திருமந்திரம்
0.பாயிரம் 1 - 112 |
1.முதல் தந்திரம் 113 - 336 |
2.இரண்டாம் தந்திரம் 337 - 548 |
3.மூன்றாம் தந்திரம் 549 - 883 |
4.நான்காம் தந்திரம் 884 - 1418 |
---|---|---|---|---|
5.ஐந்தாம் தந்திரம் 1419 - 1572 |
6.ஆறாம் தந்திரம் 1573 - 1703 |
7.ஏழாம் தந்திரம் 1704 - 2121 |
8.எட்டாம் தந்திரம் 2122 - 2648 |
9.ஒன்பதாம் தந்திரம் 2649 - 3047 |
@9 ஒன்பதாம் தந்திரம் #2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி குவியும் குருமடம் கண்டவர் தாம் போய் தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே மேல் #2650 இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே மேல் #2651 நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின் கூடும் சிவனது கொய் மலர் சேவடி தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே மேல் #2652 இயம்புவன் ஆசனத்தோடு மலையும் இயம்புவன் சித்த குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத்தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே மேல் #2653 முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம் அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே மேல் #2654 அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும் சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும் செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே மேல் #2655 மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே மேல் #2656 ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூற குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே மேல் #2657 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவு அற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேச ஒண்ணாதே மேல் #2658 ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன் வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் காயன நந்தியை காண என் கண் பெற்றேன் சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே மேல் #2659 கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே மேல் #2660 அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே மேல் #2661 தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் ஆன்ற அறிவும் அறி நனவாதிகள் மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே மேல் #2662 சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம் குரு பற்றே மேல் #2663 மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே மேல் #2664 தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும் தான் ஆம் பறவை வனம் என தக்கன தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே மேல் #2665 மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே மேல் #2666 தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை பல படு பாசம் அறுத்து அறுத்திட்டு நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில் தலைப்படல் ஆகும் தருமமும் தானே மேல் #2667 நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை சுனைக்குள் விளை மலர் சோதியினானை தினை பிளந்து அன்ன சிறுமையரேனும் கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே மேல் #2668 தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே மேல் #2669 நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே மேல் #2670 வந்த மரகத மாணிக்க ரேகை போல் சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம் இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தர சோதியுள் சோதியும் ஆமே மேல் #2671 உண்ணும் வாயும் உடலும் உயிருமாய் கண்ணும் மா யோக கடவுள் இருப்பது மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே மேல் #2672 பரசு பதி என்று பார் முழுது எல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே மேல் #2673 அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே மேல் #2674 கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின் நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான் தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம் போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே மேல் #2675 தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை பாலித்த சூக்கும மேலை சொரூப பெண் ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் மேலை பிரணவம் வேதாந்த வீதியே மேல் #2676 ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே மேல் #2677 ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே மேல் #2678 வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே மேல் #2679 மலையும் மனோபவம் அருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும் நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே மேல் #2680 சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில் கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே மேல் #2681 ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன் இருந்தானே மேல் #2682 புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே மேல் #2683 விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன் துளங்கு ஒளி பெற்றன சோதி அருள வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே மேல் #2684 இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே மேல் #2685 மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே மேல் #2686 மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் உன்னியவாறு ஒளி ஒத்தது தானே மேல் #2687 விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும் உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே மேல் #2688 விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும் துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும் களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே மேல் #2689 இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன் துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே மேல் #2690 உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே மேல் #2691 விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே மேல் #2692 போது கரும் குழல் போனவர் தூது இடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி நீதியின் நல் இருள் நீக்கியவாறே மேல் #2693 உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல் கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே மேல் #2694 சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே படருறு காட்சி பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞான துறவியன் ஆமே மேல் #2695 ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன் அளி பவள செம்பொன் ஆதி பிரானும் களி பவளத்தினன் கார் இருள் நீங்கி ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே மேல் #2696 ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார் பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே மேல் #2697 தானே இருக்கும் அவற்றில் தலைவனும் தானே இருக்கும் அவன் என நண்ணிடும் வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து பானாய் இருக்க பரவலும் ஆமே மேல் #2698 ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே மேல் #2699 அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்தி-தன் நாமமே மேல் #2700 அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன் சிகராதி தான் சிவவேதமே கோண நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே மேல் #2701 வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல் ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே மேல் #2702 கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும் அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே மேல் #2703 ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும் வாயுற ஓதி வழுத்தலும் ஆமே மேல் #2704 தெள்ளமுது ஊற சிவாயநம என்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர் துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே மேல் #2705 குருவழி ஆய குணங்களின் நின்று கருவழி ஆய கணக்கை அறுக்க வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே மேல் #2706 வெறிக்க வினை துயர் வந்திடும்-போது செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே மேல் #2707 நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று மஞ்சு தவழும் வடவரை மீது உறை அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே மேல் #2708 பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் பரா முற்றும் கீழொடு பல்வகையாலும் அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே மேல் #2709 எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகு மனத்தராய் தெளிய ஓதி சிவாயநம என்னும் குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே மேல் #2710 சிவன் சத்தி சீவன் செறு மல மாயை அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே மேல் #2711 சிவனருள் ஆய சிவன் திருநாமம் சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன் முதலாக சிறந்து நிரோதம் பவம் அது அகன்று பரசிவன் ஆமே மேல் #2712 ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால் தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே மேல் #2713 நமாதி நனாதி திரோதாயி ஆகி தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே மேல் #2714 அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும் அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே மேல் #2715 சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் சிவசிவ ஆகும் திருவருளாமே மேல் #2716 சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிட தீவினை மாளும் சிவசிவ என்றிட தேவரும் ஆவர் சிவசிவ என்ன சிவகதி தானே மேல் #2717 நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ மேல் #2718 சிவாயநம என சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமை அது ஆக்கி சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே மேல் #2719 செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே மேல் #2720 அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே மேல் #2721 பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே மேல் #2722 எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள்-தன் விளையாட்டு அதே மேல் #2723 சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை பொன் பதி கூத்தனை பொன் தில்லை கூத்தனை அற்புத கூத்தனை யார் அறிவாரே மேல் #2724 தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல் தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே மேல் #2725 ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே மேல் #2726 ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி ஆகும் சமய களியார் பரமும் கருத்துறை அந்த தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே மேல் #2727 ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே மேல் #2728 பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே மேல் #2729 வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே மேல் #2730 பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே மேல் #2731 தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே மேல் #2732 அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல் கண்டம் கரியான் கருணை திருவுரு கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே மேல் #2733 கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை வடமுற்ற மா வனம் மன்னவன் தானே மேல் #2734 பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே மேல் #2735 அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில் சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே மேல் #2736 ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே மேல் #2737 சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும் சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே மேல் #2738 மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே மேல் #2739 தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில் அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே மேல் #2740 அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர் அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே மேல் #2741 அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன் படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே மேல் #2742 உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே மேல் #2743 மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே மேல் #2744 விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள் அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே மேல் #2745 தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள் வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே மேல் #2746 காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே மேல் #2747 மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இ வானின் இலங்கை குறியுறும் சாரும் திலை வன தண் மா மலையத்தூடு ஏறும் சுழுனை இவை சிவபூமியே மேல் #2748 பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம் ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில் திரு அம்பலம் ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே மேல் #2749 அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே மேல் #2750 குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே மேல் #2751 ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே மேல் #2752 கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே மேல் #2753 மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமோடு அந்த நடானந்த நாற்பத பாதியோடு ஆடி பரன் இரு பாதமே மேல் #2754 இடை பிங்கலை இம வானோடு இலங்கை நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் திலை வனம் கைகண்ட மூலம் படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே மேல் #2755 ஈறு ஆன கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் பேறு ஆன வேதாகமமே பிறத்தலான் மாறாத தென் திசை வையகம் சுத்தமே மேல் #2756 நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் தீது அற்ற தேவாதி தேவர் பிரானே மேல் #2757 தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே மேல் #2758 ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் கூறு சமய குருபரன் நான் என்றும் தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே மேல் #2759 அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே மேல் #2760 ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே மேல் #2761 இருதயம்-தன்னில் எழுந்த பிராணன் கரசரணாதி கலக்கும் படியே அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே மேல் #2762 குரு உரு அன்றி குனிக்கும் உருவம் அருவுரு ஆவதும் அந்த அருவே திரிபுரை ஆகி திகழ் தருவாளும் உரு அருவு ஆகும் உமை அவள் தானே மேல் #2763 திரு வழி ஆவது சிற்றம்பலத்தே குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அ வழி தானே மேல் #2764 நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து ஆடும் இடம் திரு அம்பலம் தானே மேல் #2765 வளி மேக மின் வில்லு வானக ஓசை தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல் களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே மேல் #2766 தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயை மா மாயை கடந்து நின்றார் காண நாயகன் நின்று நடம் செய்யுமாறே மேல் #2767 கூத்தன் கலந்திடும் கோல்வளையாளொடும் கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே மேல் #2768 இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே மேல் #2769 சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே மேல் #2770 நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம் பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே மேல் #2771 அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே மேல் #2772 மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே மேல் #2773 அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி அண்ட நடம் செயும் ஆலயம் தானே மேல் #2774 ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே மேல் #2775 அம்பலம் ஆவது அகில சராசரம் அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே மேல் #2776 கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள் பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே மேல் #2777 அண்டத்தில் தேவர்கள் அப்பாலை தேவர்கள் தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் புண்டரிக பத பொன்னம்பல கூத்து கண்டு சேவித்து கதி பெறுவார்களே மேல் #2778 புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல் களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம் அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே மேல் #2779 திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே மேல் #2780 அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம் தங்கு பயம் தரு நீலமும் உடன் மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே மேல் #2781 ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே மேல் #2782 ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே மேல் #2783 ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே மேல் #2784 மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே மேல் #2785 தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் காமணி ஞாலம் கடந்து நின்றானே மேல் #2786 புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே மேல் #2787 ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின் ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே மேல் #2788 ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே மேல் #2789 தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட வைத்த சராசரம் ஆட மறை ஆட அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே மேல் #2790 இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உருபர ரூபமாய் திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே மேல் #2791 சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில் அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே மேல் #2792 நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து நாத பிரமம் சிவநடம் ஆமே மேல் #2793 சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும் தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே மேல் #2794 கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள் வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே மேல் #2795 நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் நேதத்துவமும் அவற்றொடு நேதியும் பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே மேல் #2796 ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே மேல் #2797 திருந்து நல் சீ என்று உதறிய கையும் அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும் பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும் திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே மேல் #2798 மருவம் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமல பதமும் உருவில் சிவாயநம என ஓதே மேல் #2799 அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி-தன்னில் அறையில் சங்காரம் அரனுற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே மேல் #2800 தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே மேல் #2801 நந்தியை எந்தையை ஞான தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அ பர சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே மேல் #2802 சீய குரு நந்தி திரு அம்பலத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை ஆயுறு மேனி அணை புகலாமே மேல் #2803 தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள் ஆனால் அரன் அடி நேயத்ததாமே மேல் #2804 உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை உள்ளத்துளே அங்கியாய ஒருவனை உள்ளத்துளே நீதியாய ஒருவனை உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே மேல் #2805 பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால் குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன் பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் அருநிலையாய் நின்ற ஆதி பிரானே மேல் #2806 அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியை குலைத்தது தானே மேல் #2807 பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே மேல் #2808 அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே மேல் #2809 ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே மேல் #2810 உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது குயில் கொண்ட பேதை குலாவி உலாவி வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே மேல் #2811 நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி நணுகிய மின் ஒளி சோதி வெளியை பணியின் அமுதம் பருகலும் ஆமே மேல் #2812 புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே மேல் #2813 மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே மேல் #2814 கரி அட்ட கையன் கபாலம் கையேந்தி எரியும் இளம்பிறை சூடும் எம்மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே மேல் #2815 மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே மேல் #2816 விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே மேல் #2817 தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின் தத்துவன் அங்கே தலைப்படும் தானே மேல் #2818 விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும் பசும்பொன் திகழும் படர் சடை மீதே குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே மேல் #2819 முத்தின் வயிரத்தின் முந்நீர் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம் ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே மேல் #2820 நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே மேல் #2821 ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே மேல் #2822 உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே மேல் #2823 காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும் காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும் பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே மேல் #2824 ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே மேல் #2825 எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே மேல் #2826 தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே மேல் #2827 மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே மேல் #2828 சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால் உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வரு குரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே மேல் #2829 உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவ சிவம் என்ற மா முப்பதத்தின் சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே மேல் #2830 நினையும் அளவின் நெகிழ வணங்கி புனையில் அவனை பொதியலும் ஆகும் எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித்தனனே மேல் #2831 பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபட உள் புக சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே மேல் #2832 அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனி மொழி மாதர் துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே மேல் #2833 மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே மேல் #2834 சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே மேல் #2835 பரம குரவன் பரம் எங்கும் ஆகி திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்து நின்றானே மேல் #2836 குலைக்கின்ற நீரில் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே மேல் #2837 அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை பொங்கி நின்றான் புவனாபதி தானே மேல் #2838 சமைய சுவடும் தனையறியாமல் கமை அற்ற காமாதி காரணம் எட்டும் திமிர செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே மேல் #2839 மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் சேய சிவம் மு துரியத்து சீர் பெற ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே மேல் #2840 உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் அரு அன்றியே நின்ற மாய பிரானை குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே மேல் #2841 உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே மேல் #2842 பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை பரஞ்சோதி உண்ணான் படியப்படிய பரஞ்சோதி-தன்னை பறைய கண்டேனே மேல் #2843 சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கு மதித்த சொரூப குரவன் சுகோதயம் தானே மேல் #2844 உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரை அற்ற சத்தியாதி காணில் அகார மருவுற்று உகாரம் மகாரமது ஆக உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே மேல் #2845 தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லா பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே மேல் #2846 ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே மேல் #2847 செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என் மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் வித்தகன் நந்தி விதிவழி அல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே மேல் #2848 தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே மேல் #2849 ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே மேல் #2850 வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே மேல் #2851 ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என் கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த ஞானத்து உழவினை நான் உழுவேனே மேல் #2852 கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அறிவார்க்கே மேல் #2853 சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே மேல் #2854 வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2855 பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய் தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா அரனாய் உலகில் அருள் புரிந்தானே மேல் #2856 ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே மேல் #2857 உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே மேல் #2858 துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு முன்னி அவர் தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே மேல் #2859 மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும் என்னுற்று அறிவான் என் விழித்தானே மேல் #2860 சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி சுத்த பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேரொளியே மேல் #2861 பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும் அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே மேல் #2862 முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே மேல் #2863 துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே மேல் #2864 ஓதிய முத்தி அடைவே உயிர் பரம் பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே மேல் #2865 பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள் கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல் சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே மேல் #2866 காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய் ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாய கவற்றின் மறைப்பு அறியேனே மேல் #2867 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே மேல் #2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனை உள ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே மேல் #2869 வழுதலை வித்திட பாகல் முளைத்தது புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள் முழுதும் பழுத்தது வாழை கனியே மேல் #2870 ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம் பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே மேல் #2871 பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு வெள்ள செய் ஆகி விளைந்தது தானே மேல் #2872 மூவணை ஏரும் உழுவது முக்காணி தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும் நாவணை கோலி நடுவில் செறு உழார் கால் அணை கோலி களர் உழுவாரே மேல் #2873 ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே மேல் #2874 பட்டி பசுக்கள் இருபத்துநால் உள குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள குட்டி பசுக்கள் குட பால் சொரியினும் பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே மேல் #2875 ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும் காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து மாற்று பசுக்கள் வரவு அறியோமே மேல் #2876 தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு தட்டான் அதனை தகைந்துகொண்டானே மேல் #2877 அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி வரிக்கின்ற நல்லான் கறவையை பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே மேல் #2878 இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே மேல் #2879 விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது விளைந்து கிடந்தது மேலைக்கு காதம் விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு விளைந்து கிடந்தது மேவு முக்காதமே மேல் #2880 களர் உழுவார்கள் கருத்தை அறியோம் களர் உழுவார்கள் கருதலும் இல்லை களர் உழுவார்கள் களரின் முளைத்த வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே மேல் #2881 கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே மேல் #2882 மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள குலை மேல் இருந்த கொழும் கனி வீழ உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே மேல் #2883 பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே மேல் #2884 ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன மூவா கடா விடின் மூட்டுகின்றாரே மேல் #2885 எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவை பிறவாத வண்டு மணம் உண்டவாறே மேல் #2886 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும் கூகின்ற நாவலின் கூழை தரும் கனி ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே மேல் #2887 மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே மேல் #2888 பத்து பரும் புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே மேல் #2889 இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில் இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே மேல் #2890 ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்ப நின்றாரே மேல் #2891 கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையை கூகை நணுகல் உறுதலும் கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே மேல் #2892 குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் புலைக்கு பிறந்தவை போகின்றவாறே மேல் #2893 காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் மூடு புகா விடின் மூவணை ஆமே மேல் #2894 கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல் ஆறை குழியில் அழுந்துகின்றாரே மேல் #2895 துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல் விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும் வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான் ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே மேல் #2896 பருந்தும் கிளியும் படு பறை கொட்ட திருந்திய மாதர் திருமணப்பட்டார் பெருந்தவ பூதம் பெறலுருவாகும் இருந்திய பேற்றினில் இன்புறுவாரே மேல் #2897 கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே மேல் #2898 இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே மேல் #2899 அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே மேல் #2900 கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம் காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே மேல் #2901 கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே மேல் #2902 பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும் கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே மேல் #2903 கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே மேல் #2904 தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே மேல் #2905 ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன நூறு பறவை நுனி கொம்பின் மேலன ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் மாறுதல் இன்றி மனை புகல் ஆமே மேல் #2906 கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டன பூமி மருவி வந்து ஊறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள் ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே மேல் #2907 ஏழு வளைகடல் எட்டு குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலம் தன்மை அது கண்டு வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே மேல் #2908 ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர் கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள் மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே மேல் #2909 கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே மேல் #2910 கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர் முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே மேல் #2911 கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார் பாரை கிடக்க படிகின்றவாறே மேல் #2912 கொல்லை முக்காதமும் காடு அரை காதமும் எல்லை மயங்கி கிடந்த இரு நெறி எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே மேல் #2913 உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து எழு மழை பெய்யாது இருநில செவ்வி தழுவி வினை சென்று தான் பயவாது வழுவாது போவன் வளர்சடையோனே மேல் #2914 பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ மதுங்கிய வார் களி ஆரமுது ஊற பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே மேல் #2915 தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே மேல் #2916 முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே மேல் #2917 அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே மேல் #2918 பன்றியும் பாம்பும் பசு முசு வானரம் தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின் குன்றி நிறையை குறைகின்றவாறே மேல் #2919 மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே மேல் #2920 நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம் யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை கூரு மழை பொழியாது பொழி புனல் தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே மேல் #2921 கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே மேல் #2922 வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன வாழைக்கு சூரை வலிது வலிது என்பர் வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே மேல் #2923 நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே மேல் #2924 தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும் அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2925 குடைவிட்டு போந்தது கோயில் எருமை படை கண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே மேல் #2926 போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும் ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே மேல் #2927 பாசி படர்ந்து கிடந்த குளத்திடை கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் தூசி மறவன் துணை வழி எய்திட பாசம் கிடந்து பதைக்கின்றவாறே மேல் #2928 கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே மேல் #2929 வீணையும் தண்டும் விரவி இசை முரல் தாணுவும் மேவி தகுதலை பெய்தது வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம் காணியும் அங்கே கலக்கின்றவாறே மேல் #2930 கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே மேல் #2931 போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது மாதர் இருந்தோர் மண்டலம் தானே மேல் #2932 கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும் ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே மேல் #2933 தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால் நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும் மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே மேல் #2934 புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே மேல் #2935 தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை ஆணி கலங்கில் அது இது ஆமே மேல் #2936 நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம் மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே மேல் #2937 காட்டும் குறியும் கடந்தவர் காரணம் ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே மேல் #2938 உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே மேல் #2939 மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன் பிறப்பினை நீங்கிய பேரருளாளன் சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே மேல் #2940 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய துரியம் அதில் மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரை இல் அநுபூதிகத்து உள்ளானே மேல் #2941 உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் பொரு_இலி பூத படை உடையாளி மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே மேல் #2942 கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த தொண்டர் முகந்த துறை அறியோமே மேல் #2943 தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல நிட்களம் அல்ல சகள நிலை அல்ல அற்புதம் ஆகி அநுபோக காமம் போல் கற்பனை இன்றி கலந்து நின்றானே மேல் #2944 முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே மேல் #2945 அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே மேல் #2946 கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம் பல தானே மேல் #2947 நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே மேல் #2948 விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து பதறு படாதே பழமறை பார்த்து கதறிய பாழை கடந்து அந்த கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே மேல் #2949 வாடா மலர் புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற சேடார் கமல செழும் சுடருள் சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே மேல் #2950 அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் பொதுக்கென காமம் புலப்படுமா போல் சதுக்கென்று வேறே சமைந்தாரை காண மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே மேல் #2951 தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே மேல் #2952 இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல் மனம் உற்று நின்றேனே மேல் #2953 ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே மேல் #2954 தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது தான் அவன் ஆன பின் ஆரை நினைவது காமனை வென்ற கண்ணாரை உகப்பது தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே மேல் #2955 உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு புரை அற்று இருந்தான் புரிசடையோனே மேல் #2956 மன மாயை மாயை இ மாயை மயக்க மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே மேல் #2957 மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே மேல் #2958 ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன் அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே மேல் #2959 ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும் சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே மேல் #2960 ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவது அல்லால் இனி யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே மேல் #2961 பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில் மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே மேல் #2962 ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம் தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே மேல் #2963 சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே மேல் #2964 பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே மேல் #2965 அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து அன்னையும் அத்தனை யான் புரந்தேனே மேல் #2966 கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும் எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே மேல் #2967 தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே மேல் #2968 நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே மேல் #2969 சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர் சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே மேல் #2970 நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும் வினை பற்று அறுக்கும் விமலனை தேடி நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே மேல் #2971 சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த தவ பெருமான் என்று தான் வந்து நின்றான் அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் பவ பெருமானை பணிந்து நின்றேனே மேல் #2972 பணிந்து நின்றேன் பரமாதி பதியை துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே மேல் #2973 என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே மேல் #2974 பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம் வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே மேல் #2975 சிவன் வந்து தேவர் குழாமுடன் கூட பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான் அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே மேல் #2976 கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில் அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின் கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே மேல் #2977 உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால் கைவளம் இன்றி கரு கடந்தேனே மேல் #2978 மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி மாண்டான் ஒருவன் கைவந்தது தானே மேல் #2979 ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் வேறே இருக்கும் விழுப்பொருள் தானே மேல் #2980 அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என் பொன் மணியை இறைவனை ஈசனை தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே மேல் #2981 மனம் விரிந்து குவிந்தது மா தவம் மனம் விரிந்து குவிந்தது வாயுவும் மனம் விரிந்து குவிந்தது மன் உயிர் மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே மேல் #2982 மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி போயின நாடு அறியாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே மேல் #2983 மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தை பன்னினர் என்றே பாடு அறிவீரே மேல் #2984 முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர் பித்தன் இவன் என்று பேசுகின்றாரே மேல் #2985 புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன் புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம் புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே மேல் #2986 பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன் வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன் கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே மேல் #2987 நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே மேல் #2988 போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே மேல் #2989 நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்ட பின் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே மேல் #2990 வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள் இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது அந்தர வானத்தின் அப்புறம் ஆமே மேல் #2991 மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே மேல் #2992 மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே மேல் #2993 அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே மேல் #2994 வள்ளல் தலைவனை வான நல் நாடனை வெள்ள புனல் சடை வேத முதல்வனை கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே மேல் #2995 ஆளும் மலர் பதம் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே மேல் #2996 விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம் திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும் வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே மேல் #2997 வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில் தானகம் இல்லா தனி ஆகும் போதகன் கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் பானக சோதியை பற்றி நின்றேனே மேல் #2998 விதி அது மேலை அமரர் உறையும் பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும் பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே மேல் #2999 மேலது வானவர் கீழது மாதவர் தான் இடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ் சடை ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே மேல் #3000 சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே மேல் #3001 உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும் நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே மேல் #3002 பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன் பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன் பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே மேல் #3003 அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும் பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள் தந்த உலகு எங்கும் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே மேல் #3004 முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும் அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே மேல் #3005 ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் ஆதி பிரான் நடு ஆகி நின்றானே மேல் #3006 அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன் பிண்டம் கடந்த பிறவி சிறுமையன் தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும் தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே மேல் #3007 உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன் பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே மேல் #3008 பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும் பராபரனாய் இ அகல் இடம் தாங்கி தரா பரனாய் நின்ற தன்மை உணரார் நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே மேல் #3009 போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் காற்றது ஈசன் கலந்து நின்றானே மேல் #3010 திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின் மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே மேல் #3011 அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி இவன்தான் என நின்று எளியனும் அல்லன் சிவன்தான் பலபல சீவனுமாகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே மேல் #3012 கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவனை நாடு-மின் தத்துவ நாதன் விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன் நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே மேல் #3013 படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே மேல் #3014 ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் வாச மலர் போல் மருவி நின்றானே மேல் #3015 இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே மேல் #3016 உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும் வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம் அள்ளல் கடலை அறுத்து நின்றானே மேல் #3017 மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும் கூறுதல் செய்து குரை கழல் நாடுவர் ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும் வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே மேல் #3018 விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன் கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன் எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே மேல் #3019 உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல் நித்தில சோதியன் நீல கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே மேல் #3020 நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன் அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம் மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம் புறம் பல காணினும் போற்றகிலாரே மேல் #3021 இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன் கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு எங்கும் நின்றான் மழை போல் இறை தானே மேல் #3022 உணர்வதுவாயுமே உத்தமமாயும் உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை புணர்வதுவாயும் புல்லியதாயும் உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே மேல் #3023 தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன் தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன் தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் தன் வலியாலே தடம் கடல் ஆமே மேல் #3024 ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தினின் உள்ளே மேல் #3025 பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே மேல் #3026 ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனது எய்தும் சாயும் தனது வியாபகம் தானே மேல் #3027 நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே மேல் #3028 கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை கடலின் மலி திரை காணலும் ஆமே மேல் #3029 பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே மேல் #3030 உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே மேல் #3031 பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவனாய் நின்ற மாதவன் தானே மேல் #3032 தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும் ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்றுகின்றானே மேல் #3033 நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன் நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி போக்கும் வரவும் புணர வல்லானே மேல் #3034 செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே மேல் #3035 உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே மேல் #3036 புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்து நின்றானே மேல் #3037 விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன் மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர் கண்ணவன் ஆகி கலந்து நின்றானே மேல் #3038 நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் நின்றனன் தானே வளம் கனி ஆயே மேல் #3039 புவனாபதி மிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர் பெரும் பாகன் அவனே அரும் பல சீவனும் ஆகும் அவனே இறை என மாலுற்றவாறே மேல் #3040 உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும் மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே மேல் #3041 எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி பண்ணும் திறனும் படைத்த பரமனை கண்ணில் கவரும் கருத்தில் அது இது உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே மேல் #3042 இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம் உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம் கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே திரு கொன்றை வைத்த செழும் சடையானே மேல் #3043 பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன் செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே மேல் #3044 அது அறிவு ஆனவன் ஆதி புராணன் எது அறியா வகை நின்றவன் ஈசன் பொது அது ஆன புவனங்கள் எட்டும் இது அறிவான் நந்தி எங்கள் பிரானே மேல் #3045 நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை ஊரும் சகலன் உலப்பு_இலி தானே மேல் #3046 மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே மேல் #3047 வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே மேல் |
---|