல் #1774 வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே மேல் #1775 ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை நன்று என்று அடியிணை நான் அவனை தொழ வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே மேல் #1776 மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே மேல் #1777 மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று ஆவி எழும் அளவு அன்றே உடலுற மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கில் பரகதி தானே மேல் #1778 உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே மேல் #1779 உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன வியவார் பரமும் பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்ய கொண்டானே மேல் #1780 பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள் உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது வைச்ச பதம் இது வாய் திறவாதே மேல் #1781 பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே மேல் #1782 தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே மேல் #1783 கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்று அற நீக்கியே கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே மேல் #1784 கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே மேல் #1785 குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே மேல் #1786 உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே மேல் #1787 காய பரப்பில் அலைந்து துரியத்து சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே மேல் #1788 நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று வான் என வானவர் நின்று மனிதர்கள் தேன் என இன்பம் திளைக்கின்றவாறே மேல் #1789 அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன் இவன் ஆமே மேல் #1790 நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் நான் இது அம்பர நாதனும் ஆமே மேல் #1791 பெருந்தன்மை தான் என யான் என வேறாய் இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே மேல் #1792 இரு பதம் ஆவது இரவும் பகலும் உரு அது ஆவது உயிரும் உடலும் அருள் அது ஆவது அறமும் தவமும் பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே மேல் #1793 காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம் ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே மேல் #1794 குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே மேல் #1795 தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள் பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே மேல் #1796 தானே அறியும் வினைகள் அழிந்த பின் நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் தேனே அனைய நம் தேவர் பிரானே மேல் #1797 நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறியான் பின்னை யார் அறிவாரே மேல் #1798 அருள் எங்கும் ஆன அளவை அறியார் அருளை நுகர அமுதானதும் தேரார் அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார் அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே மேல் #1799 அறிவில் அணுக அறிவது நல்கி பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே மேல் #1800 அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே மேல் #1801 அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே மேல் #1802 பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின் நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின் நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே மேல் #1803 பிறவா நெறி தந்த பேரருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதி பராபரன் உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே மேல் #1804 அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே மேல் #1805 ஆயும் அறிவோடு அறியாத மா மாயை ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் மாய பல இந்திரியம் அவற்றுடன் ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே மேல் #1806 அருளே சகலமுமாய பவுதிகம் அருளே சராசரமாய அகிலம் இருளே வெளியே எனும் எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே மேல் #1807 சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவம் அவை ஆகி நடிப்பவன் தானே மேல் #1808 அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே மேல் #1809 தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் தானே வியாபி தலைவனும் ஆமே மேல் #1810 தலை ஆன நான்கும் தனது அருவாகும் அலையா அருவுரு ஆகும் சதாசிவம் நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே மேல் #1811 ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே மேல் #1812 நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு போய கலை பல ஆக புணர்ந்திட்டு வீய தகா விந்து ஆக விளையுமே மேல் #1813 விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனி மாயை மிக்க மா மாயை கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே மேல் #1814 அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார் அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளில் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே மேல் #1815 வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுக என்றானே மேல் #1816 ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை கூடியவாறே குறியா குறி தந்து என் ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே மேல் #1817 உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் பற்றிய மாயா படலம் என பண்ணி அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே மேல் #1818 விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே மேல் #1819 ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே மேல் #1820 புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே மேல் #1821 அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும் பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும் மருள் அது நீங்க மனம் புகுந்தானை தெருளுறும் பின்னை சிவகதி ஆமே மேல் #1822 கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர் தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே மேல் #1823 உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே மேல் #1824 வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே மேல் #1825 பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும் மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே மேல் #1826 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனை கழல் ஈசனை காண அரிதாம் கனை கழல் ஈசனை காண்குற வல்லார் புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே மேல் #1827 மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும் அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே மேல் #1828 புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும் எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே மேல் #1829 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள் ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை சுத்தமதாக விளக்கி தெளிக்கவே முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே மேல் #1830 மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும் சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே மேல் #1831 ஆராதனையும் அமரர் குழாங்களும் தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும் பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும் ஆரா வழி எங்கள் ஆதி பிரானே மேல் #1832 ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் பார் ஐங்குணமும் படைத்து நின்றானே மேல் #1833 உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே மேல் #1834 வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார் அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே மேல் #1835 கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள் பழிப்படுவார் பலரும் பழி வீழ வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே மேல் #1836 பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் நயனங்கள் மூன்று உடையான் அடி சேர வயனங்களால் என்றும் வந்து நின்றானே மேல் #1837 ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற தீர்த்தனை யாரும் துதித்து உணராரே மேல் #1838 தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும் பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள் நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே மேல் #1839 உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே மேல் #1840 வென்று விரைந்து விரை பணி என்றனர் நின்று பொருந்த இறை பணி நேர்பட துன்று சல மலர் தூவி தொழுதிடில் கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே மேல் #1841 சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே மேல் #1842 ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற மேவி திரியும் விரிசடை நந்தியை கூவி கருதி கொடுபோய் சிவத்திடை தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே மேல் #1843 சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம் புகுந்தானே மேல் #1844 பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள வரும் தன்மையாளனை வானவர் தேவர் தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே மேல் #1845 சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே மேல் #1846 ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே மேல் #1847 ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே மேல் #1848 கானுறு கோடி கடி கமழ் சந்தனம் வானுறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே மேல் #1849 மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் சேவடி சேரல் செயல் அறல் தானே மேல் #1850 உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே மேல் #1851 புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம் பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம் எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே மேல் #1852 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே மேல் #1853 இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர் விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே மேல் #1854 மன பவனங்களை மூலத்தால் மாற்றி அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே மேல் #1855 பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே மேல் #1856 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்குஅற ஆனந்த தேறல் பருகி இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே மேல் #1857 பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் பட மாட கோயில் பகவற்கு அது ஆமே மேல் #1858 தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே மேல் #1859 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே மேல் #1860 அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு நிகர் இலை என்பது நிச்சயம் தானே மேல் #1861 ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில் நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே மேல் #1862 ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே மேல் #1863 சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே மேல் #1864 அழிதகவு இல்லா அரன் அடியாரை தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும் பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே மேல் #1865 பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே மேல் #1866 வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண் அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே மேல் #1867 தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே மேல் #1868 திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் அக குறை கேடு இல்லை அ உலகுக்கே மேல் #1869 அ உலகத்தே பிறந்த அ உடலொடும் அ உலகத்தே அருந்தவம் நாடுவர் அ உலகத்தே அரன் அடி கூடுவர் அ உலகத்தே அருள்பெறுவாரே மேல் #1870 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள் உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே மேல் #1871 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும் கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே மேல் #1872 பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள் உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே மேல் #1873 இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் புயங்களும் எண் திசை போது பாதாள மயங்கா பகிரண்ட மா முடி தானே மேல் #1874 அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும் அகம் படி கண்டவர் அல்லலில் சேரார் அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே மேல் #1875 கழிவு முதலும் காதல் துணையும் அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே மேல் #1876 என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே மேல் #1877 துணிந்தார் அகம் படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதி பிரானை கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே மேல் #1878 தலை மிசை வானவர் தாள் சடை நந்தி மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் பல மிசை செய்யும் படர்சடையோனே மேல் #1879 அறியா பருவத்து அரன் அடியாரை குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே மேல் #1880 அவன்-பால் அணுகியே அன்பு செய்வார்கள் சிவன்-பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்-பால் அணுகியே நாடும் அடியார் இவன்-பால் பெருமை இலயம் அதாமே மேல் #1881 முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள் எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே மேல் #1882 சிவயோகி ஞானி செறிந்த அ தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல் இயல் காணும் பவயோகம் இன்றி பரலோகம் ஆமே மேல் #1883 மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே மேல் #1884 எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர்கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே மேல் #1885 அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே மேல் #1886 விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார் இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே மேல் #1887 பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில் பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே மேல் #1888 பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தரம் ஆக நினையும் அடியார் இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே மேல் #1889 வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் பொர இருந்தான் புகலே புகல் ஆக வர இருந்தால் அறியான் என்பது ஆமே மேல் #1890 அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடியார் சரீரத்திடை பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும் தங்கார் சிவனை தலைப்படுவாரே மேல் #1891 மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும் கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வர இருந்தாரே மேல் #1892 நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பால் ஆன மோன மொழியில் பதிவித்து மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே மேல் #1893 துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே மேல் #1894 சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம் ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே மேல் #1895 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே மேல் #1896 வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே மேல் #1897 யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால் ஆக தகு வேத கேசரி சாம்பவி யோகத்து கேசரி யோக முத்திரையே மேல் #1898 யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே மேல் #1899 துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம் அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும் தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே மேல் #1900 மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கு முத்திரை கண்ட சமயமே மேல் #1901 தூ நெறி கண்ட சுவடு நடு எழும் பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும் மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே மேல் #1902 வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள் உளதுறும் யோகி உடல் விட்டால் தானே மேல் #1903 தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது போன வியோகி புகலிடம் போந்து பின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே மேல் #1904 தான் இ வகையே புவியோர் நெறி தங்கி ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன் ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே மேல் #1905 சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே மேல் #1906 ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் தான் அற மோன சமாதியுள் தங்கியே தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே மேல் #1907 செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே மேல் #1908 உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள் பன்ன பரனே அருட்குலம் பாலிப்பன் என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே மேல் #1909 எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே மேல் #1910 அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில் நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே மேல் #1911 எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில் அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் எண்_அரு மன்னர் இழப்பார் அரசே மேல் #1912 புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே மேல் #1913 அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால் அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில் சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே மேல் #1914 நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி பவம் அறு நல்குகை பத்மாசனமே மேல் #1915 தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை நல் மலர் சோலை நகரின் நல் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே மேல் #1916 நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே மேல் #1917 பஞ்சலோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே மேல் #1918 நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும் தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே மேல் #1919 ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடுவீரே மேல் #1920 விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறி போனகம் இளநீரும் குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே மேல் #1921 மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும் போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார் மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே மேல் #1922 ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம் காதலில் சோடசம் காண் உபசாரமே மேல் #1923 உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரமாதிகள் மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே மேல் #1924 செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும் செய்திடும் நாத பேத திறனால் ஆறும் செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம் செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே மேல் #1925 வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல் தந்திடு மா மாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே மேல் #1926 விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே மேல் #1927 அந்தமும் ஆதியும் ஆகி பராபரன் வந்த வியாபி எனலாய அ நெறி கந்தம் அது ஆகிய காரண காரியம் தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே மேல் #1928 வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப காய ஐம்பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே மேல் #1929 புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே மேல் #1930 கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில் கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே மேல் #1931 அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி இது வித்திலே உள ஆற்றை உணரார் மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே மேல் #1932 வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே மேல் #1933 அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம் பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே மேல் #1934 இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின் மருவிய விந்து வளரும் காயத்திலே மேல் #1935 காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே மேல் #1936 அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே மேல் #1937 பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே மேல் #1938 தானே அருளால் சிவயோகம் தங்காது தானே அ காமாதி தங்குவோனும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே மேல் #1939 மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே மேல் #1940 ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம் வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும் ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே மேல் #1941 செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே எய்யும் கலை காலம் இந்து பருதி கால் நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே மேல் #1942 விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல் நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப் படும் காதல் மாதின்-பால் பற்று அற விட்டு கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே மேல் #1943 கொண்ட குணனே நலனே நல் கோமளம் பண்டை உருவே பகர் வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே மேல் #1944 விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர் பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே மேல் #1945 பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே மேல் #1946 வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை வித்தினில் வித்தை விது அற உணர்வரேல் மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே மேல் #1947 கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் கருத்தது வித்தாய் காரண காரியம் கருத்து உறுமாறு இவை கற்பனை தானே மேல் #1948 ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் அழியா பிராணன் அதி பலம் சத்தி ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே மேல் #1949 வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று முற்று மதியத்து அமுதை முறைமுறை செற்று உண்பவரே சிவயோகியாரே மேல் #1950 யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே மேல் #1951 அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணும் கனலிடை கட்டி கலந்து எரித்து உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே மேல் #1952 அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரிய செறிவாய் இருந்து சேரவே மாயுமே மேல் #1953 மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே மேல் #1954 காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை காலின்-கண் வந்த கலப்பு அறியாரே மேல் #1955 கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல் நல தக வேண்டில் அ நாரி உதர கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே மேல் #1956 மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும் கோலால் நடத்தி குறிவழியே சென்று பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால் மால் ஆனது மாள மாளும் அ விந்துவே மேல் #1957 விந்து விளையும் விளைவின் பயன் முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே மேல் #1958 விந்து என் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியினாலே நயம் தெரித்து அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி சந்திரன் சார்புற தண் அமுது ஆமே மேல் #1959 அமுத சசி விந்து ஆம் விந்து மாள அமுத புனல் ஓடி அங்கியின் மாள அமுத சிவ போகம் ஆதலால் சித்தி அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே மேல் #1960 யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா போகம் சிவபோகம் போகி நல் போகமா மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே மேல் #1961 மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து காதலினால் விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர் காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே மேல் #1962 சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே மேல் #1963 விந்துவும் நாதமும் மேவ கனல் மூல வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே மேல் #1964 வித்து குற்று உண்பான் விலை அறியாதவன் வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன் வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே மேல் #1965 அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட வன்ன திரு விந்து மாயும் காயத்திலே மேல் #1966 அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே மேல் #1967 நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை சென்று பராசத்தி விந்து சயம் தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே மேல் #1968 தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை வானே உயர் விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே மேல் #1969 விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே மேல் #1970 வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே மேல் #1971 விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி சந்திரனோடே தலைப்படும் ஆயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே மேல் #1972 மனத்தொடு சத்து மனம் செவி அன்ன இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அ காமத்தை நாடிலே மேல் #1973 சத்தமும் சத்த மனமும் மன கருத்து ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு அத்தன் இருப்பிடம் அ இடம் தானே மேல் #1974 உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி கரு முலை மீமிசை கை கீழில் காலாம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே மேல் #1975 செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள் மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம் எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி அம் சுடர் ஆக வணங்கும் தவமே மேல் #1976 பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் புகலவனாய் நின்ற புண்ணிய நாதன் இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே மேல் #1977 ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே மேல் #1978 தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும் தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே மேல் #1979 வலைய முக்கோணம் வட்டம் அறுகோணம் துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம் மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே மேல் #1980 ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில் சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம் கேதமுறும் கேணி சூரியன் எட்டில் சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே மேல் #1981 ஆதித்தனோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற வேதப்பொருளை விளங்குகிலீரே மேல் #1982 பாருக்கு கீழே பகலோன் வரும் வழி யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே மேல் #1983 மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே மேல் #1984 பாரை இடந்து பகலோன் வரும் வழி யாரும் அறியார் அரும் கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ் என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே மேல் #1985 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே மேல் #1986 ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் ஆதித்தனோடே அடங்குகின்றாரே மேல் #1987 உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே மேல் #1988 எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும் எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே மேல் #1989 சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே மேல் #1990 ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார் ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே மேல் #1991 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே மேல் #1992 ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே மேல் #1993 விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து அந்த அபரம் பரம் நாதம் ஆகியே வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே மேல் #1994 உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே மேல் #1995 தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் மூவர் பிரான் என முன்னொரு காலத்து நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே மேல் #1996 பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று கை இருள் நீங்க கலந்து எழுந்தானே மேல் #1997 தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க அனித்திடும் மேலை அரும் கனி ஊறல் கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன் நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே மேல் #1998 நேர் அறிவாக நிரம்பிய பேரொளி போர் அறியாது புவனங்கள் போய் வரும் தேர் அறியாத திசை ஒளியாய் இடும் ஆர் அறிவார் இது நாயகம் ஆமே மேல் #1999 மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும் நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே மேல் #2000 நாபி கண் நாசி நயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே மேல் #2001 அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால் ஒன்றும் இரு சுடராம் அருணோதயம் துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே மேல் #2002 கடம்கடம்-தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே மேல் #2003 தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் தானே அயன் மால் என நின்று தாபிக்கும் தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே மேல் #2004 தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல் அனல் மாருதம் வானகம் சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர் ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே மேல் #2005 உன்னும் அளவில் உணரும் ஒருவனை பன்னும் மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே மேல் #2006 அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால் பின்ன மட அன்னம் பேறு அணுகாதே மேல் #2007 வைகரி ஆதியும் மாயா மலாதியும் பொய் கரி ஆன புருடாதி பேதமும் மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து செய் கரி ஈசன் அனாதியே செய்ததே மேல் #2008 அணுவில் அணுவினை ஆதி பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே மேல் #2009 படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே மேல் #2010 அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணு அற நின்ற கலப்பது உணரார் இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி தணிவு அற நின்றான் சராசரம் தானே மேல் #2011 மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில் கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே மேல் #2012 ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே மேல் #2013 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும் பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே மேல் #2014 மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து ஆய குரு அருளாலே அதில் தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே மேல் #2015 கற்ற பசுக்கள் கதறி திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் மற்றை பசுக்கள் வறள் பசு தானே மேல் #2016 கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே மேல் #2017 சீவன் என சிவன் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவனாயிட்டு இருப்பரே மேல் #2018 குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும் மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் பண விளக்கு ஆகிய பல் தலை நாகம் கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே மேல் #2019 அறிவாய் அறியாமை நீங்கி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே மேல் #2020 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே மேல் #2021 சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார் நவம் ஆன தத்துவம் நாடகிலாரே மேல் #2022 நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார் நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால் நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே மேல் #2023 ஆக மதத்தன ஐந்து களிறு உள ஆக மத தறியோடு அணைகின்றில பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின் யோகு திருந்துதல் ஒன்று அறியோமே மேல் #2024 கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன் திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழி நடவாதே மேல் #2025 புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம் வழி ஒன்பது தானே மேல் #2026 அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே மேல் #2027 ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே மேல் #2028 சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும் சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே மேல் #2029 எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே மேல் #2030 விதியின் பெரு வலி வேலை சூழ் வையம் துதியின் பெரு வலி தொல்வான் உலகம் மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெரு வலி நீர் வலி தானே மேல் #2031 குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம் வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே மேல் #2032 கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் அடக்கலுமுறும் அவன் தானே அமரன் விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே மேல் #2033 அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே மேல் #2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே மேல் #2035 ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே மேல் #2036 பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என் விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம் பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2037 இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே மேல் #2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் வேய்ந்து கொள் மேலை விதி அது தானே மேல் #2039 நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே மேல் #2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள் குன்று விழ அதில் தாங்கலும் ஆமே மேல் #2041 போற்றி இசைத்து புனிதன் திருமேனியை போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே மேல் #2042 தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்றவாறு சிலபல பேசில் வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே மேல் #2043 கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்து-மின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வருடைய புலன்களும் ஐந்தே மேல் #2044 உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் கணு இன்றி வேதாகம நெறி காணான் பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே மேல் #2045 மந்திர தந்திர மா யோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர் சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே மேல் #2046 ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன் காமாதி நீங்கா கலதி கலதிகட்கு ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன் கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே மேல் #2047 கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே மேல் #2048 குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர் முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின் குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே மேல் #2049 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன் தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன் தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே மேல் #2050 தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள் தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம் தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் தவிர வைத்தான் பிறவி துயர் தானே மேல் #2051 கறுத்த இரும்பே கனகம் அது ஆனால் மறித்து இரும்பு ஆகா வகை அது போல குறித்த அப்போதே குரு அருள் பெற்றால் மறித்து பிறவியில் வந்து அணுகானே மேல் #2052 பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம் அற நீக்குவோர் ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே மேல் #2053 நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே மேல் #2054 பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல் குரு பரிசித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே மேல் #2055 தானே என நின்ற சற்குரு சந்நிதி தானே என நின்ற தன்மை வெளிப்படில் தானே தனை பெற வேண்டும் சதுர் பெற ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே மேல் #2056 வரும் வழி போம் வழி மாயா வழியை கருவழி கண்டவர் காணா வழியை பெரும் வழியா நந்தி பேசும் வழியை குரு வழியே சென்று கூடலும் ஆமே மேல் #2057 குரு என்பவனே வேதாகமம் கூறும் பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே மேல் #2058 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல் அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே மேல் #2059 உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்று அறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே மேல் #2060 எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே மேல் #2061 ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே மேல் #2062 அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம் சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே மேல் #2063 ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே மேல் #2064 மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே மேல் #2065 அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே மேல் #2066 ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே மேல் #2067 கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால் கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே மேல் #2068 செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே மேல் #2069 பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே மேல் #2070 வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானம் இலாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே மேல் #2071 காய குழப்பனை காய நல் நாடனை காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்து அறியாரே மேல் #2072 கண்காணியாகவே கை அகத்தே எழும் கண்காணியாக கருத்துள் இருந்திடும் கண்காணியாக கலந்து வழி செய்யும் கண்காணி ஆகிய காதலன் தானே மேல் #2073 கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை என் இது ஈசன் இயல்பு அறியாரே மேல் #2074 காணாத கண்ணில் படலமே கண் ஒளி காணாதவர்கட்கும் காணாத அ ஒளி காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை காணாது கண்டார் களவு ஒழிந்தாரே மேல் #2075 பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே மேல் #2076 பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும் பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார் சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே மேல் #2077 ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே மேல் #2078 உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே மேல் #2079 உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே மேல் #2080 உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் சில ஆணி ஆகிய தேவர் பிரானை தலைவாணி செய்வது தன்னை அறிவதே மேல் #2081 தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர் ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர் தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே மேல் #2082 உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால் தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே மேல் #2083 இந்தியம் அந்த கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே மேல் #2084 வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள் உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே மேல் #2085 போது சடக்கென போகின்றது கண்டும் வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறியகில்லார்களே மேல் #2086 கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி உடம்பினை ஓம்பி உயிரா திரிவர் தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே மேல் #2087 விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன பரம் தன்னை ஓரா பழிமொழியாளர் உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே மேல் #2088 நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும் அன்றி உலகம் அது இது தேவென்று குன்று கையாலே குறைப்பட்டவாறே மேல் #2089 இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே மேல் #2090 பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும் பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே மேல் #2091 ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து தீர வருவது ஓர் காம தொழில் நின்று மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே மேல் #2092 இ பரிசே இளஞாயிறு போல் உரு அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை இ பரிசே கமலத்து உறை ஈசனை மெய் பரிசே வினவாது இருந்தோமே மேல் #2093 கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே மேல் #2094 நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும் துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில் அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே மேல் #2095 மிருகம் மனிதர் மிக்கோர் பறவை ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர் திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே மேல் #2096 நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று நாதியே வைத்து அது நாடுகின்றேனே மேல் #2097 இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வரும் தேன் நுகராது வாய் புகு தேனை அரும் தேனை யாரும் அறியகிலாரே மேல் #2098 கருத்து அறியாது கழிந்தன காலம் அருத்தி உள்ளான் அமராபதி நாதன் ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே மேல் #2099 குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே மேல் #2100 கரை அருகு ஆறா கழனி விளைந்த திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின் நரை உருவா செல்லும் நாள் இலவாமே மேல் #2101 வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து இரவு அறிவானை எழும் சுடர் சோதியை அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று விரவு அறியாமலே மேல் வைத்தவாறே மேல் #2102 மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே மேல் #2103 செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே மேல் #2104 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே மேல் #2105 போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே மேல் #2106 இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் அ காலம் உன்ன அருள் பெறலாமே மேல் #2107 போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள் ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் சாகின்ற போதும் தலைவனை நாடு-மின் ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே மேல் #2108 பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே மேல் #2109 கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள் ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு நீடிய ஈற்று பசு அது ஆமே மேல் #2110 விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம் கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவரோடே மேல் #2111 ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே மேல் #2112 இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே மேல் #2113 மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே மேல் #2114 சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும் கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே மேல் #2115 முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் அத்தகு சோதி அது விரும்பாரே மேல் #2116 நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் பவமத்திலே வந்து பாய்கின்றதல்லால் சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே மேல் #2117 இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே மேல் #2118 பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும் செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே மேல் #2119 சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர் அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடில் கூடலும் ஆமே மேல் #2120 நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி கருமங்களாலே கழிதலில் கண்டு குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே மேல் #2121 ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும் நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே மேல் |
---|