விளக்கம்
1. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில் அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.
2. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
துரோணம் (4)
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே - 1.தேவப்பெயர்:1 74/1
சம்பரம் துரோணம் வெய்ய சரபம் எண்கால்புள் பேராம் - 3.விலங்கின்பெயர்:3 53/2
விம்பமே தொண்டை கொவ்வை பசிரி பாவிரி துரோணம்
தும்பையே அலாபு மற்றை சுரை நூழில் கொடிக்கொத்தான் ஆம் - 4.மரப்பெயர்:4 35/1,2
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு - 7.செயற்கைவடிவ:7 3/2
3. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.